வியாழன், 2 மே, 2013

உலகை மாற்றியமைப்பதற்கு முன்பு நம்மை மாற்றிகொள்


முன்னொரு காலத்தில் அரசன் ஒருவன் தன்னுடைய நாடு நகரங்கள் அனைத்தையும் சுற்றிபார்க்க விரும்பினார். ஆனால் தற்போது இருப்பது போன்று அந்த காலத்தில் போக்குவரத்து வசதி இல்லை. அதனால் கால்நடையாக தன்னுடைய அமைச்சர்கள் படைத்தலைவர்களுடன் மிக நீண்ட சுற்றுபயனம் செய்து பார்வையிட்டு திரும்பினார்.

அப்போது நாட்டில்இருந்த சாலைகள் அனைத்தும் கரடுமுரடாக கல்லும் முல்லும் கலந்து இருந்ததால் அவருடைய கால்களில் சிறுசிறு காயம் ஏற்பட்டு வலி மிகஅதிகஇருந்தது .என்ன இது நம்முடைய நாட்டின் சாலைகள் அனைத்தும் கரடுமுரடாக நடப்பவரின் கால்களை காயம் ஏற்படுத்தகின்றன அதனால் நம்முடைய நாட்டில் உள்ள சாலைகளின் மீது மாடுகளின் தோலை பரப்பிமூடி மிருதுவாக்குங்கள் அதற்காக எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என உத்தரவிட்டார்

இதனால் ஆயிரகணக்கான மாடுகளை கொல்லவேண்டியநிலை ஏற்படும் அதனால் விவசாயிகளுக்கு விவசாயத்தில் உதவிபுரிவதற்கான மாடுகளும் நாம் அனைவரும் குடிப்பதற்கான பாலும் கிடைக்காது அதுமட்டுமல்லாமல் இதனால் ஏராளமான செலவாகும் அதற்கு பதிலாக மிகச்சிறிய துண்டு மாட்டின் தோலைகொண்டு அரசனுக்கு தேவையான காலணிகளை செய்து நாட்டினை சுற்றிபார்க்க செல்லும்போது கால்களில் அணிந்துகொண்டு சென்றால் கால்களில் சிறு சிறு காயமும் ஏற்படாது கால்வலியும் வராது என அவருடைய அமைச்சர் ஆலோசனை கூறினார் அப்படியா உடனடியாக அவ்வாறே செய்என மாற்றிஉத்திரவிட்டார்

ஆம் இந்த உலகை மகிழ்வோடு இருப்பதற்காக மாற்றியமைக்க முயற்சிக்குமுன் நாம் மகிழ்வோடு இருப்பதற்கு முயற்சியினை செய் அதாவது உலகை மாற்றியமைப்பதற்கு முன்பு நம்மை மாற்றிகொள் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்க

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...