சனி, 20 ஏப்ரல், 2013

எந்தவொரு சிக்கலான சூழ்நிலையிலும் எவ்வாறு மிகச்சரியான முடிவெடுப்பது -புதிர்


நகர்புறத்தில் விளையாடுவதற்கு இடம் எதுவும் இல்லாததால் போக்கிடம் இன்றி தண்டவாளங்கள் பதிக்கபட்ட இரு வழித்தடங்களாக செல்லும் இரயில் பாதையில் சிறு பிள்ளைகள் குழுவாக விளையாடினர் அதில் ஒரு வழிதடம் தற்போது பயன்பாட்டில் உள்ளது மற்றொன்று பயன்பாட்டில் இல்லாதது இருந்தாலும் அவசிய தேவையின்போதுமட்டும் இந்த பாதையை பயன்படுத்தி கொள்ளமுடியம்.

பயன்பாட்டில் உள்ள தடத்தில் நாம் விளையாடினால் அதிகபாதிப்பு நமக்கு ஏற்படும் ஏன் நம்முடைய உயிருக்கே கூட ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது அதனால் பயன்பாட்டில் இல்லாத தடத்தில் நாம் விளையாடுவோம் என்றும் விதி முறைகளையும் அதன் விளைவுகளையும் மற்றபிள்ளைகளிடம் விவரமாக ஒரு பையன் கூறினான் .

பெரும்பாலானவர்கள் அதை ஏற்றக்கொள்ளாமல் விளையாடுவதற்கு நமக்கு இடமேஇல்லை இதில் விதிமுறையென்ன இருக்கின்றது என பயன்பாட்டில் உள்ள தடத்தில் அனைவரும் விளையாடினர் வாதாடிய பையன்மட்டும் பயன்பாட்டில் இல்லாத தடத்தில் தனியாக விளையாடிகொண்டிருந்தான்

அப்போது அந்த வழியாக அதிவேக ஒரு பயனிகள் தொடர்வண்டி ஒன்று வந்துகொண்டிருந்தது கூப்பிடு தூரத்திற்கு அப்பால் தொடர்வண்டிசெல்லும் பாதையை மாற்றிவிடும் லைன்மேன் ஒருவர் இந்த பிள்ளைகளை உடன் வெளியேறும்படி கையசைத்து சைகயால் கூறியதை இந்த பிள்ளைகள் பொருட்படுத்தாது தங்களுடைய விளையாட்டில் மும்முரமாக விளையாடிகொண்டிருந்தனர்

தொடர்வண்டியையும் உடன் நிறுத்தமுடியாது நிறுத்தினால் தொடர்வண்டி விபத்திற்கு உள்ளாகும் இந்நிலையில் அந்த லைன்மேன் ஆனவர் அதிக எண்ணிக்கையில் தற்போது பயன்பாட்டில் உள்ள பாதையில்(விளையாடும் அதிக எண்ணிக்கையில் உயிர் இழப்பை ஏற்படுத்தும்) இந்த அதிவேக பயனிகள் தொடர்வண்டி செல்லுமாறு அனுமதிப்பதா அல்லது தனியாக விளையாடும் பயன்பாட்டில் இல்லாத பாதையில் (ஒரு உயிர் மட்டும் இழப்பு ஏற்படுத்தும் )அதிவேக பயனிகள் தொடர்வண்டியை திருப்பிவிடுவதா என ஒரு நொடிநேரம் தயங்கி பின் சரியான முடிவை தெரிவுசெய்து எந்த தடத்தில் இந்த அதிவேக பயனிகள் தொடர்வண்டியை அனுமதிப்பது.என செயல்பட்டார்

இந்த சிக்கலான சூழ்நிலையில் அந்த லைன்மேன் எந்த முடிவை எடுக்கமுடியும் அதுசரியானதுதானா என அடுத்த வலைபூவில் காண்போம்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...