செவ்வாய், 30 ஏப்ரல், 2013

நம்கீழ் பணிபுரியும் பணியாளர்கள்எந்தவகையை சேர்ந்தவர்கள்


ஒருவர் புதிய நவீன அரிசிஆலை ஒன்றை நிறுவலாம் என முயற்சித்தபோது அவர் திட்டமிட்டபடி வங்கிகள் கடன்வழங்க தயங்கியதால் கையிலிருந்த முதலீட்டை மட்டும் கொண்டு சாதாரண அரிசி ஆலையாக நிறுவினார் அந்த புதிய அரிசி ஆலையை இயக்குவதற்காக பணியாளர்களை நியமனம் செய்யவிழைந்தார்

முதல்நாள் பணிபுரிய வந்த அன்பு என்ற பணியாளரிடம் தரையில் இருக்கும் நெல்மூட்டைகளை மேலே மாடிக்கு கொண்டு சென்று சேர்த்திடுமாறு உத்திரவிட்டார் உடன் அந்த அன்பு என்ற பணியாளரும் மிக்கடினமாக முயன்று நெல்மூட்டைகளை மேலே மாடிக்கு கொண்டு சென்று சேர்த்தார்

மறுநாள் பணிபுரிய வந்த ஆராவமுது என்ற பணியாளரிடம் தரையில் இருக்கும் நெல்மூட்டைகளை மேலே மாடிக்கு கொண்டு சென்று சேர்த்திடுமாறு உத்திரவிட்டார் உடன் அந்த ஆராவமுது என்ற பணியாளரும் மிக்கடினமாக முயன்று நெல்மூட்டைகளை மேலே மாடிக்கு கொண்டு சென்று சேர்த்தார் அதனோடு மற்றோரு இளவரசன் என்ற பணியாளரும் அதே பணியை செய்வதற்கு தடுமாறி கொண்டிருந்த்தை கண்ணுற்று இளவரசனுடைய பங்கு நெல்மூட்டைகளை மேலே மாடிக்கு கொண்டு சென்று சேர்த்திட உதவிசெய்தார்

மூன்றாம் நாள் பணிபுரிய வந்த அறிவு என்ற பணியாளரிடம் தரையில் இருக்கும் நெல்மூட்டைகளை மேலே மாடிக்கு கொண்டு சென்று சேர்த்திடுமாறு உத்திரவிட்டார் உடன் அந்த அறிவு என்ற பணியாளரும் முந்தைய அன்பு, ஆராவமுது ஆகிய இருவரும் என்னென்ன சிரமங்களை அடைந்தனர் என குறிப்புபெழுதி அதனை எவ்வாறு சுலபமாக்குவது என அறிந்து அதனையும் குறிப்பெழுதி பணியை முடித்து அந்த குறிப்பையும் கொண்டு சென்று முதலாளியிடம் சமர்ப்பித்தார்

நான்காம் நாள் பணிபுரிய வந்த உலகநாதன் என்ற பணியாளரிடம் தரையில் இருக்கும் நெல்மூட்டைகளை மேலே மாடிக்கு கொண்டு சென்று சேர்த்திடுமாறு உத்திரவிட்டார் உடன் அந்த உலகநாதன் என்ற பணியாளரும் முந்தைய அன்பு, ஆராவமுது, அறிவு ஆகிய மூவரும் என்னென்ன சிரமங்களை அடைந்தனர் அந்த சிரமங்களை தவிர்த்து சுலபமாக்க அறிவு என்ன வழிமுறையை பின்பற்றினார் என அறிவுனுடைய குறிப்பினை படித்தறிந்த மேலும் சுலபமாக்கிடும் பொருட்டு கையில் தயாராக இருக்கும் பொருட்களை கொண்டு நெல்மூட்டைகளை மேலே சுலபமாக கொண்டு சேர்ப்பதற்கான இயந்திர அமைப்பான மின்தூக்கி(Elevator) என்ற அமைப்பை நிறுவி அதன்மூலம் நிரந்தரமாக நெல்மூட்டைகளை மேலே சுலபமாக கொண்டு சேர்ப்பதற்கான வழிமுறையை அமைத்து தனக்கிட்ட பணியையும் முடித்தார் இந்த செய்தியை தன்னுடைய முதலாளியிடம் சென்று அறிவித்தார்

இந்த ஐந்து பணியாளர்களில் நாம் எந்த வகையை சேர்ந்தவர் என இந்த நிகழ்வுகளிலிருந்து நாம் பணிபுரியும் தன்மையை வைத்து முடிவுசெய்து கொள்க அவ்வாறே நம்கீழ் பணிபுரியும் பணியாளர்கள்எந்தவகையை சேர்ந்தவர்கள் என்றும் முடிவுசெய்து அதற்கேற்ற பணியை அவரவர்களுக்கு வழங்கி நம்முடைய தொழிலகம் சுணக்கமின்றி செயல்பட முயன்றிடுக

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...