ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

ஒருவரைபற்றி எந்தவொரு சொற்களை கூறுவதற்குமுன் சரியாகத் தேர்ந்தெடுத்திடுக

 

முன்னொரு காலத்தில், வயதானவர்ஒரு வர் தனது பக்கத்து வீட்டுக்கார இளைஞன ஒரு திருடன் என்றுகூறி அந்த தவறான வதந்தியை அந்த ஊர்முழுவதும் பரப்பினார். இதனால், அந்த பக்கத்து வீட்டுக்கார இளைஞன் கைது செய்யப்பட்டார். பலநாட்கள் கழித்து அந்த இளைஞன் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்ட விடுதலையான பிறகு, அந்த இளைஞன் தனது வீட்டிற்கு திரும்பி நடந்து வந்துகொண்டிருக்கும்போது அவ்வதந்தியானது தனக்கு மிகஅவமானமாக இருப்பதாக உணர்ந்தார். தனால் அந்த இளைஞன் தன்னை அந்த பக்கத்துவீட்டுகார முதியவர் தவறாக குற்றம் சாட்டி அந்த ஊர்முழுவதும் வதந்தி பரப்பியதற்காக அம்முதியவர் மீது வழக்குத் தொடர்ந்தார்.
நீதிமன்றத்தில் இது குறித்த விசாரணையின்போது நீதிபதியிடம் அந்த முதியவர் , “அவ்வதந்திகள் வெறும் கருத்துகள் மட்டுமே , அதனால் யாருக்கும் தீங்கு எதுவும் விளைவிக்கவில்லை ..” என்று கூறினார். தொர்ந்து இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப் படுவதற்கு முன்பு, நீதிபதி அந்த முதியவரிடம், “ந்த இளைஞரைப் பற்றி நீங்கள் கூறிய கருத்துகள் வதந்திகள் எல்லாவற்றையும் இந்த முழுதாளில் எழுதுங்கள் . அவற்றைசிறுசிறு காகித துண்டுகளாக வெட்டி வீட்டிற்கு செல்லும் வழியில், அக்காகித துண்டுகளை தரையில் எறிந்துகொண்டேசெல்லுகள். நாளை, நீதிமன்றத்திற்கு மீண்டும் வாருங்கள் ”. என உத்திரவிட்டார்.
அடுத்த நாள், நீதிபதி அந்த முதியவரிடம், “ முதலில் நீங்கள் மீண்டும் உங்கள் வீட்டிற்கு செல்க அவ்வாறு செல்லும் வழியில் நேற்று எறிந்து சென்ற காகிதத் துண்டுகள் அனைத்தையும் சேகரித்து கொண்டுவருக ”.என உத்திரவிட்டார் .உடன் அந்த முதியவர், “என்னால் எவ்வாறு நேற்று எறிந்து சென்ற அந்த காகிததுண்டுகள் அனைத்தையும் தேடிபிடித்து சேகரித்து கொண்டுவரமுடியும்! வையனைத்தும் காற்றில் அடித்து சென்று காணாமல் போயிருக்குமல்லவா , அவற்றை எவ்வாறு எங்கேயிருக்கின்றது என நான் கண்டுபிடிப்பது ”. என பதில் கூறினார்
அதன் பின்னர் நீதிபதி , “அதேபோல்தான் நீங்கள் அந்த இளைஞனை பற்றிய தவறாக வதந்தியாக கூறிய கருத்துக்கள் ஒரு மனிதனின் கவுரவத்தை சரிசெய்ய முடியாத அளவிற்க்கு அழித்திருக்கக்கூடும். அல்லவா என கோரியபோது வயதானவர் தனது தவறை உணர்ந்து நீதிமன்றத்தில் மன்னிப்புகேட்டார்.
நீதி: உண்மை அல்லது உண்மை தெரியாமல் யாரையும் கேவலப்படுத்தவோ, குறை சொல்லவோ வேண்டாம். நம்முடைய சொற்கள் எந்தவொரு தவறும் இல்லாத நல்லவர் ஒருவரின் நற்பெயரை அவை அழிக்கக்கூடும்.


கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...