சனி, 13 ஏப்ரல், 2013

எதனையும் தவறாக முடிவுசெய்து ஏராளமான பொருள் நட்டமும் மனவருத்தமும் நமக்கு ஏற்படுத்தி கொள்ளாதீர்


இளம் பணக்காரர் ஒருவர் காலையில் எழுந்து தான் புதியதாக வாங்கிவைத்துள்ள மகிழ்வுந்தை துடைத்து சுத்தபடுத்தி கொண்டருந்தார் அப்போது அவருடைய ஐந்து அல்லது ஆறு வயது மகன் அங்குவந்து அந்த மகிழ்வுந்தின் மறுபுறத்தில் சிறு கல்லால் ஏதோ கிறுக்கினான்

இதை கண்ணுற்று அவர் அதிக கோபமுற்று அவருடைய மகனை தூக்கிசென்று அம்மகனின் கைகளை அருகிலிருந்த தூனில் இந்த கைதானே புதிய மகிழ்வுந்தில் கிறுக்கியது என பலமுறை மோதி நசுக்கினார்

உடன் அவருடைய மகனின் கைவிரல்கள் நசுங்கி இரத்தம் பீரிட்டு வந்தது அதனால் அருகிலிருந்த மருத்து வமனைக்கு அழைத்து சென்று பலஆயிரகணக்கான ரூபாய் செலவுசெய்து காயத்திற்கும் விரல்முறிவிற்குமான தகுந்த சிகிச்சையை அளித்தார்

அப்போது அவருடைய மகன் அப்பா என்னுடைய விரல்கள் உங்களுடைய விரல்கள்போன்று எப்போது வளர்ந்து வரும் அப்பா என அமைதியாக அப்பாவியாக வினவினான்.

பின்னர் அவருடைய வீ்ட்டிற்கு அவர்கள் இருவரும் திரும்பி வந்து தன்னுடைய புதிய மகிழ்வுந்தை சுற்றி பார்த்தார் அதில் அவருடைய மகன் அப்பா நான் உங்களை என்றென்றும் நேசிக்கின்றேன் என்று கிறுக்கியிருந்ததை கண்ணுற்றார்

ஆம் நாம் நம்முடைய வாழ்வில் எந்த வொரு நிகழ்வையும் அமைதியாக அதனைபற்றிய முழுவிரங்களையும் தெரிந்துகொள்ளாமல் உடனடியாக நாம் என்ன யூகிக்கின்றோமோ அதுவாகத்தான் அது இருக்கும் என தவறாக முடிவுசெய்து அதனால் ஏராளமான பொருள் நட்டமும் மனவருத்தமும் நமக்கு ஏற்படுத்தி கொள்கின்றோம் .

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...