ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

துறவிபயனம்செய்கி்ன்ற ஒட்டகங்கள் - வாழ்க்கையின் சிக்கல்கள்.

  ஒருமுறை ஒரு நகரத்தில்,  ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொண்டவாறே தனது வாழ்க்கையில் மகிழ்ச்சியேஅடையாத ஒரு மனிதன் வாழ்ந்தான். அம்மனிதன் எப்பொழுதும் ஏதாவது ஒரு பிரச்சனையை எதிர்கொண்டு வருத்தத்துடன் இருப்பதே வழக்கமாகும். அவ்வாறான நிலையில் ஒரு நாள்,  துறவி ஒருவர் தற்போது போன்று வசதிஇல்லாத பழங்காலமானதால் பயனம் செய்வதற்கான ஒட்டகங்களின் கூட்டத்துடன் அந்நகரத்திற்கு அருகில் வந்து தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது உடன்  அந்த நகரமக்கள் அனைவரும் அவரைப் பற்றியசெய்தியை அறி்ந்தவுடன் தங்கள் பிரச்சினைகளை அவரிடம் கூறி தீர்வு செய்து மகிழ்ச்சிடன் இருப்பதற்காக அந்த துறவியை காண  சென்று கொண்டிருந்தனர், இந்தமனிதனும் அவ்வாறே தன்னுடைய பிரச்சினைகள் இவர்மூலமாகவாவது தீர்வுசெய்திடமுடியுமா என அந்த துறவியை காண முடிவு செய்து மறுநாள் விடியற்காலையிலேயே அங்கு சென்றபோது  மாலை வரை அந்த துறவியைச் சந்திக்கும் வாய்ப்பு அந்த மனிதனுக்குக் கிடைக்கவில்லை. கடைசியாக துறவியை சந்திக்க அனுமதிகிடைத்து  துறவியை சந்தித்தபோது அவரிடம், “ஐயா, நான் என் வாழ்க்கையில் எப்போதும் ஏதாவது பிரச்சினைகளால் சூழ்ந்து என்னால் மற்றவர்களை போன்று மகிழ்ச்சியாகவே வாழமுடியவில்லை., சில நேரங்களில் வேலை செய்யும் இடத்தில், சில நேரங்களில் யாருடனாவது மோதல்கள், சில நேரங்களில் என் உடல்நிலை குறித்து கவலைப்படுவது என்றவாறு எல்லா நேரங்களிலும் ஏராளமானபிரச்சனைகள் என்னைச் சூழ்ந்து கொள்கின்றன என்னால் இவைகளை எதிர்கொள்ளமுடியாமல் தத்தளி்க்கின்றேன் அதனால் மிகவும் வருத்தத்துடனேயே வாழ்ந்துவருகின்றேன். தயவு செய்து என் வாழ்வில் எதிர்படுகின்ற எல்லா பிரச்சனைகளும் முடிந்து நான்மனமகிழ்ச்சியுடன் வாழக்கூடிய ஒரு தீர்வை கூறுங்கள்” என்றான் உடன் அந்த துறவி புன்னகைத்து, “மகனே, இன்று மிகவும் தாமதமாகிவிட்டது, நாளை உன் கேள்விக்கு பதில் சொல்கிறேன். எனக்காக ஒரு சின்ன வேலை செய்வாயா?” எனக்கோரினார் உடன்துறவிகூறுகின்ற  பணியை செய்ய தான் தயாராக இருப்பதாக அந்த மனிதன் ஒப்புக்கொண்டான். துறவி, “மகனே நான் பயனம் செய்வதற்கு பயன்படுத்தி கொள்வதற்காக  நூறு ஒட்டகங்கள் உள்ளன, அவற்றை இன்றிரவு நீ கவனித்துக் கொள்ள வேண்டும். நூறு ஒட்டகங்களும் ஓய்வெடுப்பதற்காக தரையில் படுத்ததும், நீ உறங்க செல்லலாம்." எனக்கோரியபின், துறவி ஓய்வெடுக்க தனது கூடாரத்திற்குள் சென்றார். மறுநாள் காலை துறவி அந்த மனிதனைச் சந்தித்தபோது, "மகனே, நேற்றிரவு நீ நன்றாகத் உறங்கினாயா?" என்று கேட்டார். உடன்அம்மனிதன், "ஐயா நேற்றிரவு முழுவதும்  ஒரு ஒட்டகத்தை ஓய்வெடுக்க செய்யமுயற்சித்தால் உடன், மற்றொன்று எழுந்து நிற்கும் இவ்வாறு மாற்றி மாற்றி ஒன்று ஒய்வெடுக்கச்செய்ய முயற்சித்திடும்போது மற்றொன்று எழுந்து கொண்டே யிருந்தன  நூறு ஒட்டகங்களையும் ஓய்வெடுப்பதற்காக பலவகையிலும் முயற்சிசெய்தேன், ஆனால் என்னால் அனைத்து ஒட்டகங்களையும் ஒரேநேரத்தில் ஓய்வெடுக்க செய்யமுடியவில்லை அதனால் நேற்றிரவு முழுவதும் என்னால் ஒரு கணம் கூட தூங்க முடியவில்லை.." என  மிகச்சோர்வாகவும், சோகமாகவும் பதில் கூறினான் உடன்துறவி, "மகனே நீ எவ்வளவு முயற்சி செய்தாலும், அனைத்து ஒட்டகங்களும் ஒன்றாக ஓய்வெடுக்க செய்ய முடியாது என்பதை  புரிந்து கொண்டாய் அல்லவா. அதாவது சிலவற்றை ஓய்வெடுக்க செய்யமுயற்சித்தால் உடன் வேறு சில ஒட்டகங்கள் எழுந்து நிற்கும். அதே போன்று நம்முடைய வாழ்க்கையிலும் ஒரு பிரச்சனையை தீர்வு செய்தவுடன்,  மற்றொரு பிரச்சனை நம்முன்எழும் இதுதான் உலகநியதி. நம் உயிர் இருக்கும் வரை பிரச்சனைகளும் இருந்துகொண்டேயிருக்கும், சில நேரங்களில் குறைவாகவும்,வேறுசிலநேரங்களில் மிக அதிகமாகவும் இருக்கும் என்பதை புரிந்து கொள்க. " எனக்கூறினார் உடன் அம்மனிதன்"அவ்வாறாயின் மகிழ்ச்சியாக இருப்பதற்காக நான் என்ன செய்ய வேண்டும்?" என வினவினான். துறவி சிரித்துக்கொண்டே, "நேற்று இரவு என்ன நடந்தது? 1. பல ஒட்டகங்கள் நீ முயற்சி செய்யாமலேயே இரவு நேரத்தில் தானாகவே ஓய்வெடுக்க செய்யும், 2. உன்னுடைய முயற்சியால் பலவற்றை ஓய்வெடுக்க வைத்தாய், 3. பல ஒட்டகங்கள் உன்னுடைய கடுமையான முயற்சிக்குப் பிறகும் ஓய்வெடுக்க செய்யமுடியவில்லை, பின்னர் அவற்றில் சில தனியே ஓய்வெடுக்கசெல்வதை  நீ  கண்டாய் அதுபோன்று நம்முடைய வாழ்க்கையிலும் பிரச்சனைகள்.. 1. சில தானாகவே தீர்வாகிவிடும், 2. சிலவற்றை உன்னுடைய சொந்த முயற்சியால் தீர்வுசெய்கி்ன்றாய், 3. நிறைய முயற்சி செய்தும் வேறுசில தீர்வாகவில்லை...? அதனை அப்படியே விட்டுவிடு இதுபோன்ற பிரச்சனைகள் சரியான நேரத்தில் தானாகவே தீர்வாகிவிடும். எனவே,  பிரச்சனைகள் இருந்தாலும் வாழ்க்கையை அனுபவிக்க கற்றுக்கொள்க.."  என நீண்ட விளக்கமளித்தார்

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

கையில் விளக்கு எடுத்துசென்ற குருடனை - மற்றவர்கள் கேலி செய்தல்

.
முன்பெல்லாம் தற்போதைய நவீன வாழ்க்கை முறைபோன்று தெருவில் இரவில் மின்விளக்குகள் இல்லாததால்  இருள்சூழ்ந்த இரவில் சரியாக நடந்து செல்வதற்கு ஏதுவாக சிலர் தம்முடைய கைகளில் விளக்கு ஒன்றினை எடுத்து செல்வார்கள் அவ்வாறானசூழலில்  ஒரு கிராமத்தில் வாழ்ந்த கண்பார்வையற்ற  குருடன் ஒருவர். இரவில் வெளியில் செல்லும் போதெல்லாம், எப்பொழுதும் மற்றவர்களை போன்றே தன்னுடைய கைகளில் ஒரு விளக்கினை  எடுத்துசெல்வார்
அவ்வாறு ஒரு நாள் இரவு  தன்னுடைய  நண்பரின் வீட்டில் இருந்து தன்னுடைய வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.  அது இருள்சூழ்ந்த இரவானதால் அவர் வழக்கம் போல  ஒரு விளக்கை தன்னுடைய  கையில் பிடித்தபடி தன்னுடைய வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
அப்போது அந்த கிராமத்திலிருந்த சில குறும்புக்கார இளைஞர்கள் அந்தக் குருடனைப் பார்த்து கேலிசெய்து சிரிக்க ஆரம்பித்தார்கள். அவர்களில் ஒருவன் சத்தமாக, “டேய், பாருடா, கண்ணில்லாத குருடன் கையில் விளக்கை ஏந்தி சென்று கொண்டிருக்கிறார். பார்வையற்றவருக்கு கைவிளக்கால் என்ன பயன்?” என சத்தமாக, கிண்டல் செய்தான் மற்றஇளைஞர்களும் அதனை ஆமோதித்து சிரிக்க துவங்கினார்
அவ்வாறு கிண்டலாக  கூறிய சொற்களைக் கேட்ட பார்வையற்றவர் தான் மேலும் நடந்து செல்வதை நிறுத்திவிட்டு, “மிகச்சரியாகச் சொன்னீர்கள் சகோதரர்களே. நான் குருடன்தான். என்னால் பார்க்க முடியாது. அதனால் விளக்கை கையில் வைத்திருப்பதால் எனக்கு என்ன பயன்?”
  உண்மையில் எனக்கு இருட்டில் மட்டுமே வாழ்வது வழக்கமாகும்
ஆனால் உங்களைப் போன்ற கண்பார்வை உள்ளவர்கள் இருட்டில் வாழப் பழகவில்லை. இருள்சூழ்ந்த இரவில் எதிரில் இருப்பதை அல்லது வருவதை பொதுமக்களாகிய உங்களுக்கு பார்ப்பதில் சிக்கல் இருக்கலாம். எனவே நான் எதிரில் வருவதை கவனிக்காமல் நடந்து வரலாம் அதனால் தவறுதலாக இருளில் என்னைப் கவனிக்காமல் பார்க்காமல் எதிரில் வருபவர் என்னை கீழே இடித்துத் தள்ளிவிட வாய்ப்புண்டு அல்லவா, அதன் பிறகு எனக்கு என்ன நடக்கும்? நான்தான் கீழே விழவேண்டிவரக்கூடும்
அதனால்தான் எதிரில் வருகின்ற உங்களைப் போன்றவர்கள் கவனக்குறைவாக என்னை இடித்து கீழேவிழச்சசெய்யாமல் இருப்பதற்காக இந்த விளக்கினை கையில் ஏந்தி செல்கிறேன். அதனால் பார்வையுடையவர்கள் இருட்டில் ஒரு குருடனைப் பார்க்க முடியும் அல்லவா. ' என மிக நீண்ட விளக்கமளித்தார்
பார்வையற்றவரின் பேச்சைக் கேட்டு வெட்கமடைந்த அவ்விளைஞர்கள், அவரிடம் மன்னிப்பு கேட்கத் தொடங்கினர், எதிர்காலத்தில் யாரிடமும் எதையும் சிந்திக்காமல் எதுவும் சொல்ல மாட்டேன் என்று சபதம் செய்தனர்.
கற்றல்.
உலகில் பல்வேறு வகையான மக்கள் உள்ளனர். சிலர் தங்கள் சொந்த பலவீனங்களை புறக்கணிக்கிறார்கள், ஆனால் மற்றவர்களின் பலவீனங்களை கேலி செய்ய எப்போதும் தயாராக இருக்கிறார்கள்.
உண்மையான களநிலவரத்தை மதிப்பிடாமல், மற்றவர்களின் பலவீனங்களைப் பார்த்துகைகொட்டி கிண்டல்செய்து சிரிக்கிறார்கள், அவர்களின் கூர்மையான சொற்களின் அம்புகளால் அவர்களை காயப்படுத்துகிறார்கள். ஆனால் அவர்கள் உண்மையான செயலால் அறையப்படும்போது, குற்ற உணர்வைத் தவிர வேறு எதுவும் அவர்களிடம் இல்லாதது அவர்களு்குக தெரியவருகின்றது.
எனவே, யாரையும் அவமானப்படுத்த முயற்சிக்கக் கூடாது, எதையும் பேசும் முன் கவனமாக சிந்தித்திடுக

சனி, 29 ஜூலை, 2023

திருமணத்திற்கான மணமகளின் தந்தையின் நிபந்தனை

ஒருமுறை  இளைஞன் ஒருவன் ஒரு இளம் பெண்ணைக் காதலித்தான். அதனை தொடர்ந்து அவ்விருவரும்திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர். அவ்வாறான அவ்விருவரும் திருமணம் செய்துகொள்கின்ற முடிவினை அவ்விளம் பெண்ணின் தந்தை மிகுந்த தயக்கத்துடன் ஒப்புக்கொண்டார்.
 ஆனால் அதற்காக ஒரு நிபந்தனையுடன் மட்டுமே தாம் ஏற்றுகொள்வதாக கூறினார். அத்திருமணத்திற்கு அவ்விளைஞனின் கிராமத்திலிருந்தோ அல்லது குடும்பத்திலிருந்தோ  மிகவும் வயதுமுதிர்ந்த பெரியவர்கள் யாரும் அம்மண ப்பெண்ணின்  கி்ராமத்திற்கு வரக்கூடாது என்று அவர் கூறினார்.
அவரின் அந்நிபநதனையைப் பின்பற்றுவது மிகவும் கடினமான செயலாக இருந்தது,இருந்தபோதிலும் மணமகனி குடும்பத்தினர் அதனை ஒப்புக்கொண்டது.
திருமண நாளும் வந்தது. அத்திருமணத்திற்காக மணமகனின் கிராமத்து வயதுமுதிர்ந்த பெரியவர்கள் அனைவரையும் கிராமத்திலேய விட்டுவிட்டு இளையோர்கள் மட்டும் மணமகளின் கிராமத்திற்கு செல்ல அனைவரும்தயாராக இருந்தனர், ஆனால் அவர்களுள் மணமகனின் தாய்வழி தாத்தா மட்டும் அதனால் என்ன ஆனாலும் பரவாயில்லை தானும் அந்த திருமணத்திற்கு வருவேன் என பிடிவாதமாக இருந்தார். .
எனவே மணகனின் குடும்பத்தினர் அவரை மிக இரகசியமாக அழைத்துச் செல்ல முடிவு செய்தனர், மேலும் தாத்தாவை மறைந்திருக்கும்படி கேட்டுக் கொண்டனர்.
மணமகனின் உறவினர்களும்  மணமகளின் கிராமத்தை அடைந்ததும். மணப்பெண்ணின் தந்தை அவ்வனைவரையும் வரவேற்று அவர்களுள் மிகவும் வயதுமுதிர்ந்த பெரியவர் யாராவது வந்திருக்கிறார்களா என்று சரிபார்த்தார் ஆனாலும் அவரால் வயது முதிர்ந்த மணமகனி் தாத்தா மிக இரகசியமாக வந்திருப்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை அவர்கள் ஒரு பெரிய கூடத்தில் நன்கு வசதியுடன் தங்கி ஓய்வெடுக்குமாறு கூறிச்சென்றார்.
மணமகளின் தந்தை திரும்பி சென்றபின்னர்இப்போது, மணப்பெண்ணின் தந்தை மணமகனுக்கு  - எங்கள் கிராமத்திற்கு அருகே உள்ள குளத்தை முழுவதும் பாலால் நிரப்ப வேண்டும், அப்போதுதான் இந்த திருமணம் நடக்கும், இல்லையெனில் திரும்பி செல்லுங்கள் என்ற நிபந்தனை செய்தி அனுப்பினார்.
அத்திருமணத்திற்கு வந்திருந்த மணமகனின் கிரமத்தார்களும் உறவினர்களும் எவ்வளவு  யோசித்தாலும், மணமகளின் தந்தை கூறிய நிபந்த.னையை எவ்வாறு நிறைவேற்றுவது என்ற வழியை கண்டுபிடிக்கமுடியவில்லை, அதனால் இறுதியில் திருமண முடிவை திரும்பப் பெறப்படும் என்று முடிவு செய்யப்பட்டு அனைவரும் தங்களது கிராமத்திற்கு மணமகனுக்கு திருமணத்தை செயற்படுத்தாமலேயே திரும்ப செல்வது என தயாராகிவிட்டனர்.
இதனை  கண்டமணமகனி்ன் தாத்தா வெளியே வந்து - என்ன நடந்தது? என கேட்டார்
உடன் அவரிடம் மணமகளின் தந்தையின் நிபந்தைகுறித்து  கூறப்பட்டது. அதைக் கேட்ட தாத்தா சிரித்துக்கொண்டே, போய் மணமகளின் தந்தையிடம் - குளத்தில் பால் நிரப்ப ஏற்பாடுகள் செய்துள்ளோம், ஆனால் குளத்திலுள்ள தண்ணீரை வெளியேற்றினால்தான் அது நடக்கும். என மணமகனி்ன் என்றார்
மணப்பெண்ணின் தந்தைக்கு இந்தச் செய்தி கிடைத்ததும், மணமகன் தரப்பிலிருந்து  வயதில்முதியவர் திருமணத்திற்கு வந்திருப்பதை புரிந்துகொண்டு மணமகன்குடும்பத்தார்களின் பதிலை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார் உடன் மிகுதியாக இருந்த மணமகனின் கிராமத்திலிருந்த வயதுமுதிர்ந்த அனைவரையும் திருமணத்திற்காக தனது கிராமத்திற்கு வரச்செய்து மிகுந்த மரியாதையுடன் வரவேற்று அந்த திருமணத்தினை செய்து முடிக்கசெய்தார்.
இந்த எளிய கதை நம் பெரியவர்களையும் அவர்களின் அனுபவத்தையும் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நமக்குக் கற்பிக்கிறது.



திங்கள், 24 ஜூலை, 2023

குயவனுக்கு மகிழ்ச்சியாக வாழ்வதற்கான அரசனின் சலுகை -

ஒரு காலத்தில் எல்லா வசதிவாய்ப்புகளுடனும் ஒரு நாட்டில் அரசன் ஒருவர் அரசாட்சி செய்து கொண்டிருந்தார். அவருக்கு அன்பான மனைவி, நல்ல பிள்ளைகள் நல்ல மக்கள்என்றவாறு இருந்தாலும் அவ்வரசன் மிக்அதிக மன வருத்த்ததுடனே இருந்தார்.
  ஒருமுறை அவ்வரசர் தன்னுடைய நாட்டில் உலாவந்துகொண்டிருந்தபோது ஒரு சிறிய கிராமத்தை வந்துஅடைந்தார், அங்கு ஒரு குயவர் (நல்ல களிமண்ணால் பானைகள், பாத்திரங்கள் போன்றவற்றைச் செய்பவர்) அந்த கிராமத்திலிருந்த கோவிலுக்கு வெளியே களிமண்ணாலான பாத்திரங்களை விற்றுக் கொண்டிருந்தார், அவருடைய அங்காடியில் சிலமண் பானைகளில் தண்ணீர் நிரப்பப்பட்டிருந்தது  அவரும் அதனஅருகில் அமர்ந்து கொண்டு மகிழ்ச்சியாக கிராமத்து பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தார். .
மன்னன் அந்த கோயிலுக்குள் சென்று திரும்பி வெளியே வரும்போது மகிழ்ச்சியாக கிராமத்து பாடல்களைப் பாடிக்கொண்டிருந்த குயவனைக் கண்டு அவன் அருகில் அமர்ந்தார்.உடன் தன்அங்காடியில் வந்தமர்ந்த அந்நாட்டு அரசனை கண்டதும் விருந்தினர்கள் எவரேனும் நம்முடையவீடு தேடி வந்தததும் செய்கின்ற நம்முடைய வழக்கமான செயலைபோன்று அந்த குயவன் அரசனுக்கு மரியாதையுடன் பாணையிலிருந்து தண்ணீரை முகர்ந்து அரசர் குடிக்குமாறு கொடுத்தார்.
  அம்மன்னனும் குயவனின் இவ்வாறான செயலால் அதிகம் ஈர்க்கப்பட்டார்.அரசன் அந்த குயவனின் வருமானத்தைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினார்.. மிகவும் குறைந்த அளவே அந்த குயவனுக்க வருமானம் வருவதை யூகித்தபின்னர்
அரசர் அவனிடம், “தம்பி, என்னுடன் நகரத்திற்கு வருவீர்களா?” என்றார். உடன் குயவன் , “இந்த கிராமத்தை விட்டிட்டு உங்களுடன் நகரத்திற்கு நான் வந்தால் என்னுடைய வருமானத்திற்கு நான்  என்ன செய்வேன்?” என்று சந்தேக கேள்வி எழுப்பினார்.
அரசன், " நீங்கள் இங்கு செய்வதை விட ஏராளமானஅளவில் மண்பானைகளை அங்கே செய்யலாம்." என்றார் .தொடர்ந்தப குயவன், "அவ்வாறு அதிகஅளவில் மண்பாணைகளை அங்கு செய்தால் அதனை நான் செய்வது?"
அதற்கு அரசர், “அவற்றை விற்று மிக அதிகஅளவில்  பணம் சம்பாதிக்கலாம்” என்றார். உடன் குயவன், “அவ்வாறு அதிக அளவில் சம்பாதித்த அந்தப் பணத்தை கொண்டு  நான் என்ன செய்வது?” என்று கேட்டார்.
அவனது கேள்வியால் ஆச்சரியப்பட்ட அரசன், “பணத்தை என்ன செய்வீர்கள்? பணம்தான் எல்லாமே.நம்முடைய வாழ்வே பணத்தின் மீதுதானே நடக்கின்றது” என்றார்
திரும்பவும குயவன், "இப்போது, அந்த அதிகஅளவிலான பணத்தை நான் என்ன செய்வது என்று சொல்லுங்கள்" என்ற வினவினார்
அரசன், "நீங்கள்அந்தபணத்தினை கொண்டு மிகவும் வசதியான வாழ்க்கையை வாழலாம், ." என்றார் இதைக் கேட்ட குயவன் மன்னனிடம், “மன்னிக்கவும், ஐயா இப்போது நான் என்ன செய்கிறேன் என்று சொல்லுங்கள்"   என வினவினான்.
இந்தக் கேள்வி அரசனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது அதனால் மேலும் எதுவும் பேசாமல் மௌனமானார்.
சிறிது நேரம் கழித்து, மன்னர்  " நீங்கள் இங்கு முழுமையான மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்." என கூறினார்,
உடன் குயவன் சிரித்துக்கொண்டே, "ஆம் ,ஐயா அதைத்தான் நான் சொல்கிறேன், மகிழ்ச்சியை பணத்தால் வாங்க முடியாது" என்றார்.
அதனால் அரசன் அதிக ஆர்வத்துடன் , நதயவுசெய்து அத்தகைய மகிழ்ச்சியை எப்படி அடைவது என்று சொல்லுங்கள்." என வினவினார் உடன் குயவன், "கவனமாகக் கேளுங்கள், உங்கள் கைகளை கொடுப்பதற்கு மட்டும் பயன்படுத்துங்கள்."  பதிலளித்தார்
அரசன், "அது எப்படி?"
அதற்கு குயவன், “அரசே! யாரிடமும் கைநீட்டி கேட்காதீர்கள், கொடுக்கக் கற்றுக்கொள்க.. கொடுக்கக் கற்றுக் கொண்டால், மகிழ்ச்சியின் பாதையில் அடியெடுத்து வைத்துவிட்டீரகள் என்பதை புரிந்துகொள்க.
சுயநலத்தை கைவிட்டு பொதுநலனை தேர்ந்தெடு்த்திடுக..
பெரும்பாலானோரின் துக்கத்திற்கு மிகப் பெரிய காரணம், தங்களிடம் எது இருந்தாலும், அதில் அவர்கள் மகிழ்ச்சியடையாமல் , இல்லாததைப் பெறுவதில் முயன்று அதனை அடையமுடியாமல் அதற்காகள் வருத்தப்படுவதும்தான்.
இருப்பதில் மகிழ்ச்சியாக இருக்க கற்றுக்கொள்க, மனவருத்தங்கள் தாமாகவே போய்விடும்” என்று நீண்ட விளக்கமளித்தார்

ஞாயிறு, 16 ஜூலை, 2023

அறிவு அல்லது நடத்தை எது பெரியது

 முன்னொரு காலத்தில் ஒரு அரசன் தன் நாட்டின் அரச குருவை மிகவும் மதிக்கும் பழக்கம் கொண்டிருந்தான். அரசகுரு அரசவைக்கு வரும் போதெல்லாம், அரசன் தன் அரியணையிலிருந்து மரியாதைக்காகஎழுந்து நின்று வணக்கம் கூறி தன்னுடைய இருக்கையில் உட்காருவது வழக்கமான செயலாகும்.
ஒரு நாள் அரசர் அரசகுருவிடம், "ஒருவரின் நடத்தை சிறந்ததா அல்லது அவரது அறிவு சிறந்ததா என்பதை கூறுக" என்று கேட்டார்.
அரசகுரு, "எனக்கு சில நாட்கள் அவகாசம் கொடுங்கள், உங்கள் கேள்விக்கு நான் பதிலளிக்கிறேன்" என்றார்.
அடுத்த நாள், அரச குருவானவர் மன்னரின் கருவூலத்திற்குச் சென்று, அங்கிருந்து சில பொற்காசுகளை எடுத்து, தனது பையில் வைத்து எடுத்துக் கொண்டு சென்றார். கருவூலத்தலைவர் இதைப் பார்த்தார், ஆனால் அவர்அரச குருஎன்பதால் அவருடைய பதவியைக் கருத்தில் கொண்டு அமைதியாக இருந்தார்.
அரச குருவானவர் சில நாட்கள் இதேசெயலையே தொடர்ந்து செய்து வந்தார். அதாவது அரசகுரு தினமும் அரசின் கருவூலத்திற்கு வந்து அங்கு சில தங்க நாணயங்களை எடுத்து தனது பையில் வைத்துஎடுத்துக்கொண்டு  வெளியே செல்வது வழக்கமாகும். இதை அரசுகருவூலத்தலைவர் பார்த்தும் ஒன்றும் செய்யஇயலாமல் அமைதியாக இருந்துவந்தார்.
இந்த செயல் பல நாட்களாக நடந்து வந்ததால், அரசுகருவூலத்தலைவர் அரசனிடம் சென்று இவ்வாறு நடைபெறுகின்ற முழுவிவரத்தையும் கூறினார்.
இதன்பிறகு  அரசகுரு ஒரு நாள் மன்னரின் அரசவைக்கு சென்றார், ஆனால் இப்போது அரசரோ மரியாதையாக எழுந்து நின்று அரசகுருவை  வரவேற்க வில்லை அல்லது மரியாதை நிமித்தமாக அரியணையில் எழுந்து சென்று வரவேற்கவுமில்லை.
பொற்காசுகளை எடுத்துச் செல்லும் செய்தி அரசனுக்கு வந்துசேர்ந்துவிட்டது என்பதை அரசகுரு புரிந்து கொண்டார்.
மன்னன் தன் குரலை உயர்த்தி அரசகுருவிடம், "அரசுகருவூலத்திலிருந்து பொற்காசுகளை எடுத்துசென்றவிட்டாயா?" என்று மரியாதை இல்லாமல் கேட்டார். உடன் அரசகுவும் , "ஆம்.  உண்மைதான்" என்றார்.
உடன் அரசன் மிகவும் அதிககோபமடைந்து, "ஏன் இப்படி செய்தாய்?" என திட்டினார்
அதனை தொடர்ந்து அரசகுருவானவர் புன்னகைத்து, "நான் வேண்டு மென்றேதான் அரசாங்க கருவூலத்திலிருந்து தங்கக் காசுகளை எடுத்துசென்றேன்.அரசே ஒருவரின் நடத்தை பெரியதா அல்லது அறிவாற்றல் பெரியதா என்ற கேள்வியை  நீங்கள் கேட்டீர்கள் அல்லவா அந்த கேள்விக்கான சரியான பதில் எதுவென உங்களுக்குக் காட்ட விரும்பினேன்.அதற்காக  அரசரின் அனுமதியின்றி நான் அரசாங்க கருவூலத்திலிருந்து தங்கக் காசுகளை எடுத்துசென்றேன் இந்த செயலை அறிந்ததும்,  வழக்கமாக செய்யும் மரியாதைக்காக எழுந்துநின்று வணக்கம் கூறி வரவேற்பதற்கு பதிலாக நான் இந்த அரவைக்கு வரும்போது  அரியணையில் இருந்து எழுந்துநின்று வரவேற்கவில்லை. மாறாக நீங்கள் உங்கள் குரலை உயர்த்தி என் மீது கோபத்துடன் திட்டினீர்கள்.
தங்க நாணயங்களை எடுத்துச்செல்வதற்கு முன்பும் என்னுடைய அறிவு என்னுடன் இருந்தது, தங்கக் காசுகளை அரசனிடம் கேட்காமல் எடுத்துச்சென்ற பிறகும் அது என்னிடம் உள்ளது. ஆனால், நான்  நடத்தையில் தவறியவன் என என்னைப் பற்றி உங்களுக்குத் தெரிந்தவுடனே, என் மேல் கொண்டுள்ள மரியாதையை இழந்துவிட்டீர்கள்.
என் நடத்தையின் காரணமாகவே நீங்கள் என்னை மதிக்கிறீர்கள், ஆனால் எனது நடத்தை மாறியவுடன், என்னைப் பற்றிய எண்ணங்களும் மாறிவிட்டன, அதனால் உங்களால் என்னை மதிக்க முடியவில்லை." என நீண்ட விளக்கமளித்தார்.அரசன் அதனை புரிந்துகொண்டு அரசகுவைப் பாராட்டினார்.நமது நடத்தை நன்றாக இல்லை என்றால், நாம் எவ்வளவுதான் கல்வி, பதவி , செல்வம் கூட நம்மிடம் இருந்தாலும் நம்மை யாரும் மதிக்கமாட்டார்கள்.

சனி, 1 ஜூலை, 2023

அரசனுக்கு பிச்சைக்காரன் பிச்சையிடுதல்

 ஒரு பிச்சைக்காரன் பிச்சை எடுக்கச் செல்ல அதிகாலையில் எழுந்தான். வெளியே செல்லும் முன், பிச்சை எடுக்கச் செல்லும் போது பிச்சைக்காரன் தன் பைகளை காலியாக வைக்கக் கூடாது என்ற மூடநம்பிக்கையின் காரணமாக ஒரு கை நிறைய ஏதாவது உணவுதானியத்தை எடுத்துபையில் வைத்தபின் வெளியில்செல்வது அவனுடைய வழக்கமான செயலாகும்.
 இன்று மாலைக்குள் தன் பையை நிரப்பிவிடலாம் எனநினைத்துக் கொண்டு பிச்சைக்காரன் தன் குடிசையை விட்டு வெளியே வந்தான்.
அப்போது, அந்நாட்டு அரசனின் தேர் தான் செல்லும் வழியில் எதிரே வருவதைக் கண்டான். அதைக் கண்ட பிச்சைக்காரன் மிகவும் மகிழ்ச்சி யடைந்தான், இன்று தனது வறுமை அனைத்தும் நீங்கிட, அரசனிடம் பிச்சை பெற்றால் போதும் தன் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று எண்ணினான்.
அரசனின் தேர் நெருங்க நெருங்க, பிச்சைக்காரனின் கற்பனையும் உற்சாகமும் பெருகியது
அரசனின் தேர் பிச்சைக்காரன் அருகே வந்தவுடன்  நின்றது. அரசன் கீழே இறங்கி பிச்சைக்காரனை அணுகினான்.
பிச்சைக்காரன் தனக்கு எதையாவது கொடுப்பதற்குப் பதிலாக, தனது விலையுயர்ந்த துணியை அவன் முன் விரித்து, அவனிடம் அரசனேபிச்சை கேட்கத் தொடங்கினான். அவ்வாறு அரசனே தன்னிடம் பிச்சை கேட்கும் போது தான் என்ன செய்வதென்றே அந்த பிச்சைக்காரனுக்கு புரியவில்லை. பிச்சைக்காரன் மேலும்எதையும் யோசிப்பதற்குள், அரசன் மீண்டும் பிச்சைக்காரனிடம் பிச்சையிடுமாறு கெஞ்சினான்.
பிச்சைக்காரன் தன் பைக்குள் கையை வைத்தான் ஆனால் எப்போதும் அப்பிச்சைக்காரண் மற்றவர்களிடம் இருந்து பிச்சை எடுப்பது மட்டுமே வழக்கமாகும் அதன்காரணமாக அவன் மனம் தன்னுடைய பையிலுள்ள உணவுதானியத்தை கொடுக்க சம்மதிக்கவில்லை.
இருந்தபோதிலும் எப்படியோ பையிலிருந்த கையளவு வைத்திருந்த தானியத்தில் இரண்டுதானியங்களை மட்டும்எடுத்து அரசன் தன்னிடம் பிச்சை கேட்டு கையேந்தி இருந்த துணியில் போட்டான்.  அரசனும் அந்த இரண்டு உணைவுதானியங்களை மட்டும் பிச்சையாக அந்த பிச்சைக்காரணிடம் வாங்கிகொண்டு தன்னுடைய தேரில் பயனத்தை தொடர்ந்தான்
அன்றுநாள் முழுவதும், பிச்சைக்காரனுக்கு வழக்கத்தை விட அதிகமான பிச்சை கிடைத்தாலும், அப்பிச்சைக்காரன் தனது பையில் இருந்து இரண்டு  தானியங்களை மட்டும் அரசனுக்கு  பிச்சையாக கொடுத்ததை குறித்து அதாவது தன்னிடமிருந்து இரண்டு தானியங்கள் அரசனுக்கு பிச்சையாக போய்விட்டதே என அந்த நாள் முழுவதும் அவ்வாறு பிச்சை கொடுத்ததற்காக வருந்தி கொண்டேயிருந்தான்.
அன்று மாலை தன்னுடை குடிசைக்கு திரும்பியபின் தன்னுடைய பையைச் சரிபார்த்தபோது அவனுடைய ஆச்சரியத்திற்கு அளவேயில்லாமல் போய்விட்டது
அவனுடைய பையில் தங்கத்தால் செய்யப்பட்ட இரண்டு  உணவு தானியங்கள் இருந்தன. தான் அரசனுக்கு பிச்சையிட்டதனால் தான் இது நடந்தது என்று புரிந்து கொண்டான். அடடா தான் கைநிறையை அள்ளி போட்டிருந்த தானிங்கள் முழுவதையும் அரசனிற்கு பிச்சையாக கொடுத்திருந்தால் நமக்கு ஏராளமாக தங்கத்திலான உணவுதானியங்கள் கிடைத்திருக்குமே என அந்த நேரத்தில்தான் நினைத்து வருந்தினன் அரசன் தன்னிடம் பிச்சை கோட்டபோது அவ்வாறு கைநிறைய உணவு தானியங்களை அள்ளி கொடுத்திருக்கலாம்  ஆனால் அப்பிச்சைக்காரனுக்கு பிச்சையாக அள்ளி கொடுத்து பழக்கமில்லை  மற்றவர்களிடம் பிச்சையாக வாங்கிதான்  பழக்கம் பிச்சையிடும் பழக்கம் அப்பிச்சைகாரனுக்கு இல்லாததால் அவ்வாறு செய்யமுடியவில்லை.
கற்றல்:
     1. கொடுப்பதால் எதுவும் குறையாது.
     2. எடுப்பதை விட கொடுப்பது பெரியது.

ஞாயிறு, 25 ஜூன், 2023

குரங்கும் & மணியோசையும் - வதந்தி

 காட்டின் ஓரத்தில் ஒரு கிராமம் அமைந்திருந்தது, அது செழிப்பான கிராமமானதால் கிராம மக்கள் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.
அதனால் அக்கிராமமக்கள் அக்கிராமத்தின் நடுவில் ஒரு கோயிலைக் கட்டி, அங்கு தினமும் வழிபாடு செய்து வந்தனர். கோவில் வாயிலில் ஒரு பெரிய மணி தொங்கவிட்டிருந்தனர்.
ஒரு நாள் இரவு திருடன்ஒருவன் அந்தகோவிலின் வாயிலிலிருந்த மணியைத் திருடிகொண்டு காட்டை நோக்கி ஓடினான்.
அவன்காட்டில் வெகுதூரம் எங்கும் நிற்காமல் ஓடிக்கொண்டேயிருந்ததால் அந்த கோவிலின் மணியும் ஆடிக்கொண்டேஇருந்தது அதன் தொடர்ச்சியாக மணியோசையும் வெகுதூரம் பரவிக்கொண்டிருந்தது. அருகில் சுற்றித் திரிந்த சிங்கம் ஒன்று அந்த மணியின் ஓசைலியை கேட்டு  ஏதோ நம்முடைய காட்டில் புதியதாக ஓசை கேட்கின்றதே என மிகஆர்வத்துடன் மணியோசையைப் பின்தொடரத் தொடங்கியது.
கிராமத்திலிருந்து காட்டிற்கு ஓடும்போது திருடன் ஏற்கனவே மிகவும் சோர்வாக இருந்தான். எனவே, ஓய்வெடுக்க ஒரு மரத்தடியில் அமர்ந்தான். சிறிது நேரத்தில் அம்மரத்தின் அருகில் வந்த சிங்க ஆஹா நமக்கு அருமையான இரைகிடைத்தது என அந்த திருடனை அடித்துக் கொன்றது. அந்த திருடன் வைத்திருந்த மணியும் அவனருகில் தரையில்விழுந்தது.
 மறுநாள் குரங்கு கூட்டம் அந்த இடத்தை கடந்து சென்றது. அவை அந்த மணியைப் பார்த்தது, அவற்றுள் ஒரு குரங்கு மட்டும் அதை எடுத்து அசைத்தது அதனால் குரங்குகள் அந்த மணியின் மெல்லிய ஓசையை மிகவும் ஆர்வத்துடன்அந்த மனியை ஒன்றுகொன்று வீசிஎறிந்துகொண்டு அம்மணியுடன் விளையாட ஆரம்பித்தன.
பெரும்பாலும், குரங்குகள் நாள்முழுவதும் இரைதேடிசெல்வது இரவில் ஓய்வெடுக்க அந்த மரத்தில் கூடி, அந்த மணியை வீசிஎறிந்துகொண்டு அம்மணியுடன் விளையாடுவது வழக்கமான செயலாகிவிட்டது. இரவில்மட்டும் அந்த காட்டில் இருந்து வரும் மணியின் சத்தத்தின் பின்னணியில் உள்ள காரணத்தை அறியாத கிராம மக்கள் அதை மிகவும் விசித்திரமாக இருப்பதாக தங்களுக்குள் விவாதித்து கொண்டனர்.
இருந்த போதிலும் ஒரு நாள் அந்த கிராமமகள்ள அனைவரும் ஒன்றுகூடி தினமும் இரவில் மட்டும் அந்த காட்டில் மணி யோசைவருகின்ற இரகசியம் தெரிய வேண்டும் என்று அனைவரும் முடிவு செய்தனர். எனவே, கிராமத்து இளைஞன்ஒருவனை தெரிவு செய்து அந்த காட்டிற்கு அந்த இளைஞனை அனுப்பி தினமும் இரவில் மட்டும் காட்டிலிருந்து மணியோசை வருவதற்கான காரணத்தை அறிந்து கொள்ளமுடிவுசெய்தனர். அதனடிப்படையில் அந்த இளைஞன் பகலில் காட்டிற்குள் சென்ற தேடிபார்த்தபோது,ஒருமரத்தினடியில் திருடனின் எலும்புக் கூட்டை மட்டும் கண்டான்.
அதனால் உடன் அந்த இளைஞன் அதிகமாக பயந்து கிராமத்திற்குத் திரும்பி ஓடி வந்து, காட்டில் ஏதோ பேய் உலவுவதாகவும், அது மக்களைக் கொன்றுவிட்டு இரவில் மட்டும் மணியை அடிப்பதாகவும் எல்லோரிடமும் கூறினான்.
அக்கிராம மக்கள் அதற்குமேல் ஆய்வுஎதுவும் செய்திடாமல் தீர விசாரித்திடாமல் அந்த இளைஞனுடைய சொற்களை உண்மையென நம்பினார்கள். இந்த செய்தி உடனடியாக காட்டுத் தீ போல் கிராமம் முழுவதும் பரவியது. காட்டிற்கு அருகில் தங்களுடைய கிராமம் இருப்பதால் நம்மையும் அந்த பேய் அவ்வாறு கொன்றுவிருமோ என பயந்து நடுங்குகின்ற அச்சமான சூழல் நிலவியது. அதனால் மெல்ல அந்த கிராம மக்கள் வேறு கிராமங்களுக்கு இடம்பெயரத் தொடங்கினர்.
தன்னுடைய நாட்டில் உள்ள ஒரு கிராமத்து மக்கள் அங்கிருந்து புலம் பெயர்வதை அறிந்த அந்நாட்டு அரசன் அந்த கிராமத்திற்கு அருகிலிருந்த00, காட்டில் சுற்றித் திரியும் பேயை விரட்டுபவர்களுக்கு உரிய விருது வழங்கப்படும் என அந்நாடு முழுவதும் செய்தியை அறிவித்தான். .
அரசனனி இந்த அறிவிப்பை அதே கிராமத்தில் வசிக்கும் ஒரு மூதாட்டியும் அறிந்துகொண்டார். இரவில் பேய் உலாவுகின்றது என்ற செய்தி வெறும் வதந்தி என அம்மூதாட்டி நம்பினாள். அதனால் எதற்கும் பயப்படாமல் ஒரு நாள் இரவு அம்மூதாட்டி மட்டும் தனியாக காட்டிற்குள் சென்றாள். அங்கே மரத்தில் மணிவீசியெறிந்து  விளையாடிக் கொண்டிருந்த குரங்குகளைக் கண்டாள்.
இரவில் மணி அடிக்கும் சத்தத்தின் இரகசியத்தை அககிழவி புரிந்து கொண்டு தன்னுடைய  கிராமத்திற்கு திரும்பி வந்துசேர்ந்தாள்.
அடுத்த நாள், அந்நாட்டு அரசனிடம் சென்று, "காட்டில் அலையும் பேயை என்னால் விரட்ட முடியும், ஆனால் அந்த தீய ஆவியைக் கட்டுக்குள் கொண்டுவர ஒரு சடங்கு ஏற்பாடு செய்ய வேண்டும், அதற்கு எனக்கு கொஞ்சம் பணம் தேவை" என்று அம்மூதாட்டி கோரினாள்.
 அம்மூதாட்டி கோரியவாறு  அரசன் உடனடியாக பணம் ஏற்பாடு செய்து கொடுத்தான். அந்தப் பணத்தில் காய்கணிகள் பருப்பு, பழங்கள் போன்ற தின்பண்டங்களை வாங்கிக் கொண்டு கோவில் வளாகத்தில் ஒரு வட்டம் போட்டு உணவுப் பொருட்களை எல்லாம் வட்டத்திற்குள் வைத்துக்கொண்டு கடவுளிடும்  வேண்டுதல் செய்வது போன்று நடிக்க ஆரம்பித்தாள்.. அந்த கிராமமக்களும் நமக்காக இந்த மூதாட்டி கடவுளிடம் வேண்டி கொள்வதை வேடிக்கை பார்கக ஆரம்பித்தனர். இவ்வாறு தினமும் அம்மூதாட்டி செய்து கொண்டிருப்பதால் அக்கிராம மக்களும் பயம் எதுவும் இல்லாமல் தங்களுடைய வழக்கமான பணிகளை செய்திட சென்றுவிட்டனர்   
அதனை தொடர்ந்து ஒரு நாள் மாலைநேரத்தில் அம்மூதாட்டி, எல்லா உணவுப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு காட்டிற்குள் சென்றாள். காட்டிற்குள் உள்ள அந்த மரத்தை அடைந்து, தான்கொண்டுவந்த அனைத்து உணவுப்பொருட்களையும் அம்மரத்தடியில் வைத்துவிட்டு, குரங்குகள் வரும் வரை அருகில் வேறொரு மரத்தின் பின்னால் ஒளிந்து காத்திருந்தாள்.
சிறிது நேரம் கழித்து அங்கு வந்த குரங்குகள் கூட்டம் நிறைய உணவுப் பொருட்களைக் கண்டதும் மணியை ஒருபுறம் தூக்கி எறிந்துவிட்டு அவ்வுணவு பொருட்களை தின்ன ஓடியது. குரங்குகள் காய்கறி  பழங்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் தின்று க்கொண்டிருந்தன.சரியான, வாய்ப்பு கிடைத்ததால், அம்மூதாட்டி கோவிலின் மணியை எடுத்துக்கொண்டு கிராத்திற்கு திரும்பிவந்தார் மறுநாள் மன்னரின் அரண்மனைக்கு சென்று சேர்ந்தாள்.
அம்மணியை அரசனிடம் ஒப்படைத்துவிட்டு, "அந்தத் தீய ஆவி இந்த மணியை விட்டுவிட்டு காட்டை விட்டு ஓடி விட்டது. கிராம மக்கள் இப்போது பயப்படத்தேவையில்லை" என்றாள்.
அந்த மூதாட்டியின் துணிச்சலைக் கண்டு மிகவும் மகிழ்ந்த அரசன் அவளுக்கு தான்கூறியவாறு பரிசினை வழங்கினான்.
  அன்றிலிருந்து  தினமும் இரவில் அந்த காட்டிலிருந்து கிராம மக்களுக்கு மணியின் சத்தம் கேட்கவில்லை, அவர்கள் மீண்டும் மகிழ்ச்சியாக வாழத் தொடங்கினர்.
கற்றல்.
1. சிந்திக்காமல் எந்த முடிவையும் எடுக்கக்கூடாது.
2. புத்திசாலித்தனத்தால் ஒவ்வொரு பிரச்சனையையும் தீர்க்க முடியும்.

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...