ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

சசேவ விலக்கு வரம்பு உயர்த்தபடுவதால் சிறுதொழில் நிறுவனங்களுக்கு கிடைத்திடும் பயன்கள்


1. மிகச்சிறு ,சிறு, நடுத்தரநிறுவனங்களின்(Micro,Small,Medium Scale Enterprises(MSME)), சிறுவியாபாரிகளின் ஆண்டுவிற்பணைவருமானம் ரூபாய்ஒரு கோடியிலிருந்து ரூ.1.5 கோடியாக உயர்த்தப் பட்டுள்ளது அதிலும் காம்போஸிஸன் திட்டத்தினை பின்பற்றுபவர்கள் 01.04.2019 முதல் சரக்கு சேவை வரியை ஒவ்வொரு காலாண்டிற்குஒருமுறை செலுத்திடவேண்டும் அதற்கான அறிக்கையை மட்டும் ஆண்டிற்கு ஒருமுறை சமர்ப்பித்தால்போதுமானதாகும் தற்போது ஒவ்வொரு காலாண்டிற்கும் சரக்கு சேவை வரியை செலுத்திடவேண்டும் அதற்கான அறிக்கையையும் அந்தந்த காலாண்டில் சமர்ப்பித்திடவேண்டும் என்ற தற்போதைய நடைமுறையால் சிரமமப்படும் மிகச்சிறு சிறு நடுத்தரநிறுவனங்களின் (MSME's) கம்போஸிஸன் விற்பனையாளர்களின் பணிச்சுமை இதன் மூலம் குறைக்கப் பட்டுள்ளது 2 சரக்கு சேவைவரி செலுத்துவதற்கான மாநிலத்திற்குள் பொருட்களுக்கான விற்பணை வருமானம்வரம்பு ரூ.20. இலட்சங்களானது 01.04.2019 முதல்ரூ.40. இலட்சங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. சேவைகளுக்கு விற்பணை வருமானம்வரம்பு உயர்த்தப்படாமல் ரூ.20 இலட்சங்களானது அப்படியே உள்ளது மாநிலங்களுக்கிடையேயான விற்பணைவருமானமும் உயர்த்தப்படாமல் ரூ.20. இலட்சங்களானது அப்படியேஉள்ளது 3.மிகச்சிறு, சிறு, நடுத்தரநிறுவனங்களின்(MSME's) கம்போஸிஸன் திட்டத்தின் கீழ் சேவைபுரிபவர் எனில் ஆண்டு விற்பணைவருமானம் ரூ.50 இலட்சங்களுக்குள் இருப்பவர்கள் செலுத்தவேண்டிய சேவைவரியானது01.04.2019 முதல்6%(3% CGST + 3%SGST) ஆக குறைக்கப்பட்டுள்ளது தற்போது நடைமுறையில் இவர்கள் 12% அல்லது 18% ஆகசேவைவரி செலுத்துகின்றனர் விற்பணைவருமானம் ரூ.50 இலட்சங்களுக்குள் இந்த பணியை செய்திடுபவர்கள் உள்வரும்சேவைக்கான வரிசெலுத்துவதை வரவுஎடுத்துகொள்ளாமல்இந்த பயனைபெறலாம் 4. மிகச்சிறு ,சிறு ,நடுத்தர நிறுவனங்களானவை (MSME's) சரக்கு சேவை வரி கணக்கீடு செய்வதற்காக ஏற்படும் சிரமத்தை குறைப்பதற்காகவும் தனியாகஇதற்காகவென செலவிடாமல் இருப்பதற்காகவும் Accounting & Billing Software ஆனது இந்திய அரசால் இலவசமாக வழங்கப்படுகின்றது இதனை பதிவிறக்கம் செய்து தம்முடைய நிறுவனங்களின் விற்பணை பட்டியல் தயார்செய்வதுமுதல் கணக்குப்பதிவியல்பதிவுசெய்வதுவரை அனைத்துபணிகளையும் எளிதாக செயல்படுத்தி பயன்பெறலாம்.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...