புதன், 10 ஏப்ரல், 2013

நம்முடைய பார்வைக்கேற்ப நடைபெறும் செயல்களும் தோன்றும்


புதுமன தம்பதிகள் ஒரு புதியதான வீட்டில் குடியேறினார்கள் .மறுநாள் காலையில் அவர்கள் எழுந்து காலைக்கடன்களை முடித்தபின் அவர்களுடைய வீட்டின் சாளரத்தின் வாயிலாக அடுத்தவீட்டில் துணிகளை துவைப்பதும் அதனை கொடியில் காயவைப்பதையும் அந்த புதுமனத்தம்பதிகளில் இளம் பெண்மனி மட்டும் பார்த்து விட்டு தன்னுடைய கணவனிடம் பார்த்தீர்களா நல்ல தரமான சோப்பினை துணிகளை துவைப்பதற்கு பக்கத்துவீட்டுகாரர்கள் பயன் படுத்தவில்லை அதனால் அவர்கள் துவைத்ததுனிகளும் அழுக்காகவே உள்ளன என கூறினாள் அவளுடைய கணவனும் அதற்கான பதில் ஒன்றையும் கூறவில்லை

இவ்வாறு தினமும் பக்கத்திவீட்டார்களின் துனிதுவைப்பதை பற்றி குறைகூறிக்கொண்டே இருந்தாள் அந்த இளமங்கை அவளுடைய கணவனும் அதற்காக பதிலேதும் கூறாமல் இருந்துவந்தான்

சிறிது நாள்கழித்து அதே இளம்பெண் ஏங்க இங்கு வாங்களேன் பக்கத்து வீட்டம்மா இன்று நல்ல தரமான சோப்பினை பயன்படுத்தியிருப்பார்கள் போலிருக்கின்றது அதனால் அவர்கள் துவைத்து கொடியில் காயவைத்த துனிகளும் பளிச்சிடுகின்றன என மகிழ்ச்சியுடன் கூறினாள்.

அதெல்லாம் ஒன்றுமில்லை நம்முடைய வீட்டின் சாளரத்தின் கண்ணாடி அழுக்காக இருந்தது அதனால் தினமும் நீ பார்த்து அந்த துணிகளில் அழுக்கு போகவில்லை என கூறினாய்

நான் இன்று நீ எழுவதற்கு முன்பு நேரத்தோடுஎழுந்து நம்முடைய வீட்டின் சாளரத்தின் கண்ணாடியை தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தமாக துடைத்துவிட்டேன் அதனால்தான் இவ்வாறு தெரிகின்றது என அந்த கணவனும் தன்னுடைய மனைவிக்கு பதில்கூறனான்

ஆம் நடைபெறும் செயல்கள் என்னவோ ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன ஆனால் நாம் நம்முடைய பார்வை எவ்வாறு உள்ளதோ அவ்வாறே நடைபெறும் செயலும் நமக்கு புலப்படும் என்பதே உண்மையாகும்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...