திங்கள், 13 ஏப்ரல், 2020

சசேவ (GST)பதிவுஎண்இல்லாமலேயே பொருட்களை மின்னனுவழிபட்டியலுடன் கொண்டுசெல்லலாம்


உதாரணமாக அ என்பவர் திருப்பூரில் பனியன் உற்பத்திசெய்திடும் சிறுதொழில் நிறுவனர் அவருடைய நிறுவனத்தின் ஆண்டு விற்பணை வருமானம் ரூ.20/- இலட்சங்களுக்குள் (அல்லது புதிய விற்பணைவருமானவரம்பு ரூ40/-இலட்சங்களுக்குள்) உயர்த்தப்பட்டுள்ளது உள்ள ஒரு சிறுதொழில் நிறுவனம் என்பதால் GST இல் பதிவு எண் பெறாமல் தன்னுடைய தொழிலை நடத்திவருகின்றார் ஆனாலும் அவர் இந்த GST யை நடைமுறைபடுத்தப்பட்ட பிறகு தன்னுடைய உற்பத்தி பொருட்களை தமிழ்நாட்டிற்குள் அல்லது மற்றமாநிலங்களுக்கு அனுப்பிடும்போது மின்னனுவழி பட்டியலுடன் (E-Way Bill) மட்டுமே அனுப்பவேண்டுமா? ஆம் எனில் GST இல்பதிவு எண் பெறாத அவரால் இந்த E-Way Bill ஐ தயார்செய்து தன்னுடைய உற்பத்தி பொருட்களை அனுப்பமுடியுமா? என்ற மிகப்பெரிய கேள்விக்குறி அவர்முன் எழுந்து என்ன செய்வதுஎன தடுமாறி நிற்கின்றார் இந்நிலையில் அதற்காக கவலைப்படாதீர்கள் இவ்வாறானவர்களுக்கு உதவுதற்காகவே GSTஇன் இணையதளத்தில் E-Way Bill for Citizensஎனும் வாய்ப்பு தயாராக இருக்கின்றது இதற்கான தீர்வினை காண்பதற்குமுன் மின்னனு வழிபட்டியல் என்றால் என்னவெனஅறிந்து கொள்க மின்னனு வழிபட்டியல் என்பது GST இல்பதிவு எண் பெற்று வியாபாரம் செய்திடும் நபரொருவர் அல்லது GSTAஇல் பதிவுபெற்ற பொருள் போக்குவரத்து செய்திடும் நபரொருவர் பொருட்களை கொண்டுசெல்லும்போது அவைகளுடன் கூடவே அவைகளுக்கான ஆதார ஆவணமாக கொண்டுசெல்வதே மின்னனு வழிபட்டியலாகும் ஒரு மாநிலத்திற்குள் அல்லது மாநிலங்களுக்கிடையே ரூ. 50,000 மதிப்பிற்கு மேல்பொருட்களை கொண்டுசெல்லும்போது கண்டிப்பாக இந்த மின்னனு வழிபட்டியலுடன் மட்டுமே பொருட்களை கொண்டு செல்லவேண்டும் இந்தமின்னனு வழிபட்டியலை உருவாக்குவதற்காக தனியாக E-Way Bill System எனும் தளம் உதவத்தயாராக இருக்கின்றது GST இல்பதிவு பெற்றவர் ரூ. 50,000மதிப்பிற்கு மேல்பொருட்களை கொண்டு செல்லும்போது இந்த தளத்தில் இவ்வாறான மின்னனுவழி பட்டியலை உருவாக்கி அச்சிட்டு கொண்டுசெல்லலாம் GST இல்பதிவு பெறாதவரிடமிருந்து GST இல்பதிவு பெற்றவர் ரூ. 50,000 மதிப்பிற்கு மேல்பொருட்களை பெறும்போது பொருட்களை பெறுபவர் இந்த மின்னனு வழிபட்டியலை உருவாக்கி அச்சிட்டுக் கொண்டு செல்லவேண்டும் சாலைவழி , தொடர்வண்டிவழி ,வான்வழி ஆகியவற்றின் வாயிலாக ரூ. 50,000 மதிப்பிற்கு மேல்பொருட்களை கொண்டுசெல்லும் பொருள்போக்குவரத்தாளர் கண்டிப்பாக இந்த மின்னனு வழிபட்டியலுடன் மட்டுமே அவைகளை கொண்டு செல்ல வேண்டும் GST இல்பதிவு பெறாதவர் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி இந்தமின்னனுவழி பட்டியலை உருவாக்கி அச்சிட்டு கொள்ளலாம் 1. முதலில் E-Way Bill System எனும் தளத்திற்குள் செல்க 2. பின்னர் அதிலுள்ள Registration எனும் பட்டியில் E-Way Bill For Citizens எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக 3. தொடர்ந்து விரியும் திரையில் Generate New EWB எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக 4. பின்னர் விரியும் விண்ணப்ப படிவத்தில் தேவையான அனைத்து விவரங்களையும் நிரப்பிடுக இவ்வாறு விவரங்களை நிரப்பிடும்போது மிகமுக்கியமாக நாம் பொருட்களை கொள்முதல் செய்கின்றோம் எனில் Inward Option -எனும் வாய்ப்பினையும் நாம் பொருட்களை விற்பணை செய்கின்றோம் எனில் Outward Option -எனும் வாய்ப்பினையும் தெரிவுசெய்து கொள்க நாம் GST இல்பதிவு பெறாதவர் என்பதால் GSTIN எனும் புலத்தில் URP என உள்ளீடு செய்து கொண்டு இறுதியாக Submit எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக 5. இதனை தொடர்ந்து இறுதியாக நமக்கான மின்னனு வழிபட்டியல்(E-Way Bill) ஒன்றுஉருவாகி திரையில் பிரதிபலிக்கும் அதனை அச்சிட்டுகொள்க இதனை தொடர்ந்து பொருள் போக்குவரத்தாளர் இந்த மின்னனு வழிபட்டியலுடன் குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டுசெல்லலாம் இந்த E-Way Bill For Citizens எனும் வாய்ப்பானது விற்பணைவருமான மதிப்பு ரூ.20 இலட்சங்களுக்குள் (அல்லது புதிய விற்பணைவருமானவரம்பு ரூ40/-இலட்சங்களுக்குள்) உள்ள பொருட்களை கொண்டு செல்லபேருதவியாக இருக்கும் .

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...