திங்கள், 30 செப்டம்பர், 2013
பணியாளர்களின் நல்லசெயல்களை மட்டும் பாராட்டினால் நிறுவனத்தின் உறபத்தி திறன் உயரும்
வியாழன், 22 ஆகஸ்ட், 2013
பிரச்சினை என்னவென்று அதன் அடிப்படையை தெரிந்து கொள்ளாமலேயே தவறான முடிவை எடுத்துவிடுகின்றோம்
புதியதாக கணினியின் மென்பொருள் அறிவியல் பட்டம் பெற்ற ஒரு மாணவன் பிரபலமான கணினிமென்பொருள் மேம்படுத்தும் ஒரு நிறுவனத்தின் நிரல் தொடர்கட்டளை எழுதிடும் வல்லுநர் பணியில் சேருவதற்கான நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டபோது அந்நிறுவனத்தின் வயது முதிர்ந்த தேர்வாளர் “தம்பி! நீ கணினி மென்பொருளின் தருக்கமுறைமை பற்றி நல்ல அறிவு பெற்றிருக்கின்றாயா ? “ என வினவியபோது “அதிலென்ன சந்தேகம் ஐயா!” என பதிலிருத்தான் “அப்படியானால் சரி! நான் புதிர் ஒன்றை கூறுகின்றேன் அதற்கான விடையை மிகச்சரியாக கூறுகின்றாயா? என பார்த்தபின்னரே உன்னை இந்த நிறுவனத்தில் பணிக்கு எடுப்பது பற்றி முடிவுசெய்யமுடியும் “எனக்கூறினார்.
1தொடர்ந்து “இரு தொழிலாளர்கள் ஒரு கொதிகலணின் புகைபோக்கியிலிருந்து இறங்கி வந்தார்கள் அவர்களில் ஒருவர் முகத்தில் கரியும் சாம்பலும் படிந்திருந்தது மற்றொருவர் முகம் அவ்வாறு எதுவும் படியாமல் சுத்தமாக இருந்தது இருவரில் யார் முகத்தினை கழுவி தூய்மை செய்வார்” என அந்த தேர்வாளர் வினவினார்.
உடன் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்ட மாணவர்” முகத்தில் கரியும் சாம்பலும் படிந்த தொழிலாளியே” என பதிலிருத்தான் “தவறு! முகத்தில் கரியும் சாம்பலும் படியாத தொழிலாளியே, தன்னுடைய முகத்தினை கழுவி தூய்மை செய்வார் . ஏனெனில் முகத்தில் கரியும் சாம்பலும் படிந்த தொழிலாளி எதிரில் உள்ள தொழிலாளியின் முகத்தை பார்க்கும்போது சுத்தமாக இருப்பதை அறிந்து நம்முடைய முகமும் சுத்தமாக இருக்கும் என எண்ணி விட்டுவிடுவார்.ஆனால், முகத்தில் கரியும் சாம்பலும் படியாத தொழிலாளியானவர் எதிரில்உள்ள தொழிலாளியின் முகத்தை பார்க்கும்போது அந்த முகத்தில் கரியும் சாம்பலும் படிந்திருப்பதை கண்டு தன்னுடைய முகமும் அவ்வாறே இருக்கும் என எண்ணி தன்னுடைய முகத்தினை கழுவி தூய்மை செய்வார்.” எனக்கூறினார் அந்த தேர்வாளர். .
2ஐயா! வேறு ஒரு வாய்ப்பினை வழங்குங்கள் என அந்த மாணவன் கூறியபோது
“ சரி! இரு தொழிலாளர்கள் ஒரு கொதிகலணின் புகைபோக்கியிலிருந்து இறங்கி வந்தார்கள் அவர்களில் ஒருவர் முகத்தில் கரியும் சாம்பலும் படிந்திருந்தது மற்றொருவர் முகம் அவ்வாறு எதுவும் படியாமல் சுத்தமாக இருந்தது இருவரில் யார் முகத்தினை கழுவி தூய்மை செய்வார்” என இரண்டாவது முறை அந்த தேர்வாளர் வினவினார்.
உடன் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்ட மாணவர்” முகத்தில் கரியும் சாம்பலும் படியாத தொழிலாளியே” என பதிலிருத்தான்
“ தவறு! இருவருமே தத்தமது முகத்தினை கழுவி தூய்மை செய்வார்கள் ஏனெனில் முகத்தில் கரியும் சாம்பலும் படியாத தொழிலாளியானவர் எதிரில்உள்ள தொழிலாளியின் முகத்தை பார்க்கும்போது அந்த முகத்தில் கரியும் சாம்பலும் படிந்திருப்பதை கண்டு தன்னுடைய முகமும் அவ்வாறே இருக்கும் என எண்ணி தன்னுடைய முகத்தினை கழுவி தூய்மை செய்வார் .அதனை கண்டு முகத்தில் கரியும் சாம்பலும் படியாத தொழிலாளியே தன்னுடைய முகத்தை கழுவி சுத்தபடுத்திடும்போது ,ஏன் நாமும் நம்முடைய முகத்தை கழுவி சுத்தபடபடுத்திடக்கூடாது? என அவரும் தன்னுடைய முகத்தினை கழுவி சுத்தபடுத்திகொள்வார்” எனக்கூறினார் அந்த தேர்வாளர்.
3 “ஐயா! மற்றொரு வாய்பிபினை வழங்குங்கள்” என அம்மாணவன் வேண்டியபோது மீண்டும் மூன்றாவது முறையாக
“இரு தொழிலாளர்கள் ஒரு கொதிகலணின் புகைபோக்கியிலிருந்து இறங்கி வந்தார்கள் அவர்களில் ஒருவர் முகத்தில் கரியும் சாம்பலும் படிந்திருந்தது மற்றொருவர் முகம் அவ்வாறு எதுவும் படியாமல் சுத்தமாக இருந்தது இருவரில் யார் முகத்தினை கழுவி தூய்மை செய்வார்” என மூன்றாவது முறை அந்த தேர்வாளர் வினவினார்.
உடன் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்ட மாணவர் “இரண்டு தொழிலாளியுமே தங்களுடைய முகத்தினை கழுவி சுத்தபடுத்திகொள்வார்கள்” என பதிலிறுத்தபோது
“தவறு! இருவருமே தங்களுடைய முகத்தினை கழுவமாட்டார்கள். ஏனெனில் முகத்தில் கரியும் சாம்பலும் படிந்திருக்கும் தொழிலாளி எதிரில் இருக்கும் தொழிலாளியின் முகம் தூய்மையாக இருப்பதை பார்த்து தன்னுடைய முகமும் தூய்மையாக இருக்கும் என தன்னுடைய முகத்தை கழுவி சுத்தபடுத்திடமாட்டார். ஆனால் முகத்தில் கரியும் சாம்பலும் படியாத தொழிலாளி எதிரில் இருக்கும் முகத்தில் கரியும் சாம்பலும் படிந்த தொழிலாளியே தன்னுடைய முகத்தினை கழுவி சுத்தபடுத்தாதபோது நாம் மட்டும் ஏன் கழுவவேண்டும் என விட்டுவிடுவார்” எனகூறினார். அன்த தேர்வாளர்.
4“சரி! ஐயா! இறுதிவாய்ப்பாக ஒரு கேள்வியை கேளுங்கள் ஐயா!” என அந்த மாணவன் வேண்டியபோது
“இரு தொழிலாளர்கள் ஒரு கொதிகலணின் புகைபோக்கியிலிருந்து இறங்கி வந்தார்கள் அவர்களில் ஒருவர் முகத்தில் கரியும் சாம்பலும் படிந்திருந்தது மற்றொருவர் முகம் அவ்வாறு எதுவும் படியாமல் சுத்தமாக இருந்தது இருவரில் யார் முகத்தினை கழுவி தூய்மை செய்வார்” என இறுதியாக நான்காவதுமுறை அந்த தேர்வாளர் வினவியபோது
என்னடாஇது ?எப்படி பதில் கூறினாலும் தருக்க முறையில் தவறு என வேறு பதிலையே இந்த தேர்வாளர் கூறுகின்றாரே எனத்தடுமாறி “ ஐயா இந்த கேள்விக்கான பதிலை என்னால் கூறஇயலவில்லை நான் தருக்கஇயலில் கரைகண்டவன் அன்று ஒருமாணவன் மட்டுமே” என மிகபணிவுடன்கூறியபோது
“அதனாலெனென்ன தம்பி!பரவாயில்லை ! ஒரு கொதிகலணின் புகை போக்கியில்இருந்து இருவர் இறங்கி வரும்போது எவ்வாறு ஒருவர்முகத்தில் மட்டும் கரியும் சாம்பலும் படிந்திருக்கும்? இருவர் முகத்திலுமே கரியும் சாம்பலும் படிந்திருக்கும்.என்ற அடிப்படை உண்மையை தெரிந்துகொள் . அதனால் முதலில் பிரச்சினை என்ன அதனுடைய அடிப்படையான இயல்பு, குணநலன் என்னவென தெரிந்து கொள் அதன்பின் தருக்கவியலை அதில்புகுத்தி அந்த பிரச்சினைக்கான விடையை கண்டுபடிக்க முயற்சிசெய்” என விடை கொடுத்து அனுப்பினார் அந்த தேர்வாளர்.
ஆம்,ஆம். நம்மில் பலரும்இதேபோன்றே எந்தவொரு நிகழ்வையும முழுவதுமாக அதனுடைய இயற்கை அமைவை பற்றியும் அந்நிகழ்வு ஏற்படுவதற்கான அடிப்படை உண்மைகளை பற்றியும் முழுவதும் தெரிந்து கொள்ளாமல் அரைகுறையாக அறிந்துகொண்டு தவறான முடிவெடுத்து நம்முடைய வாழ்வில் அல்லல்படுகின்றோம். என்பதே நிதர்சனமான உண்மையாகும்.
வியாழன், 8 ஆகஸ்ட், 2013
எந்த நிகழ்வு நடந்தாலும் அதனை ஆராய்ந்து பார்க்க தவறிவிடுகின்றோம்
செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013
யாரையும் ஆளின் தோற்றத்தை வைத்து தவறாக முடிவுசெய்திட வேண்டாம்
புதன், 24 ஜூலை, 2013
ஒருநிறுவனத்தின் மேலாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் இடையேயான உறவை சுமுகமானதாக வளர்த்துகொள்ள
பொதுவாக தலைமையாளர்களுடன் கீழ்நிலை பணியாளர்களின் உறவு மிக்கடினமானதாகவே இருந்து வருகின்றன இரகசியம் பாதுகாப்பதாக கூறிக்கொண்டு எந்தவொரு செயலையும் பிரச்சினைக்கான தீர்வினையினையும் சுமூகமாக பின்பற்றபடுவதேயில்லை
ஆயினும் இந்த உறவு சுமுகமாக இருந்தால் நம்பிக்கை மிக்கதான கருவியாக இருக்கும் அதற்காக பின்வரும் படிமுறைகளை பின்பற்றி பணியாளர்களுக்கும் தலைமைக்கும் உள்ள உறவை சுமுகமானதாக ஆக்கமுடியும்
1.நடைமுறையில் வீடுஎன ஒன்றிருந்தால் அதற்கு வாயில்,சன்னல் என்பன போன்றஉறுப்புகள் இருக்கவேண்டும் அதுபோன்றே எந்தவொரு தொழிலிலும் ஒரு சில பிரச்சினைகள் அவ்வப்போது குறுக்கே வந்துகொண்டுதான் இருக்கும் பிரச்சினையே இல்லாத தொழில் எதுவுமேயில்லை இருந்தாலும் அந்தபிரச்சினையால் எழும் பொதுவான பாதிப்பு பிரச்சினைக்கேவிற்கு உரிய பாதிப்பு அதனால் நம்முடைய பணிஎவ்வாறு பாதிக்கும் அதனைதொடர்ந்து நிறுவனத்தின் குறிக்கோள் எவ்வாறு பாதிக்கும் என்பன போன்ற விவரங்களை மிக விரிவாகவும் விவரமாகவும்தலைமையாளரிடம் பணியாளர்கள் உடனடியாக தகவல் தெரிவித்திடுவது நன்று
2. சரி பிரச்சினையைமட்டும் தலைமையாளரிடம் விவரமாக கூறிவிட்டால் போதுமா அந்த பிரச்சினைக்குரிய தீர்வை நாம் எவ்வாறு முயன்று கண்டோம் அந்த முயற்சியினால் நாம் என்னென்ன தெரிந்துகொண்டோம் எத்தனைவகையான மாற்று தீர்வுகள் அந்த பிரச்சினைக்காக உள்ளன அதில் நம்முடைய பரிந்துரை என்ன என்பதே இரண்டாவது படிமுறையாகும்
3 அந்த பிரச்சினையை நாம் கூறும் வழியில் தீர்வுசெய்து வெற்றிகொண்டால் என்னென்ன பயன் உண்டாகும் சிறிய அளவில் அந்த தீர்வினை சரிபார்த்தபின்னர் மற்றவர்களுடன்அதனை எவ்வாறுபகிர்ந்துகொண்டோம் என்பதே மூன்றாவது படிமுறையாகும்
4.இறுதியாக இதனை செயல்படுத்துவதற்கான பொறுப்பான நபர் யார் அதனைதொடர்ந்து செயல்படுத்துவதன் இறுதி விளைவு என்ன என்பதே இறுதி படிமுறையாகும் இந்த ஒளிவுமறைவற்ற படிமுறையை பின்பற்றி ஒருநிறுவனத்தின் மேலாளர்களுக்கும்பணியாளர்களுக்கும் இடையேயான உறவைசுமுகமானதாக வளர்த்துகொள்ளமுடியும்
சனி, 22 ஜூன், 2013
நம்முன் பரந்து கிடக்கும்வாய்ப்புகளையும், வசதிகளையும் மிகச்சரியாகபயன்படுத்தி முன்னேறசெய்யாமல் சோம்பேறியாக நமக்கு கிடைத்தது அவ்வளவுதான் என முடங்கிபோய்விடுகினறோம்.
ஞாயிறு, 16 ஜூன், 2013
நாம் கூறும் சொல் ஒவ்வொன்றும் மற்றவர்களுக்கு பாதிப்பெதுவும் ஏற்படாமல்இருக்குமாறு பார்த்து கொள்க
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்
இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...
-
மண்பானை செய்திடும் ஒரு குயவன் தான் கொண்டுசென்ற பானைகளை யெல்லாம் விற்றுவிட்டு சந்தையிலிருந்து திரும்பிவந்து கொண்டிருக்கும் போது, வழியில் கண்...
-
ஒரு நிறுமத்தின் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அல்லும் பகலும் அயராது பாடுபடும் , ஊழியர்கள் நிறுவனத்தை நன்றாக வழிநடத்தி செல்லும் இயக்குநர்கள...
-
பல ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியமும் நீண்ட வரலாறும் கொண்ட நாடு நமது இந்திய நாடு. அறிவியல் தொழிற் நுட்பம் பண்டைய இந்தியாவில், ஏனைய உலக கலாசாரப் ப...