ஒருமுறை ஒரு பணக்காரர் சாலையோரத்தில் ஒரு இளம் பிச்சைக்காரனைப் பார்த்தார், அப்பணக்காரர் அப்பிச்சைக்காரனிடம் சென்று, "நீங்கள் பணிசெய்வதற்கு ஏற்ற உடல்ஆரோக்கித்துடன் இருக்கும்போது ஏன் பிச்சை எடுக்கிறீர்கள்?" என வினவினார்
அதற்கு பிச்சைக்காரன், “நான் பட்டதாரி, பலநிறுவனங்களிலும் முயற்சித்தேன் ஆனால் எனக்குட்டும் பணிசெய்வதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை, ஆயினும் . எனக்கு வேலை கிடைத்தால் உடன் பிச்சை எடுப்பதை நிறுத்திவிடுவேன்." என க்கூறினார்
பணக்காரர் "சரி, என்னால் உனக்கு பணிவாய்ப்பு கொடுக்க முடியாது, ஆனால் அதற்கு பதிலாக வேறு ஏதோ நன்றாக செய்யலாம் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது, நீ ஏன் என்னுடைய ஒரு தொழிலக்ததின் கூட்டாளியாக ஆகக்கூடாது"
உடன் அப்பிச்சைக்காரன் பணக்காரர் சொன்னதை நம்ப முடியாமல், “என்ன சொல்கிறீர்கள், உங்களுடன் தொழில் கூட்டாளிவது சாத்தியமா?” என்று சந்தேகம் கேட்டான்.
பணக்காரன், “ஆம், இந்த நகரத்தில் எனக்கு ஒரு கடை உள்ளது, அதை நீங்கள் என்னுடைய கூட்டாளியாக சேர்ந்த நடத்திடலாம். ஒவ்வொரு மாத இறுதியிலும் அந்த கடையி்ல் கிடைக்கின்ற இலாபத்தை நாமிருவரும் பகிர்ந்து கொள்வோம்” எனக்கூறினார்
இதைக்கேட்டதும்பிச்சைக்காரனின் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வந்தது, "நீங்கள் ஒரு ஆபத்துதவியாளராக வந்திருக்கின்றீர்கள். நான் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை" என தழுதழுத்த குறளில் கூறினான்.
தொடர்ந்து அப்பிச்சைக்காரன் அத்தொழிலதிபரிடம், "நாமிருவரும் அந்த கடையில் கிடைக்கின்ற இலாபத்தை எந்த அடிப்படையில் பகிர்ந்து கொள்வோம்?" என வினவியபோது பணக்காரர் " நான் 20% , நீங்கள் 80% அல்லது நான் 10% நீங்கள் 90% என்றவாறு அந்த கடையில் கிடைக்கின்ற இலாபத்தினை நாமிருவரும் பகிர்ந்து கொள்வோம் நீங்கள் இவ்விரண்டில் எதனை தெரிவு செய்தாலும், அதற்கு நான் தயாராக இருக்கிறேன்"" என கூறினார்
பணக்காரர் சிரித்துக்கொண்டே, "எனக்கு 10% இலாபம் , நீங்கள் 90% இலாபம் எடுத்துக்கொள்ளலாம், அதனால் நீங்கள் வாழ்வில் நன்றாக முன்னேறலாம்" என்றார்.
இதைக் கேட்ட அப்பிச்சைக்காரன் அப்பணக்காரணின் காலில் விழுந்து அழ ஆரம்பித்தான்.
அடுத்த நாள் முதல், பிச்சைக்காரன் பணக்காரனின் கடையை கூட்டாளியாக சேர்ந்து நடத்த ஆரம்பித்தான். அந்த க்கடையின் விற்பனை அதிகரிப்பதற்காக காலநேரம் பார்க்காமல் அவர் கடுமையாக உழைத்தார். பின்னர் அந்த மாதம் முடிந்த இலாபத்தை பகிர்ந்து கொள்ளவேண்டிய நாள் வந்தது கூறியவாறு அப்பணக்காரருக்கு இலாபத்தில் 10% வேண்டியிருந்தது.
அப்போது திடீரென்று பிச்சைக்காரன், "நான் இரவும் பகலும் கடினமாக உழைத்தேன், அந்த பணக்காரர் எனக்கு வாய்ப்பு கொடுத்ததைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை, பிறகு நான் ஏன் இந்த 10% இலாபத்தினை பணக்காரனக்கு கொடுக்க வேண்டும்?" என சிந்திக்க ஆரம்பித்தான்
குறிப்பிட்ட நாளில் பணக்காரர் அந்த கடையின் தனது 10% இலாப பங்கை சேகரிக்க ல் வந்து சேர்ந்தார்
அப்பணக்காரன் அந்த கடையின் தன்னுடைய இலாபப் பங்கைக் கேட்டபோது, பிச்சைக்காரன் "இன்னும் போனமாத கணக்கீடு முடிக்கவில்லை.கடைக்கு வரவேண்டிய தொகை கொஞ்சம் நிலுவையில் உள்ளது.." என்று வேறு சாக்குபோக்கு சொல்ல ஆரம்பித்தான்.
பிச்சைக்காரன் தனக்குப் பங்களிப்பதைத் தவிர்க்கிறான் என்பதைப் புரிந்துகொண்ட அப்பணக்காரன், "நீ இந்த கடையில் எவ்வளவு இலாபம் ஈட்டியிருக்கிறாய் என்று எனக்குத் தெரியும், நம்முடைய ஒப்பந்தத்தின்படி ஏன் என்னுடைய பங்கைக் கொடுக்காமல் தவிக்கிறாய்?" என வினவிபோது
உடன் பிச்சைக்காரன் , "உனக்கு இந்த கடையின் இலாபத்தில் எந்தப் பங்கும் கிடையாது, ஏனென்றால் இந்த கடையில் அல்லும் பகலும் நான்மட்டுமே கடுமையாகஉழைத்தேன் நீங்கள் என்னை போன்று உழைக்கவே இல்லை இலாபத்தை மட்டும் நான் எப்படி உங்களுக்கு பகிர்ந்து தரமுடியும்ப்பையும் ." என மிகக்கராராக கூறினான்
இப்போது யோசியுங்கள்... நாம் அந்த பணக்காரராக இருந்து, பிச்சைக்காரனிடம் இப்படி ஒரு பதிலை கேட்டிருந்தால் நாம் என்ன செய்திருப்போம்?
அதேபோன்று இந்த உலகில் நாம் வாழ்வதற்கான அனைத்து வசதி வாய்ப்புகளையும் இயற்கை நமக்கு வழங்கிகொண்டிருக்கின்றது நாம் நம்முடைய உடலுழைப்பை மட்டும் கொண்டு நான் தான் அனைத்தும் செய்தேன் என இந்த இயற்கையை நமக்கு பின்னர்வருகின்ற சந்ததிகள் பயன்படுத்த முடியாமல் செய்து கொண்டிருப்பது சரியா என அனைவரும் தங்களுடைய மனதில் கேளுங்கள்
ஞாயிறு, 18 ஜூன், 2023
பணக்காரனுக்கும் பிச்சைக்காரனுக்கும் இடையிலானஇலாபப் பகிர்வு
ஞாயிறு, 11 ஜூன், 2023
மேலுலகத்திற்கான நாணயம் எது?
ஒரு மனிதன் தனது வாழ்நாள் முழுவதும் கடினமாக உழைத்து, 50 வயதை எட்டியபோது, அவர் பல தொழில்நிறுவனங்களைத் துவங்கியதால் அந்நகரின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவராக உயர்ந்தார்.
அத்தொழில்அதிபர் ஒரு நாள், தனது மகிழ்வுந்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது, அவ்வண்டியின் ஓட்டுனர் சத்சங்க கேட்பொலியை இயக்கினார். அதில், துறவி ஒருவர் - நீங்கள் உங்கள் கைகளையும் கால்களையும் கொண்டு எவ்வளவு அதிக கடினமாக உழைத்தாலும், நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தாலும், நீங்கள் இவ்வுலகிற்கு வந்ததைப் போன்றே வெறும் கைகால்களுடன் மட்டுமேஇவ்வுலகைவிட்டு விடைபெறுவீர்கள். எனக்கூறினார் மேலும் இதுகுறித்து- உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் எதைச் சம்பாதித்தீர்களோ அல்லது உங்கள் வாழ்நாள் முழுவதையும் எதற்காக செலவழித்தீர்களோ, அது வீடு, பணம், புகழ் அல்லது வேறு எதுவாக இருந்தாலும், அதை உங்களால் ஒருபோதும் நீங்கள் இறக்கும்போது உங்களோடு கூடவே கொண்டசெல்ல முடியாது. எனமிக நீண்ட விளக்கமளித்தார்
இதைக் கேட்ட தொழிலதிபர், தான் இவ்வளவு சம்பாதித்து,பெயரும் புகழும் அடைந்தும் தான் இறந்த பிறகு தன்னுடன் எதுவும் கொண்டுபோக போவதில்லையா என்று நினைக்க ஆரம்பித்தார். அதனால், இவ்வளவுநாள் சம்பாதித்ததை தான் இறக்கும் போது தன்னோடு கூடவே எடுத்துச் செல்வதற்கான வழியை தேட ஆரம்பத்தார்.
அன்றிலிருந்து அந்த தொழிலதிபர் இரவும் பகலும் அது குறித்துமட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்தார். ஆனாலும் தான்மட்டும் எவ்வளவுதான் சிந்தித்தாலும் தனக்கு அதற்கான வழி கிடைக்காது என புரிந்து கொண்ட பிறகு, தன்னால் அதற்குமேல் அதுகுறித்து சிந்திக்க முடியாது என்று முடிவு செய்தார்
எனவே, ஒரு நாள் அவர் தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரியும் தனது பணியாளர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் கூட்டி, தான் இறந்த பிறகு தான் சம்பாதித்த தன்னுடைய பணத்தை எவ்வாறு தன்னுடன் எடுத்துச் செல்வது என்று தனக்கு சிறந்த ஆலோசனை கூறினால், அந்த நபருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசளிப்பதாக அறிவித்தார்.
அதன்பின்னர் அவருடைய நிறுவனத்தில் பணிபரியும் பணியாளர்கள் அனைவரும் அதைப் பற்றியே விவாதிக்கத் தொடங்கினர், ஒரு வாரம் கழித்து, யாராலும் அதுகுறித்த சிறந்த ஆலோசனையை அவருக்கு கூற முடியவில்லை.
எனவே, அவர் மீண்டும் தனது பணியாளர்கள் அனைவரையும் கூட்டி, இந்த முறை தனக்கு ஆலோசனை கூறக்கூடிய நபருக்கு ஐந்து கோடி ரூபாய் தருவதாக உறுதியளித்தார், ஆனால் இந்த முறை இந்த பரிசானது ஊழியர்களுக்கு மட்டுமல்லாது பொதுமக்களுக்கும் பொருந்தும் எனக் கூறியிருந்தார் மேலும் அந்நகரம் முழுவதும் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது அதனால், அந்த நகரம் முழுவதும் இவ்வாறான ஆலோசனை கூறுவது குறித்தும் அதற்கான பரிசுத்தொகை குறித்தும் மிகபரபரப்பாக பொதுமக்கள் அனைவராலும் விவாதிக்கப்பட்டது.
அடுத்த நாள் அந்த நகரில் வாழும் ஒருவர் அத்தொழிலதிபரின் வீட்டை அடைந்து, 'உங்களுக்கு வேண்டிய ஆலோனையை நான் வழங்கத் தயாராக இருக்கின்றேன் ஆனால் அதற்கு முன் என்னுடைய கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும்' என்றார்.
அதற்கு தொழிலதிபரும் ஒப்புக்கொண்டார்.
அம்மனிதன் தொழிலதிபரிடம், 'நீங்கள் எப்போதாவது அமெரிக்கா சென்றிருக்கிறீர்களா?' என்று வினவிபோது உடன் தொழிலதிபர் , 'ஆம். பல முறை. சென்றிருக்கின்றேன். ' என பதிலளித்தார்
அம்மனிதன், 'அப்பயனங்களின்போது எந்த பணத்தை அந்த நாட்டில் உபயோகிக்க அங்கு கொண்டு செல்கின்றீர்கள்?' என வினவியபோது
தொழிலதிபர், "நான் விமான நிலையத்திற்கு சென்றடைந்த, பின்னர் நம்முடைய நாடடு பணத்தை அமெரிக்காவில் பயன்படுத்தக்கூடிய டாலர்களாக மாற்றிக்கொள்கிறேன்." என பதிலளித்தார்
இப்போது அம்மனிதன் தொழிலதிபரிடம் வெவ்வேறு நாடுகளின் பெயர்களை ஒன்றன் பின் ஒன்றாகச் சொல்லி அதே போன்ற கேள்விகளைக் கேட்டபோது, ஒவ்வொரு முறையும் தான் பயனம் செய்ய விழையும் குறிப்பிட்ட அந்த நாட்டின் பணமாக விமான நிலையத்தில் மாற்றிக் கொண்டு எடுத்துச்செல்வேன் அவ்வாறாக மாற்றிய அந்தந்த நாட்டின் பணத்தை அந்தந்த நாட்டில் பயன்படுத்திக்கொள்வேன் என்று பதிலளித்தார்.
இவ்வாறு அந்த மனிதன் ஒவ்வொரு நாடாக தான் பயனம் செய்வது குறித்து கேள்வி கேட்பதை கண்டு அத்தொழிலதிபர் மிகஅதிகஎரிச்சலடைந்தார். தொழிலதிபர் அந்த மனிதனிடம் “ஏன் திரும்பத் திரும்ப ஒரே கேள்வியைக் கேட்கிறாய்? என்னுடைய மரணத்திற்குப் பிறகு எனது பணத்தை நான் எவ்வாறு என்னுடன் எடுத்துச் செல்ல முடியும் என்பதற்கான தீர்வை மட்டும் எனக்கு நேரடியாக கூறிடுங்களேன்* எனமிக எரிச்சலுடன் கேட்டார்
உடன் அம்மனிதன் சிரித்துக்கொண்டே, “இதைத்தான் நான் உங்களுக்கு புரியவைக்க முயற்சிக்கிறேன்.. நீங்கள்குறிப்பிட்ட நாட்டிற்கு பயணம் செய்யும் துவங்கிடும்போது நம்முடைய நாட்டின் பணத்தை அந்தந்த நாட்டின் பணமாக மாற்றுவது போன்று.
நீங்கள் இறப்பதற்கு முன் உங்களுடைய எல்லாப் பணத்தையும் மேலுலகத்திற்கான நாணயமாக மாற்றிக் கொள்ள வேண்டும். அதன்பின்னர் குறிப்பிட்ட நாட்டிற்கு பயனம் செய்திடும்போது அந்த நாட்டின் பணத்தை உடன் எடுத்து செல்வதை போன்ற அதனை மிக எளிதாக எடுத்தச் செல்லமுடியும் என மிக நீண்ட விளக்கமளித்தார்
இவ்வாறான அந்த மனிதரின் விளக்கத்தை கேட்டு அத்தொழிலதிபர் மிக அதிக குழப்பமடைந்து, "நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? மேலுவலகத்திற்கான நாணயம் எது?" என வினவினார்
உடன் அம்மனிதன் “மேலுலகத்தின் நாணயம் அறம் செய்தல். உங்களுக்கு நல்லொழுக்கத்தைத் தரும் இதுபோன்ற அறப்பணிகளில் உங்கள் பணத்தைப் பயன்படுத்துங்கள். நீங்கள் இறந்த பிறகும் நீங்கள் சம்பாதித்த பணத்தை உங்களுடன் எடுத்துச் செல்ல ஒரே வழி அதுதான். எனக்கூறினார்.
தொழிலதிபர் அந்த மனிதனின் கருத்தை புரிந்து கொண்டார். அவர் பரிசுபணத்தினை உறுதியளித்தவாறுஅம்மனிதனுக்கு வழங்கினார் அவரது வாழ்நாள் முழுவதும் பொதுமக்களுக்கும் தொண்டும் ஏழைஎளியவர்களுக்கு சேவை செய்தும் தன்னுடைய அறப்பணிகளை செய்யத்துவங்கினார்.
செவ்வாய், 6 ஜூன், 2023
பொய் சொன்ன வேலைக்காரனுக்கு அக்பர் அளித்த தண்டனை
ஒரு நாள், வேலைக்காரன் ஒருவன் பேரரசர் அக்பரின் படுக்கையறையை சுத்தம் செய்துகொண்டிருக்கும் போது, அவ்வேலைக்காரன் கையிலிருந்து ஒரு குவளை விழுந்து உடைந்துவிட்டது. அது அக்பருக்கு மிகவும் பிடித்தமான குவளையாகும் என்பதால் வேலைக்காரன் பயந்து போனான். அவ்வேலைக்காரன் உடைந்த குவளையின் எல்லா துண்டுகளையும் சேகரித்து இரகசியமாக வெளியில் கொண்டுசென்று எறிந்துவிட்டுவந்தான். அப்போது அக்பர் தன்னுடைய படுக்கையறைக்கு வந்துசேர்ந்தார் அப்போது, அவ்வறையில் தனக்குப் பிடித்தமான குவளை காணவில்லை என தெரிந்துகொண்டார் . உடன் அக்பர் அவ்வேலைக்காரனை அழைத்து அதைப் பற்றி கேட்டார் .அதனைதொடர்ந்து பயத்தால் வேலைக்காரன் , "நான் அந்த குவளையை சரியாக சுத்தம் செய்வதற்காக என் வீட்டிற்கு எடுத்துச் சென்றேன்" என பொய் சொல்லிவிட்டான். அதனால் அக்பர் அந்த அவ்வேலைக்காரணிடம் அவனுடைய வீட்டிற்கு சென்று அந்த குவளையை உடனடியாக தனது படுக்கைஅறைக்கு எடுத்துக்கொண்டு வரும்படி கட்டளையிட்டார். அவ்வாறு அக்பர் உத்தரவு இட்டதும், தன்னால் உண்மையை மறைக்க முடியாது என தெரிந்து கொண்ட, அவ்வேலைக் காரன் நடந்த அனைத்தையும் அக்பரிடம் கூறி, கைகூப்பி மன்னிப்பு கேட்க ஆரம்பித்தான். தன்னிடம் அவ்வாறு பொய் சொன்ன வேலைக்காரன் மீது அக்பர் அதிக கோபமடைந்தார். அதனால் உடனே அவ்வேலைக்காரனுக்கு மரண தண்டனை விதித்தார். அதனால் மேலும் பயந்து போன அவ்வேலைக் காரன் கைகளிரண்டையை கட்டிக்கொண்டு அக்பரிடம் தன்னை மன்னித்து விடும்படி மன்றாடி கேட்டுக்கொண்டே இருந்தான் ஆனால் அக்பர் அவனுடைய கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. அடுத்த நாள், அக்பர் தனது அரசவையில் இந்த செய்தியை ஒரு விவாதப் பொருளாக ஆக்கி, "உங்களில் யாராவது பொய் சொன்னீர்களா?" என பொதுவவாக வினவினார் அரசவையிலிருந்த அனைத்து உறுப்பினர்களும் ஒரே குரலில் தாங்கள் வாழ்நாளில் யாரும் பொய்கூறியதே இல்லையென மறுத்துவிட்டனர். அதனால் அக்பர் முதலில் நேரடியாக பீர்பாலிடம் அதைய கேட்டபோது, பீர்பால் "அரசே, எல்லோரும் சில நேரங்களில் ஏதாவது ஒரு பொய் கண்டிப்பாக கூறிடுவார்கள். அதன்படி நானும் பொய்கூறியிருக்கிறேன். ஆயினும் அந்த பொய்யானது யாருக்கும் தீங்கு செய்யாதது எனில் பொய் சொல்வதில் எந்தத் தீங்கும் இல்லை என்று நினைக்கிறேன்." என பதிலளித்தார், இதைக் கேட்டு மிகவும் கோபமடைந்த அக்பர் பீர்பாலை அரசவையிலிருந்து உடனடியாக வெளியேறிடுமாறு உத்திரவிட்டார். அக்பரின் உத்திரவின் படி பீர்பாலும் அரசவையிலிருந்து வெளியேறினார், ஆனால் வேலைக்காரனின் மரண தண்டனை குறித்து அவர் கவலைப் பட்டார். எனவே, வேலைக்காரணைக் காப்பாற்றுவதற்கான வழியை யோசிக்க ஆரம்பித்தார். அவவாறு ஆலோசித்தப் பிறகு, அவர் ஒரு பொற்கொல்லர் கடைக்குச் சென்று, தங்கத்தால் நெல் (அரிசியாக அரைக்கப்படாத நெல்) செய்யச் சொன்னார். மறுநாள் காலை பொற்கொல்லரும் பீர்பாலுக்கு அவர்கோரியவாறு தங்கத்தால் செய்யப்பட்ட நெல்லைக் கொடுத்தார். அந்த தங்க நெல்லை எடுத்துக்கொண்டு பீர்பால் அக்பரின் அரசவைக்குச் சென்றார். அரசவையிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகும் கூட பீர்பால் அரசவைக்குள் வருவதற்கான துணிச்சலைக் கண்டு அக்பர் அதிக கோபமடைந்தார். இருந்தபோதிலிரும் பீர்பால் அக்பரிடம் தங்க நெல்லைக் காட்டி, , "அரசே, நான் உங்களிடம் ஒரு முக்கியமான செய்தியொன்றை சொல்ல விரும்புகின்றேன், அதனால்தான் நான் இன்று அரசவைக்குள் உங்களுடைய உத்திரவை மீறி இங்கு வந்தேன். நேற்று மாலை, வீட்டிற்குச் செல்லும் போது, நான் ஒரு துறவியைச் சந்தித்தேன். அவர் இந்த தங்க நெல்லை என்னிடம் கொடுத்து, இதை ஏதாவது விளை நிலத்தில் விதைக்குமாறும் . இதை விதைத்தால் அந்த வயலில் பொன்நெல்லாக விளையும். என்றும் அறிவுரைவழங்கினார் நான் ஒரு வளமான நிலத்தைக் கண்டுபிடித்திருக்கின்றேன். அந்த வயலில் இதனை விதைக்க எல்லா அரசவை உறுபபினர்களும் நீங்களும் வரவேண்டும் என நான் வேண்டி கேட்டுகொள்கிறேன் இந்த தங்க நெல்லை அவ்வயலில் விதைத்தால் தங்கநெல்லாக விளையும் எனஅத்துறவி சொன்னது உண்மையா இல்லையா என்பதை சரி பார்க்கலாம். ” என மிகநீண்ட விளக்கமளித்தார் அக்பரும்ஒப்புக்கொண்டார், அடுத்த நாள் காலைபத்துமணிக்கு அனைத்து அரசவைஉறுப்பினர்களையும் அந்த விளைநிலத்திற்குவந்துசேருமாறு கட்டளையிட்டார். அடுத்த நாள், அனைவரும் வயலிற்கு வந்துசேர்ந்ததும், அக்பர் பீர்பாலிடம் அந்த தங்க நெல்லை வயலில் விதைக்கச் சொன்னார். ஆனால் பீர்பால் மறுத்து, "அரசே இந்ததங்கநெல்லை என்னிடம் கொடுக்கும்போது, பொய் சொல்லாத ஒருவர் விதைத்தால்தான் தங்கநெல்லாக விளையும் என்று துறவி எனக்கு அறிவுறுத்தினார். அதனால் என்னால் இதை விதைக்க முடியாது. தயவுசெய்து இதை விதைப்பதற்கு அரசவையில் பொய்சொல்லாத ஒருவருக்கு உத்தரவிடுங்கள்.." எனக்கோரினார் உடன் தன்னுடைய அரசவை உறுப்பினர்களில் பொய்சொல்லாத ஒருவர் வயலில் அந்த தங்கநெல்லை விதைக்குமாறு கோரினார், யாரும் முன்வரவில்லை. எல்லோரும் ஏதாவது ஒரு முறை பொய் சொல்லியிருப்பார்கள் என்பதை அக்பர் புரிந்து கொண்டார். யாரும் முன்வராத போது, பீர்பால் அந்த தங்கநெல்லை அக்பரின் கைகளில் கொடுத்து, "இங்கு யாரும் பொய்சொல்லாதவர்கள் யாருமேயே இல்லை . அதனால் நீங்கள்தான் இதை விதைக்க வேண்டும்.." என்றார். ஆனால் அக்பர் கூட அந்த தங்கநெல்லை வயலில் விதைப்பதற்கு தயங்கி, "நானும் சின்ன வயசுல பொய் சொல்லிஇருக்கின்றேன். அதனால் என்னாலும் இதை விதைக்கமுடியாது" என்றார். இதைக் கேட்ட பீர்பால் சிரித்துக்கொண்டே, "பொற்கொல்லனிடம் இருந்துதான் இந்த தங்க நெல் எனக்கு கிடைத்தது. உலகில் உள்ளவர்கள் சிலநேரங்களில் பொய் சொல்கிறார்கள் என்பதை உங்களுக்குப் புரிய வைப்பதே எனது நோக்கம். யாருக்கும் தீங்கு செய்யாத பொய் பொய்யன்று" என்றார்.
ஞாயிறு, 28 மே, 2023
வெற்று காகிதம் - முதிய துறவியும் புகழ்பெற்றஅறிஞரும்
ஒருமுறை, நான்கு வேதங்களிலும் நன்கு தேர்ச்சி பெற்ற ஒரு புகழ்பெற்ற அறிஞர் ஒரு வயதான துறவியிடம் சென்று, "நான் வாழ்க்கையின் உண்மைதன்மையை அறிய விரும்புகிறேன், தயவுசெய்து எனக்கு வழிகாட்டுங்கள்" என்று கோரினார்.
உடன் அந்த வயதான துறவி , "நீங்கள் யார்?" என கேட்டபோது
அறிஞர், "என்னை உங்களுக்குத் தெரியாதா? நான் புனித நூல்கள் போன்ற பலவற்றையும் நன்கு கற்றறிந்தவன் அதனால் இந்த நகரத்தில் எனக்குப் பெரும் புகழ் உண்டு நான் பல வேதங்களை கற்றிருந்தாலும் இன்னும் வாழ்க்கையின் உண்மைதன்மையை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த உண்மைதன்மையைக் கண்டுபிடிக்கும் நம்பிக்கையில் நான் உங்களிடம் வந்தேன்." என அவர் கூறினார்
முதிய துறவி , "அப்படியா மிக்கநல்லது நீங்கள் உங்களுக்குத் தெரிந்ததை எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொண்டு வருகிறீர்களா, ஏனென்றால் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்தவற்றினை திரும்பவும் நான் கற்றுக் கொடுக்கத் தேவையில்லை. உங்களுக்குத் தெரியாத செய்திகளை மட்டுமே நாம் விவாதித்தால் நான் கற்றுக்கொடுத்தால் மட்டுமே அது உங்களுக்கு நல்லது." என அறிவுரைக்கூறினார்
அதனை தொடர்ந்து அவ்வறிஞர் உடன் தன்னுடைய இருப்பிடத்திறகு திரும்பி வந்து தனக்கு தெரிந்தவற்றை தான் கற்றுக்கொண்டவற்றை எழுதத் தொடங்கினார். அவற்றை முழுமையாக எழுதும்போது மூன்று வருடங்கள் கழிந்தன அவ்வளவு அறிவு அவருக்கு இருந்தது.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அவ்வறிஞர் ஆயிரக்கணக்கான பக்கங்கள் நிரப்பப்பட்ட பெரியபையுடன் அம்முதிய துறவியை காண திரும்பவும்சென்றார்.
அவ்வளவு அதிக பக்கங்களின் குவியலைகண்டஅம்முதிய துறவி, "இந்த வயதில் என்னால் இவ்வளவையும் படிக்க முடியாது. இதை இன்னும் சுருக்கிஎழுதிகொண்டுவாருங்கள்" என்றார்.
அவ்வறிஞர் திரும்பி சென்று முன்னர் எழுதியவைகளை சுருக்கமாக எழுதத் தொடங்கினார். அதற்கு மூன்று மாதங்கள் பிடித்தன.
மூன்று மாதங்களுக்குப் பிறகு, அவ்வறிஞர் மீண்டும் அம்முதியதுறவியிடம் சென்றார். இம்முறை அவ்வறிஞரிடம் மிகக் குறைவான பக்கங்களே இருந்தன, ஆனால் அவையும் நூறு பக்கங்களின்அளவு இருந்தன.
அவ்வயதான துறவி, "இதுவும் அதிகமாகும். என்னுடைய உடல் பலவீனமாகிவிட்டது. கண்கள் பலவீனமாகிவிட்டன, இவ்வளவு படிக்கக்கூட முடியாது. இவைகளின் சுருக்கமான சாராம்சத்தை மட்டும் என்னிடம் கொண்டு வாருங்கள்." எனக்கூறினார்
அவ்வறிஞர் திரும்பிச் சென்று ஏழு நாட்களுக்குப் பிறகு சில பக்கங்களாகத் தனது அறிவின் சாராம்சத்தை எழுதி கொண்டுவந்தார்.
அவ்வயதான துறவி அதைக் கண்டு, "உங்களுக்குத் தெரியும் எனக்குமிக வயதாகிவிட்டது, அதிகம் படிக்கமுடியாது. அதை இன்னும் சுருக்கமாகச் சொல்லுங்கள்" என்றார்.
அதைக் கேட்ட அவ்வறிஞருக்கு, அம்முதியதுறவி என்ன சொல்ல முயல்கின்றார் என்பது புரிந்தது, எனவே அவ்வறிஞர் உடனடியாக வேறொரு அறைக்குச் சென்று ஒரு வெற்றுக் காகிதத்தைக் கொண்டு வந்தார்.
அதைப் பார்த்து முதிய துறவி சிரித்துகொண்டே, "இந்த வெற்றுக் காகிதம் என்றால் நான் வெறுமையாக இருக்கிறேன், முற்றிலும் காலியாக இருக்கிறேன் என்று அர்த்தமாகும்.. இப்போது நீங்கள் புதிய செய்திகளை கருத்துகளை தெரிந்துகொள்ளவும், கற்றுக்கொள்ளவும் தகுதி பெற்றுள்ளீர்கள், ஏனென்றால் இப்போது உங்களுக்கு எதுவும் தெரியாது என்ற அடிப்படையை நீங்கள் புரிந்து கொண்டீர்கள்." என அறிவுரை கூறி தன்னுடைய கருத்துகளை கூறத்துவங்கினார்
சனி, 20 மே, 2023
அரசனின் ஆணையும் அமைச்சரின் ஆலோசனையும் -
முன்னொரு காலத்தில் ஒரு நாட்டில் ஒருமுறை, குறிப்பிட்ட ஒரு நபரின் முகத்தை காலையில் முதன்முதலாக பார்ப்பதால் ஏற்படுகின்ற ஆபத்து ,மோசமானஅன்றைய நிலை ஆகியவற்றினால் மிகப் பிரபலமானார் .அதனால் அவ்வூர் பொதுமக்கள் அனைவரும் காலையில் அக்குறிப்பிட்ட நபரை முதன்முதலில் காண்பதற்கே அஞ்சினர் அதனை தொடர்ந்த அவ்வூர் மக்கள் அனைவரும் சேர்ந்து அவரைப் பற்றி அந்நாட்டு அரசரிடம் புகார் செய்தனர்.
ஆயினும் இந்த செய்தியை அந்நாட்டு அரசன் நம்பவில்லை, எனவே அரசன் அதை தானே சரிபார்க்க முடிவு செய்தார். அதனால் ஒரு நாள், அரசன் அந்த நபரை தனது அரண்மனைக்கு அழைத்து, அவருக்கு தன்னுடைய அரண்மலையில் ஒருநாள் இரவு தங்க இடம் கொடுத்தார்.
அடுத்த நாள் காலையில் எழுந்தவுடன் தான் செய்யவேண்டியபணியை துவங்குவதற்கு முன் அரசன் அந்த நபரைச் சந்திக்க முடிவு செய்து அரசன் அக்குறிப்பிட்ட நபரின் முகத்தினை முதன்முதலில்ப் பார்த்தார். தொடர்ந்து அவ்வரசன் தன்னுடைய வழக்கமான பணிகளை செய்யத்துவங்கினார்
தற்செயலாக, அன்று கால அட்டவணையின் படி அரசன் தன்னுடைய பல்வேறு பணிகளை உடனடியாக முடிக்கவேண்டியிருந்ததால் அதிகவேலைபளு காரணமாக, அரசனால் அந்த நாள் முழுவதும் சாப்பிட நேரம் கிடைக்கவில்லை. எனவே, அந்த மனிதனின் முகம் உண்மையில் மோசமானது என்ற முடிவுக்கு மன்னர் வந்தார்.
எனவே, அரசன் அன்றை யநாள்முடிவில் அந்த மனிதனுக்கு மரண தண்டனை விதித்தார்.
மறுநாள் அந்நாட்டி்ன் அமைச்சர் ஒருவர் அரசனின் இந்த உத்தரவைப் பற்றி கேள்விப்பட்டு உடனடியாக மன்னரிடம் சென்று, "இந்த நிரபராதிக்கு ஏன் மரண தண்டனை விதிக்கிறீர்கள்?" என்று கேட்டார்.
அதற்கு மன்னன், "அமைச்சரே, நான் நேற்று . காலையில் என்னுடைய வழக்கமான அனைத்து பணிகளையும் துவங்குவதற்கு முன்இவரின் முகத்தைப் பார்த்ததனால், ஒரு நாள் முழுவதும் உணவு உண்ணக்கூட முடியவில்லை" என்றார்.
அதற்கு அமைச்சர், "அரசே! அந்த மனிதனின் முகத்தைநீங்கள் முதன் முதலாகப் பார்த்தீர்கள், அதனால் ஒரு நாள் முழுவதும் உங்களாால் உணவு உண்ணமுடியவில்லை, ஆனால் அந்த மனிதனைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். நேற்று காலையில் அந்த நபர் முதன் முதலில் பார்த்தது உங்கள் முகத்தைத்தான், அதனால் அவர் இன்று மரண தண்டனையைப் பெற்றார். இப்போது யாருடைய முகத்தை காண்பது மோசமானது ஆபத்தானது என நீங்களே முடிவு செய்யுங்கள். ." என க்கூறினார்
அமைச்சரின் இந்த விளக்கத்தைக் கேட்ட அரசன், இவ்வாறு சிந்தித்துப் பார்க்காததால் திடுக்கிட்டார்.
தொடர்ந்து அமைச்சர், "அரசே! எந்த ஒரு நபரின் முகத்தினையும் முதன்முதலாக பார்ப்பதும் மேசமானதும் ஆபத்தானதும் இல்லை, நாம் பார்க்கும் அல்லது நினைக்கும் விதம்தான் அவ்வாறாக இருக்கின்றது. அதனால் தயவு செய்து அவரை விடுவித்து விடுங்கள்" என்ற கோரிக்கைய வைத்தார்.
அரசன் அமைச்சர்ரி கூறிய செய்தியை புரிந்துகொண்டு உடன் அந்த நபருக்கு விதித்த மரணதண்டனையிலிருந்து அவரைவிடுவித்தார்
ஞாயிறு, 14 மே, 2023
அரசனுக்கு துறவி சலுகை - சிந்தனையில் மாற்றம்
முன்னொரு காலத்தில்ஒரு அரசன் ஒரு நாட்டினை ஆட்சி செய்தான், அவனுடைய அரசாட்சியின்போது நாட்டில் பணத்திற்கும் உணவுப் பொருட்களுக்கும் பஞ்சமில்லை. அவருடைய ஆட்சியின் கீழ் அவரது நாட்டு குடிமக்கள் மிகமகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
அவ்வாறான சூழலில் குறிப்பிட்ட ஒரு வருடத்தில், அவருடைய நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. பயிர்கள் கருகியகாய்ந்து போனதால், போதுமான மகசூல் கிடைக்கததால் விவசாயிகள் வரி செலுத்த முடியவில்லை. இதனால், வருவாய் குறைந்து, கருவூலம் காலியாகத் துவங்கியது.
இதைப் பார்த்த மன்னன் கவலையடைந்தான், மேலும் தன் குடிமக்களுக்கு பஞ்ச அல்லது வறட்சி நிவாரனம் எவ்வாறு வழங்குவது, அரசாங்கச் செலவுகளை எவ்வாறு கையாளுவது என அவ்வரசன் எப்போதும் யோசித்துக் கொண்டிருந்தார்.
வறட்சிமுடிந்த அந்நாட்டின் நிலைமை வழக்கமான சாதாரண நிலைக்கு மாறிவிட்டது, ஆனால் அவ்வரசன் கவலைப்படுவதை நிறுத்தவில்லை. மீண்டும் இதேபோன்ற பஞ்சம் ஏற்பட்டால், தனது நாட்டினை எவவாறு நிருவகிப்பது எனவர் எப்போதும் கவலைப்பட்டு கொண்டே இருந்தார். அண்டை நாடுகளுடனான போருக்கான பயம், மந்திரிகளின் சதி என பல கவலைகள் அவரது பசி, தாகம், மறந்த உறக்கமற்ற இரவுகளாகப் அவருக்கு ஆகிவிட்டது. அவர் தனது தற்போது நிலையைக் கண்டு மிக வருத்தமடைந்தார்.
ஒரு நாள் துறவி ஒருவர்அவரது அரசவைக்கு வந்தார், அரசன் தனது தற்போதைய பிரச்சினையை அத்துறவியிடம் கூறி, அந்த பிரச்சினையை தீர்வுசெய்வதற்கான தகுந்த ஆலோசனை கேட்டார்.
துறவி , "அரசனே இந்த அரசாட்சியே உன்னுடைய அனைத்து கவலைகளக்கும் அடிப்படைகாரணமாகும் அதனால் . இந்த அரசாட்சியை உன்னுடைய மகனுக்குக் கொடுப்பதன் மூலம் நீ கவலைதுமின்றி மிக மகிழ்ச்சியுடனஅ வாழமுடியும். .."எனக்கூறினார்
உடன் அவ்வரசன், "ஆனால் ஐயா என் மகனுக்கு ஐந்து வயதுதான் ஆகிறது அவனால் எவ்வாறு அரசாளமுடியும்.." என்றார்.
துறவியானவார், "சரிஅரசனே அவ்வாறாயின்,உன்னுடைய நாட்டின் அரிசாட்சியை என்னிடம் ஒப்படைக்கலாம், உன்னுடைய மன வருத்தத் தையும் கவலைகளையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்." எனக்கூறினார்
அம்மன்னன் உடனே சம்மதித்து தன்னுடைய நாட்டின அரசாட்சியை அத்துறவியிடம் ஒப்படைத்தார்
. இப்போது, துறவி அவ்வரசனிடம், " மிகவும் நன்று இப்போது நீ உயிர்வாழ்வதற்கான வருமானத்திற்கு என்ன செய்வீர்கள்? எவ்வாறு சம்பாதிப்பீர்கள்?"என வினவினார்.
அரசன், "அதனால் என்ன ஐயா நான் இப்போது ஏதாவது வியாபாரம் செய்து பிழைத்து கொள்ளலாம் என திட்டமிடுகின்றேன் ஐயா." என பதில் கூறினார்
உடன் அத்துறவி "மிகவும் நன்று ஆனால் அந்த வியாபாரத்திற்கு போதுமான பணத்தினை உன்னால் எவ்வாறு ஏற்பாடு செய்யமுடியும்? ஏனெனில் இப்போது அரசாட்சி என்னுடையது என்பதால் கருவூலப் பணத்தின் மீது எனக்கு உரிமை உள்ளது. அதை உன்னுடைய வியாபரத்திற்கு கண்டிப்பாக பயன்படுத்த முடியாது", என்றார் துறவி.
அதனை தொடர்ந்து அரசன் "அவ்வாறாயின் எனக்கு ஏதேனும் ஒரு வேலை கிடைக்குமா என தேடவேண்டும.",என பதிலளித்தார்.
உடன் அத்துறவி "மிகவும்நல்லது. ஆனால் நீ வேலையைச் செய்ய வேண்டும் என்றால், வேறு எங்கும் தேடிசெல்ல வேண்டிய அவசியமில்லை. இந்த அரசவையிலேயே நீ வேலை செய்யலாம்", எனபதிலளித்தார் .
அவ்வரசன் மிகவும் ஆர்வமாக, "நான் இந்த அரசவையில் என்ன வேலை செயயவேணடும்?" என்று கேட்டார்.
அதற்கு அத்துறவி சிரித்துக்கொண்டே, "நான் ஒரு துறவி, நான் என் குடிசையில் மட்டுமே தங்குவேன், அரண்மனையில் தங்கி, என் சார்பாக இந்த அரசாட்சியை நீயே நடத்து" என்றார்.
அவ்வரசன் ஏற்றுக்கொண்டு அத்துறவியிடம் வேலை செய்ய ஒப்புக்கொண்டார். அரசன தனது வேலையின் ஒரு பகுதியாக அரசு நிர்வாகத்தை கையாளத் தொடங்கினார். துறவி தன் குடிசைக்குச் சென்றுவிட்டார்
சில நாட்களுக்குப் பிறகு, துறவி மீண்டும் அரசவைக்கு வந்து அரசரைச் சந்தித்து, "இப்போது உங்களுக்கு பசிக்கிறதா , உங்கள் தூக்கம் எவ்வாறு இருக்கிறது?" என்று கேட்டார்.
உடன் அவ்வரசன் "ஐயா நான் இப்போது நிறைய சாப்பிட்டு நன்றாக தூங்குகிறேன்.ஆயினும் முன்பும் நான் இதே வேலையைத்தான் செய்தேன், ஆனால் அப்போது என்னால் சரியாக சாப்பிடவோ தூங்கவோ முடியவில்லை, ஆனால் இப்போது என்னால் அனைத்து செய்ய முடிகின்றது. இந்த மாற்றம் எவ்வாறு ஏற்பட்டது? இது என் புரிதலுக்கு அப்பாற்பட்டது. ", என தூவியியம் சந்தேகம் எழுப்பினார்.
உடன் துறவி சிரித்துக் கொண்டே, “முன்பெல்லாம் நீங்கள் இந்த அரசாட்சி பணியை எனும் உங்கள் மனதில் எப்போதும் பெரியசுமையாக கருதி சுமந்து கொண்டிருந்தீர்கள்
. ஆனால் அரசாட்சியை என்னிடம் ஒப்படைத்த பிறகு, அதை உங்கள் கடமையாகக் கருதி எல்லா வேலைகளையும் செய்கிறீர்கள்.
கற்றல்:வாழ்க்கையில் எந்த வேலையைச் செய்தாலும், அதை கடமையாகக் கருதி, அதைச் சுமையாகக் கருதாமல் செய்தால் நம்முடைய கவலையிலிருந்து விலகி இருக்க முடியும்.
ஞாயிறு, 7 மே, 2023
சிறிய ஒரே கல்லிற்கு வெவ்வேறு இடங்களின் வெவ்வேறுமதிப்பு
ஒரு நாள் மகன்ஒருவன் தன் தந்தையிடம் சென்று, "அப்பா, உயிரின் மதிப்பு என்ன?"
அப்பா சிரித்துக்கொண்டே சொன்னார், "உண்மையில் உன் உயிரின் மதிப்பைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், நான் சொல்வதைச் செய்ய வேண்டும். மகன் ஒப்புக்கொண்டான்
தந்தை ஒரு கல்லை வாங்கி மகனிடம் கொடுத்து, “மகனே, இதை எடு
சாலையோரத்தில் மார்க்கெட்டுக்கு கல், பிறகு சில இடத்தில் உட்கார வேண்டும். யாராவது அதன் விலையைக் கேட்டால், போடுங்கள்
உங்கள் இரண்டு விரல்களை மேலே. நீங்கள் அதை வீட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்."
அந்தக் கல்லைப் பார்த்த மகன் ஏன் இவ்வளவு எளிமையான கல்லை வாங்குவார்கள் என்று நினைத்தான். அப்போதும் அவன் தந்தை சொன்னபடி சந்தைப்பேட்டைக்குச் சென்று அங்கேயே சிறிது நேரம் அமர்ந்திருந்தபோது, ஒரு வயதான பெண் அவனிடம் வந்து, "இந்தக் கல்லின் விலை என்ன?"
பையன் எதுவும் பேசவில்லை, அப்பா சொன்னது போல் இரண்டு விரல்களை உயர்த்தினான். அதைப் பார்த்த அந்த பெண், "சரி.. இந்த கல்லை 200 ரூபாய்க்கு வாங்க ரெடி" என்றாள்.
சிறுவன் தன் தந்தையின் அறிவுறுத்தலின்படி அந்தக் கல்லை விற்கவில்லை, திரும்பி வந்தான். 200 ரூபாய்க்கு வாங்க அந்த பெண் தயாராக இருப்பதாக அவர் மகிழ்ச்சியுடன் தந்தையிடம் கூறினார்.
இப்போது அவனுடைய தந்தை, "இந்த முறை நீங்கள் அருங்காட்சியகத்திற்குச் செல்லுங்கள். அங்கேயும் இந்தக் கல்லின் விலையை யாராவது உங்களிடம் கேட்டால், முன்பு போல் இரண்டு விரலை உயர்த்துங்கள்" என்றார்.
சிறுவன் கல்லுடன் அருங்காட்சியகத்திற்குச் சென்றான். அங்கே ஒருவன் அந்தக் கல்லைப் பார்த்து, “என்ன விலை?” என்று கேட்டான்.
பையன் மறுபடி எதுவும் பேசாமல் "சரி. 20 ஆயிரம். வாங்குறேன்" என்று இரண்டு விரலை மட்டும் போட்டான். , மனிதன் பதிலளித்தான்.
கல்லுக்கு இவ்வளவு மதிப்பு இருக்கும் என்பதை அறிந்த சிறுவன் ஆச்சரியமடைந்தான். மீண்டும் அந்த கல்லை விற்க மறுத்துவிட்டு வீட்டுக்கு வந்தார். தந்தையிடம் எல்லாவற்றையும் சொன்னான்.
இப்போது, இந்த அப்பா சொன்னார், "இப்போது நீங்கள் இந்தக் கல்லை ஒரு விலையுயர்ந்த கல் கடைக்கு எடுத்துச் செல்லுங்கள், அங்கேயும் யாராவது உங்களிடம் அதன் விலையைக் கேட்டால் இரண்டு விரல்களை உயர்த்துங்கள்."
சிறுவன் கல் கடைக்குச் சென்று, கல் கடைக்காரரைப் பார்த்ததும், "இந்தக் கல் உங்களிடம் எப்படி இருக்கிறது. இது மிகவும் அரிதானது, நான் இந்தக் கல்லை வாங்க விரும்புகிறேன். சொல்லுங்கள், நீங்கள் என்ன விலைக்கு விற்கிறீர்கள்?" பையன் எதுவும் பேசாமல் இரண்டு விரல்களை உயர்த்தினான்.
நாயகன் மகிழ்ச்சியுடன், "நிச்சயமாக. 2 லட்சத்திற்கு வாங்குகிறேன்" என்று பதிலளித்தார்.
பையன் மீண்டும் ஆச்சரியப்பட்டான். அவர் மீண்டும் கல்லை விற்காமல் வீட்டிற்கு வந்தார்.
வீட்டை அடைந்ததும் தன் தந்தையிடம், "அப்பா, இந்தக் கல்லுக்கு ஒருவர் 2 லட்சம் கொடுக்கத் தயாராக இருக்கிறார், சிலர் 200 ரூபாய்க்கு மட்டும், மற்றவர் 20 ஆயிரம் கொடுக்கத் தயாராக இருக்கிறார். எப்படி இவ்வளவு வித்தியாசம்?"
தந்தை விளக்கினார், "மகனே, உன் உயிரின் மதிப்பை உனக்குச் சொல்லச் சொன்னாய். இதுவே உன் பதில்.
இந்த கல்லின் இடத்தில் உங்கள் வாழ்க்கையை வைத்து, உங்கள் வாழ்க்கையின் மதிப்பை மதிப்பிடுங்கள். இந்த கல்லின் விலை வெவ்வேறு இடங்களில் வித்தியாசமாக இருந்தது. வாழ்க்கையிலும் அப்படித்தான்.
உங்கள் வாழ்க்கையின் மதிப்பு நீங்கள் உங்களை எங்கு வைக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது."
பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்
இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...
-
மண்பானை செய்திடும் ஒரு குயவன் தான் கொண்டுசென்ற பானைகளை யெல்லாம் விற்றுவிட்டு சந்தையிலிருந்து திரும்பிவந்து கொண்டிருக்கும் போது, வழியில் கண்...
-
ஒரு நிறுமத்தின் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அல்லும் பகலும் அயராது பாடுபடும் , ஊழியர்கள் நிறுவனத்தை நன்றாக வழிநடத்தி செல்லும் இயக்குநர்கள...
-
பல ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியமும் நீண்ட வரலாறும் கொண்ட நாடு நமது இந்திய நாடு. அறிவியல் தொழிற் நுட்பம் பண்டைய இந்தியாவில், ஏனைய உலக கலாசாரப் ப...