செவ்வாய், 21 ஏப்ரல், 2020

சசேவ(GST)வின் கீழ் பின்செல்செலவுதொழில்நுட்பம்(Reverse Charge Mechanism)


பொதுவாக .சசேவவின் கீழ் பொருட்களை வழங்குபவர் அல்லது சேவைகளை வழங்குபவர் இவைகளை பெறுபவரிடமிருந்து விற்பணைத்தொகையுடன் சசேவ வரியையும் சேர்த்து வசூலித்து அரசிற்கு செலுத்துவார்.அதற்குபதிலாக பொருட்களை பெறுபவர் அல்லது சேவைகளைபெறுபவர் இவைகளை வழங்குபவர் வாயிலாக அரசிற்கு இந்த சசேவவரியை செலுத்துவதற்கு பதிலாகஇவைகளை பெறுபவரே நேரடியாக அரசிற்கு சசேவவரியை செலுத்திடுவதே RCM என சுருக்கமாக அழைக்கப்படும் பின்செல் செலவு தொழில் நுட்பம்(Reverse Charge Mechanism) ஆகும் இவ்வாறான தொழில்நுட்பமானது சசேவவின் கீழ் பதிவு பெறாதவரிடமிருந்து சசேவவின் கீழ் பதிவுபெறுபவர் பொருட்களை அல்லது சேவைகளை பெறும்போது நடைமுறை படுத்தப்படும் சசேவவின் கீழ் இந்த RCM ஆனது பிப்ரவரி 2019முதல் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது அயல்பணிவழிமுறையில் நிறுவனத்திற்கு பணியாளரை வழங்குபவர்கள், காப்பீட்டு முகவர்கள், நிதிநிறுவனங்கள் அல்லது வங்கிகளின் வாராக்கடனை வசூலித்திடுவதற்காக நியமித்திடும் முகவர்கள் ,வியாபார நிறுவனத்திற்காக செயல்படும் வழக்குரைஞர்கள் அல்லது இசைவுதீர்ப்பாளர்கள் , இணையவழிவணிக இயக்குநர்கள் (E-commerce Operator), பொருள் போக்குவரத்தாளர்கள் போன்றவர்கள் வழங்கும் சேவைகளின் மீது சசேவ வரி விதித்தாலும் அவர்களின் ஆண்டுவருமானம் இருபது இலட்சத்திற்கு மிகாமல் இருக்கும் நிலையில் இந்த சசேவவரியை செலுத்தத் தேவையில்லை என்ற நிலையில் அவ்வாறான பரந்துபட்ட சேவைவழங்குபவர்களின் சேவைகளையும் சசேவவரி வசூலின்கீழ் கொண்டுவருவதற்காகவே இந்த RCM ஆனது நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது தற்போது நடைமுறையில் பொருட்களை வழங்குபவர் இந்த RCM ஐ செயல்படுத்துவதில்லை அதனால் பொருட்களை வழங்குபவர்களையும் சேவைகளை வழங்குபவர்களையும் சசேவவின்கீழ் கொண்டு வரச்செய்வதே இந்த RCM அடிப்படை நோக்கமாகும் சசேவவின் கீ்ழ் பதிவு பெற்ற நபர் ஒருவர் RCM இன்அடிப்படையில் சசேவவின் கீ்ழ்பதிவு பெறாத நபரிடமிருந்து பொருட்களை அல்லது சேவைகளை பெறும்போது அதற்கான சசேவவரியைபதிவு பெறாத நபருக்குபதிலாக பதிவுபெற்ற நபர் செலுத்துவதாக இடமாற்றம் செய்யப் பெறுகின்றது. வரிஏய்ப்பினை தடுப்பதே இந்தRCMஇனுடைய அதற்கடுத்தஅடிப்படை நோக்கமாகும் இந்த RCMஇன் படி சசேவவரியில் ஒருபகுதியைமட்டும் வழங்குவது மிகுதியை விலக்குப்பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை இந்தRCMஇன்வாயிலாக 100% சசேவவரியைமுதலில் கண்டிப்பாக செலுத்தியாக வேண்டும் இவ்வாறானRCMஇன் படி சசேவவின்கீழ் பொருட்களை எப்போது வழங்கினார் எனஎவ்வாறு நிர்ணயம் செய்து வரியை வசூலிப்பது என்ற பிரச்சினைஎழும் ஆயினும் பின்வரும்சூழ்நிலைகளில் எது முந்தைய நிகழ்வோ அதனையே பொருட்களை வழங்கிய நாளாக கணக்கில் கொள்ளப்படும் அ.பொருட்களை வழங்குபவரிடமிருந்து பெறுபவர் பொருட்களை பெற்ற நாள் ஆ. பொருட்களை பெறுபவரின் கணக்குப்பதிவேடுகளில் அந்த பொருட்களுக்கான விற்பணைத்தொகை வழங்கப்பட்ட நாளாக பதிவுசெய்யப்பட்ட நாள் இ.பொருட்களை பெறுபவரின் வங்கிகணக்கில்பதிவுசெய்யப்பட்டு அந்த பொருட்களுக்கான விற்பணைத்தொகை வழங்கப்பட்ட நாள் ஈ.பொருட்களை வழங்குபவர் அந்த பொருட்களை வழங்கும்போது அதனோடுகூடவே வழங்கிய விற்பணைபட்டியலில் குறிப்பிட்டநாளிலிருந்து முப்பது நாள் குறிப்பு மேலேகூறியசூழலிலும் பொருட்களை வழங்கிய நாளினை கண்டுபிடித்திடமுடியாதபோது பொருட்களை பெறுபவரின் கணக்குப்பதிவேடுகளில் அந்த பொருட்களுக்கான விற்பணைத்தொகை வழங்கப்பட்ட நாளாக பதிவுசெய்யப்பட்டநாளே கணக்கில் கொள்ளப்படும் அதேபோன்று இவ்வாறானRCMஇன் படி சசேவவின்கீழ் சேவைகளை எப்போது வழங்கினார் என எவ்வாறு நிர்ணயம் செய்து வரியை வசூலிப்பது என்ற பிரச்சினைஎழும் ஆயினும்பின்வரும்சூழ்நிலைகளில் எது முந்தைய நிகழ்வோ அதனையே சேவைகளை வழங்கிய நாளாக கணக்கில் கொள்ளப்படும் அ. சேவைகளை பெறுபவரின் கணக்குப்பதிவேடுகளில் அந்தசேவைகளுக்கானத்தொகை வழங்கப்பட்ட நாளாக பதிவுசெய்யப்பட்ட நாள் ஆ.சேவைகளை பெறுபவரின் வங்கிகணக்கில் அந்தசேவைகளுக்கானத்தொகை வழங்கப்பட்ட நாளாக பதிவுசெய்யப்பட்டநாள் இ.சேவைகளை வழங்குபவர் அந்தசேவைகளை வழங்கும்போது அதனோடுகூடவே வழங்கிய விற்பணைபட்டியலில் குறிப்பிட்டநாளிலிருந்துஅறுபது நாள் குறிப்பு மேலேகூறியசூழலிலும் சேவைகளை வழங்கிய நாளினை கண்டுபிடித்திடமுடியாதபோது சேவைகளை பெறுபவரின் கணக்குப்பதிவேடுகளில் அந்த சேவைகளுக்காகத்தொகை வழங்கப்பட்ட நாளாக பதிவுசெய்யப்பட்ட நாளே கணக்கில் கொள்ளப்படும் இவ்வாறு RCMஇன் படி சசேவவரிசெலுத்திடும்போது உள்வரும்வரவினங்களை கழித்து கொண்டு மிகுதி தொகை செலுத்திடும் வசதியான ITCஐ கணக்கில் கொள்ளாமல் முதலில் RCMஇன் படி சசேவ வரியை ரொக்கப்பேரேட்டின் வாயிலாக செலுத்தியபின்னர் மற்ற சசேவவரி செலுத்திடும் தொகையில் இவ்வாறு RCMஇன் படிரொக்கமாக செலுத்திய தொகையை ITCஐ கணக்கில் கொண்டு கழித்ததுபோக மிகுதி தொகைய செலுத்திடலாம் இந்த RCMஇன் படி சசேவ வரியானது ஒவ்வொருமாதத்தின் தொகையும் அதற்கடுத்த மாதம் 20 தேதிக்குள் செலுத்திடவேண்டும் படிவம் எண்GSTR 2 ஐ தயார் செய்திடும்போது இந்தRCMஇன் படி செலுத்தப்பட்ட சசேவ வரியானது தானாகவே திரையில் காண்பிக்காது நாம் தான்அவ்வாறான விவரங்களை உள்ளீடு செய்திடவேண்டும் மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் இந்த RCMஇன் படியான வசதியை சசேவஇன் கீழ் பயன்படுத்தி கொள்ளமுடியாது ஒரே மாநிலத்திற்குள் நடைபெறும் விற்பணைநடவடிக்கைகளில் மட்டும் இந்த RCMஇன் படியான வசதியை சசேவஇன் கீழ் பயன்படுத்தி கொள்ளமுடியும் என்ற செய்தியை மனதில் கொள்க Self-invoicing எனும் வசதியை கொண்டு இந்த RCMஇனை பயன்படுத்தி கொள்ளமுடியும் ஆயினும் இதனை செயல்படுத்திடுவதற்கான ClearTax GST எனும் மென்பொருளை பயன்படுத்தி Self-invoicingஇன்படி பட்டியலைநாமே தயார்செய்திட வேண்டும் ஏனெனில் பொருட்களை வழங்குபவர் அல்லது சேவைகளை வழங்குபவர் சசேவ இன்கீழ் பதிவுபெறாதவர் என்பதால் அவர் சசேவஇன்படி விற்பணைபட்டியலை தயார்செய்ய வேண்டிய அவசியமில்லாது போகின்றது . பின்வரும் படிமுறைகளை பின்பற்றி Self-invoicing என்பதன்படி ClearTax GST எனும் மென்பொருளை பயன்படுத்திபெறுபவரே பட்டியலை உருவாக்கி கொள்ளமுடியும் முதலில் New Purchase Invoice எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் தோன்றிடும் திரையின் Invoice Serial Number என்ற புலத்தில் இந்தபட்டியலிற்கான வரிசை எண்ணை உள்ளீடு செய்து கொள்க Invoice Date என்ற புலத்தில் பொருளை அல்லது சேவையை பெற்ற நாளினை உள்ளீடுசெய்திடுக Reference Number என்ற புலத்தில் இந்த பொருளை அல்லது சேவையை பெறுவதற்காக நாம் வழங்கிய கொள்முதல் உத்திரவு எண்ணை உள்ளீடு செய்திடுக Due Date என்ற புலத்தில் நாம் இதனை வழங்குபவருக்கு தொகையைவழங்கஉத்தேசித்து இருக்கும் நாளினை உள்ளீடு செய்திடுக Vendor Name எனும் புலத்தில் இந்த பொருளை அல்லது சேவையை வழங்கியவரின் பெயரையும் முகவரியையும் உள்ளீடு செய்திடுக எச்சரிக்கைஇந்த புலத்தில் கண்டிப்பாக நம்முடைய பெயரை உள்ளீடு செய்திடாதீர்கள் பொருள் அல்லது சேவையின் விவரங்களையும் தொகை விவரங்களையும் அவைகளுக்கான புலங்களில் உள்ளீடு செய்திடுக Advance Settings என்பதன் கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து Reverse Charge’ என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து கொள்க அனைத்து புலங்களிலும் தேவையான விவரங்களை உள்ளீடுசெய்ததை உறுதி செய்து கொள்க இறுதியாக Save. எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து சேமித்து கொள்க

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...