புதன், 1 மே, 2013

குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதுதான் நன்று


ஒரு நகரத்தில் புதியதாக திருமணம் ஆன இளம் தம்பதியர் மிகஅமைதியாகவும் மகிழ்வாகவும் வாழ்ந்து வந்தனர் இதனை கண்ணுற்ற அக்கம் பக்கம் இருந்தவர்களில் ஒருவர் இந்த தம்பதியரில் இளம்மணைவிக்கு மட்டும் சிறந்த ஆலோசனை ஒன்றை கூறுவதாகவும் அதனை பின்பற்றினால் அவர்களின் மனவாழ்க்கை மேலும் சிறப்பாக அமையும் எனவும் கூறினார்

அந்த இளமனைவியும் உடன் அந்த ஆலோசனையை நடைமுறைபடுத்த விழைந்தார் அதனால் ஒருநாள் தம்பதியர்கள் இருவரும் மனமகிழ்வோடு உரையாடிக் கொண்டிருக்கும் போது பக்கத்து வீட்டு தோழி கூறிய ஆலோசனைபடி ஒவ்வொருவரும் தன்னுடைய வாழ்க்கை துனையினுடைய நடவடிக்கைகளில் மற்றவரின் மனம் புன்படுத்துமாறு உள்ள செயல்களை மட்டும் பட்டியலிட்டு அதனை மற்றவருக்கு படித்து காண்பத்தபின் அதனை திருத்தி சரியாக மாற்றியமைத்து கொண்டால் இன்னும் மனமகிழ்வோடு பிரச்சினையே இல்லாமல் அமையும் என முடிவுசெய்து அந்த இளம் தம்பதியர்கள் இருவரும் தனித்தனி அறைக்கு சென்று மற்றவர் நடவடிக்கையில் தமக்கு பிடிக்காதவை எவையெவையென பட்டியலிட முனைந்தனர்

ஓரிரு மணிநரம் கழித்து இருவரும் சந்தித்து கொண்டனர் முதலில் இளம் மனைவி தன்னுடைய இளம் கணவரின் நடவடிக்கையில் தனக்கு பிடிக்காதவைகள் என மூன்று பக்கம் எழுதியருந்ததை ஒவ்வொன்றாக படிக்க படிக்க அடடா நம்முடைய நடவடிக்கைகளில் இவ்வளவு நடவடிக்கைகள் தம்முடைய இளம் மனைவிக்கு மனவருத்தை தருமாறு உள்ளனவா என கண்ணீர்விட்டு அழுத பின் சரிசரி இனிமேல் அவைகளை தவிர்த்து சரியாக கவணமாக உனக்கு மனவருத்தம் இல்லாமல் என்னுடைய நடவடிக்கையை பார்த்து கொள்கிறேன் என உறுதிகூறினார்

உடன் இளம் மனைவியும் நிரம்ப சரி இனி நீங்கள் எழுதிய பட்டியலை படியுங்கள் என கோரியபோது இளம் தம்பதியரில் கணவனானவர் எனக்கு மனவருத்தம் தருமாறான செயல்கள் எதுவுமே உன்னிடம் இல்லை அனைத்துமே எனக்கு பிடித்தமான நடவடிக்கை களைத்தான் நீ செய்கின்றாய் அதனால் பட்டியல் தயார் செய்யவேண்டிய தேவை எதுவுமே இல்லை என கூறினார்

குடும்ப தம்பதியரில் ஒருவருக்கொருவர் மற்றவரின் குற்றம் குறைகளை பூதாகரமாக பெரிதுபடுத்தமால் விட்டுகொடுத்து பெருந்தன்மையாக மகிழ்வோடு ஏற்று அனுசரித்து போவதுதான் நல்லமகிழ்வான குடும்பவாழ்விற்கு அடிப்படையாகும் என தன்னுடைய கணவனின் இந்த செயலில் இருந்து அறிந்த கொண்ட அந்த இளம் மனைவி தன்னுடைய கணவனின் பெருந்தன்மையை கண்ணுற்று தேம்பிதேம்பி அழ ஆரம்பித்தார் .

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...