வியாழன், 25 மே, 2017

வியாரஉலகில் வெற்றியாளர் எந்தசெயலை செய்து வெற்றிபெற்றார் எனநன்கு நுனுக்கமாக கவணித்து அதைபின்பற்றி நாமும் வெற்றிபெறுவோம்


அரசு மருத்துவ கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களின் வகுப்பு முடிந்து அறுவை சிகிச்சைக்கான நேரடி களப்பயிற்சிக்காக அதற்கான பேராசிரியருடன் பினவறைக்கு சென்றனர் அப்பிணைவறையில் இவர்களுக்கு முன்புறம் மேஜையின்மீது இறந்தபோன பிணம் ஒன்று அறுவைசிகிச்சைபயிற்சிக்காக வெள்ளைத்துனியால் மூடிதயாராகஇருந்தது அந்த அறுவைசிகிச்சை பேராசிரியர் "அன்பான மாணவர்களே நாம் இதுவரையில் புத்தகத்தில் படித்த கல்விவேறு இப்போது நாம் செய்யவேருக்கின்ற நேரடி களப்பயிற்சி வேறுஎன்பதை மனதில் கொள்ளுங்கள் தற்போது நாமெல்லோரும்அறுவைசிகச்சை செய்யதயாராகவிருக்கின்றோம் நம்மை போன்ற அறுவைசிகிச்சை மருத்துவர்களுக்கு முதலில் சகிப்புத்தன்மை இருக்கவேண்டும் என்ற செய்தியை நன்குமனதில் கொள்ளுங்கள் மேலும் அன்புமாணவர்களே நன்கு கவணியுங்கள் நான்செய்வதை போன்று அனைவரும் செய்க" எனக்கூறி அந்த அறுவைசிகிச்சை பேராசிரியர் பிணத்தின்முகம் இருந்தபக்கத்தில் மூடியிருந்த வெள்ளைதுணியை நீக்கினார் அந்த அந்த பிணத்தின் முகத்தில் புழுக்குள் நெளிந்தவாறு சிதைந்த நிலையில் பார்ப்பதற்கு மிகஅறுவறுப்பாக இருந்தது அவ்வாறு இருந்தபோதிலும் அந்த அறுவைசிகிச்சை பேராசிரியர் அந்த பிணைத்தின் சிதைந்த முகத்தில் தன்னுடைய கைவிரல்களால் தொட்டு தன்னுடைய வாயில் வைத்து சூப்பினார் பின்னர் அனைத்து மருத்துவமாணவர்களையும் அவ்வாறே செய்யுமாறு கோரினார் இது முதலாவது நிகழ்வு என்பதால் மருத்துவகல்லூரி மாணவர்கள் அனைவரும் அவ்வாறு செய்வதற்கு சிறிது தயங்கினர் இருந்தபோதிலும் அவர்களில் ஒவ்வொருமாணவராக தயங்கி மயங்கி அவ்வாறே அந்த பிணைத்தின் சிதைந்த முகத்தில் அவரவர்களின் கைவிரல்களால் தொட்டு தத்தமது வாயில் வைத்து சூப்பினார்கள் அவர்களுள் ஒருமாணவன் மட்டும் சிறந்த அறுவைசிகிச்சை மாணவன் என அந்த அறுவைசிகிச்சை பேராசிரியர் தேர்வுசெய்தார் மற்றஅனைவரும் உடன் மருத்தவகல்லூரி மாணவர்கள் அனைவரும் அந்தவொருமாணவரைமட்டும் அந்த மருத்துவ பேராசிரியர் எப்படி தெரிவுசெய்தார் என மிகஆச்சரியமாக அவரிடம் வினவினர் "மாணவர்களே நன்கு கவணியுங்கள் என நான் கூறி என்னுடைய பணியை செய்தபோதுவேறு எந்த மாணவனும் நான் செய்த செயலை பின்பற்றவில்லை அதாவது நான் அந்த பிணைத்தின் சிதைந்த முகத்தில் என்னுடைய ஆள்காட்டி விரலால் தொட்டு வாயில் என்னுடைய நடுவிரலை வைத்து சூப்பினேன் ஆனால் அந்த ஒருமாணவர்மட்டும் நான்செய்த செயலை மிகநுணுக்கமாக மிகச்சரியாக கவணித்து அப்படியே பின்பற்றினார் அதனால் அம்மாணவனே வெற்றியாளன் எனக்கூறினார் அதேபோன்று வியாரஉலகில் வெற்றியாளர் எந்தசெயலை செய்து வெற்றிபெற்றார் எனநன்கு நுனுக்கமாக கவணித்து அதைபின்பற்றி நாமும் வெற்றிபெறுவோம்

திங்கள், 22 மே, 2017

சிறந்த மகன் யார்


முன்னொரு காலத்தில் மிகவும் பணக்கார நபர் ஒருவர் வாழ்ந்துவந்தார். அவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். முதல் மகன் தந்தையின் சொல்லை தட்டாமல் மிககடினமாக பணிபுரிந்து மிகநல்லவனாகவும் வல்லவனாகவும் வாழ்ந்து வந்தாதான்.. ஆனால் இரண்டாவது மகன் முதல் மகனை காட்டிலும் மிகவும் முற்றிலும் வேறுபட்டவனாக சோம்பேறியாக தந்தையின் சொல்லை கேட்டு கீழ்ப்படியாமல் உல்லாசமான வாழ்க்கை யை பின்பற்றிவந்தான் அதிலும் அவ்வாறான உள்ளாச வாழ்க்கையை தந்தையின் குறுக்கீடுஇல்லாமல் தொடர்ந்து வாழ விரும்பியதால் ஒரு நாள் இளைய மகன் தன் தந்தையிடம் . "தந்தையே, உங்களுடைய சொத்தில் என்னுடைய பங்கினை பிரித்து எனக்குக் கொடுங்கள்" என்று கோரினான் அதனை தொடர்ந்து அந்த தந்தையும் சொத்துக்களைப் பிரித்து இரண்டாவது மகனுடைய பங்கை அவனிடம் கொடுத்தார் உடன் அந்த இரண்டாவது மகன் தன்னுடைய பங்கு சொத்துகளை விற்று பணமாக எடுத்துக் கொண்டு, வீட்டைவிட்டு வெளியேறி, தொலைதூர தேசத்திற்குச் சென்றான் , அங்கு கெடுதலான நண்பர்களுடனும் சேர்ந்து உணவுப் பழக்கங்களிலும், உல்லாச பொழுதுபோக்குகளிலும் தன்னுடைய பணத்தினை தண்ணீர் போன்ற கணக்கு வழக்கில்லாமல் பணத்தை செலவழித்தான் .அவனிடமிருந்த பணம் முழுவதும் வீணாகி காலியாகவிட்டதால் அவனோடு சேர்ந்திருந்த கெடுதலான நண்பர்கள் அனைவரும் அவனைவிட்டு விலகி சென்றுவிட்டனர் மேலும் அந்த பகுதியில் கொடிய பஞ்சம் வேறு வந்துவிட்டது அதனால் யாரும் அவனுக்கு உதவிசெய்திடாமல் தம்மிடம் அன்டவிடாமல் துரத்தினர் அன்றாட உணவிற்குஅல்லாட வேண்டிய நிலையில் அந்த நாட்டில்ஏற்பட்ட கொடிய பஞ்சத்தால்.அவனுக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை.அவனுடைய நண்பர்கள் யாரும் அவனுக்கு உணவோ அல்லது அதனை பெறுவதற்கான பணத்தையோ அளிக்கவில்லை.அவன் ஏதாவது கூலிவேலையாவது செய்து தன்னுடைய உணவிற்கு தேவையானஅளவு சம்பாதிக்கமுடியாமல் தின்டாடினான் அதனால் தெருவில் சுற்றித்திரியும் பன்றிகளுக்கான உணவை மட்டும் எப்படியோபெற்று உண்டு உயிர்வாழும் நிலைக்கு தள்ளப்ப ட்டான் இந்நிலையில் அவன் தன்னுடைய தகப்பனாரையும் சகோதரனையும் குறித்து நினைத்து: ஏங்கினான் தன்னுடைய தகப்பன் வீட்டில் ஊழியஞ்செய்கிறவர்களுக்கு கிடைக்கும் உணவுக்கூட எனக்கு கிடைக்கவில்லையே என்றும் தகப்பனாரின் வீட்டின் வேலைக்காரர்கள் கூட எவ்வளவு சுகமாயிருப்பார்கள்; ஆனால், இங்கே நான் உணவு, தங்குமிடம் ஆகியவற்றிற்காகவே மிகவும் போராடி வருகிறேன், அதனால் நான் இன்றே என்னுடைய தந்தையின் இருப்பிடத்திற்கு திரும்பி சென்று அவருடைய வேலைக்காரனாக என்னைக் ஏற்று காப்பாற்றுமாறு என்னுடைய தந்தையிடம் கோருவேன். " என முடிவுசெய்து தன்தையின் வீட்டிற்கு திரும்பி சென்றான் இதற்கிடையில், அவரது தந்தை எப்போதும் தனது இரண்டாவது மகனை நினைத்து கொண்டிருந்தார். அவர் ஜன்னல்களுக்கு அருகில் உட்கார்ந்து கொண்டு தன்னுடைய இரண்டாவது மகன் எப்போது மனம்திருந்தி தன்னுடைய வீட்டிற்கு திரும்பிவருவான் என எதிர்பார்த்து காத்திருந்தார். ஒரு நாள் சன்னல் வழியாக பார்த்திடும்போது தூரத்தில் தன்னுடைய இரண்டாவது மகன் வருவதைக் கண்டார். அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் தன் வீட்டை விட்டு வெளியில் வந்து தன்னுடைய இரண்டாவது மகனை வரவேற்றார் இரண்டாவது மகன், "அப்பா, நான் உன்னுடைய மகனாக இருப்பதற்குக தகுதியற்றவன் நான் உங்களுடைய கட்டளைக்கு கீழ்படிந்து வாழாமல் தான்தோன்றிதனமாக வாழ்ந்த சொத்துக்கள் அனைத்தையும் அழித்துவிட்டேன் எனக்கு உணவிற்கு வழியெதுவும் இல்லை அதனால் என்னை உங்களுடைய வீட்டில் ஒரு வேலைக்காரணாக பணியமர்த்தி எனக்கு தேவையான உணவு.அளித்தால் மட்டும் போதும் " என அழுதுபுலம்பினான் தந்தையானவர் தன்னுடைய இரண்டாவது மகன் உயிருடன் திரும்பி தன்னிடம் வந்துசேர்ந்ததால் போதும் என தவித்துகொண்டிருந்தவர் உடன் அனைவருக்கும் நல்ல விருந்துடனும் இன்னிசையோடும் கொண்டாடிமாறு உத்திரவிட்டார் மூத்த மகன் தன்னுடைய வேலையில் இருந்து திரும்பி வந்தான். அவன் தன்னுடைய வீட்டில் இசை , நடனம் ,பாட்டொலி விருந்து என பரபரப்பாக இருந்ததால் என்னகாரணம் என தங்களுடைய வீட்டின் பணிபுரியும் வேலைக்காரன் ஒருவனை விசாரித்தபோது இரண்டாவது மகன் திரும்பி வந்த மகிழ்ச்சியை கொண்டாட தன்னுடைய தந்தையால் இவ்வாறு செய்யப்பட்டுள்ளதை அறிந்து கொண்டு அவன் நேராக தந்தையிடம் மிககோபமாக சென்று நான் எப்போதும் உங்களுடைய உத்திரவின்படி செயல்பட்டு உங்களுடனேயே இருந்தும் எந்தவித மகிழ்ச்சியான நிகழ்ச்சியையும் ஏற்பாடு செயதிடாமல் தற்போது இரண்டாவது மகன் தந்னுடைய பங்கு சொத்தினை அழித்ததோடு மட்டுமல்லாது கெட்டுபோய் திரும்பிவந்ததை இவ்வளவு மகிழ்ச்சியாக கொண்டாடுவதா என கேட்டான் அதற்த அவருடைய தந்தைானவர்து, "என் மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய், மிகுதியுள்ள சொத்து முழுவதும் உன்னுடையதுதான் , உன் னுடைய இளைய சகோதரன் இறந்துவிட்டான், இப்போது தான் அவன் உயிரோடு திரும்பிவந்திருக்கிறான், அதனால் நாம் இப்பொழுது அவன்மனம் திருந்தி வந்ததற்காக நாம் மகிழ்ச்சியடையவேண்டும் ?" கூறியதை தொடர்ந்து மூத்த மகன் தனது தந்தையின் வார்த்தைகளுக்குப் பின்னால் உள்ள அன்பை புரிந்து கொண்டாருஇளைய சகோதரனைப் பற்றிய பழைய நிகழ்வுகளை எல்லாம் மறந்துவிட்டு கொண்டாட்டத்தில் பங்கேற்க முடிவு செய்தான்

திங்கள், 1 மே, 2017

குறுக்குவழியில் வெற்றியடைய திட்டமிடுபவர்களை கண்டு ஒதுங்கி செல்க


ஒருநாள் ஆமையும் யானையும் எதிரெதிரே சந்திக்கொண்டன அதனால் யானையானது எகத்தாளமாக, " நீ மிகச்சிறியவன் என் வழியில் நீ குறுக்கிட்டுவிட்டாய் அதனாள் என்னுடைய ஒரு காலடியினால் நான் உன்னை நசுங்கிவிடுவேன் ." என மிரட்டியது இருந்தபோதிலும் அந்த ஆமையானது பயப்படாமல் அப்படியே நின்றுகொண்டிருந்தது யானையானது ஆமையை நோக்கி வந்தாலும் மிதிக்காமல் தான்டிச்சென்றது ஆனாலும் ஆமையானது யானையை பார்த்து " ஐயா யானையாரே உங்களுடைய உருவத்தை வைத்து பெருமைப்பட்டுக் கொள்ளவேண்டாம், நானும் உன்னைப் போல வலுவாக இருக்கிறேன்!" என்று சொன்னது, அதனால் யானையானது ஆமையை பார்த்து " என்ன நீ என்னைபோன்ற பலசாலியாக இருக்கின்றாயா" என சிரித்தது. எனவே ஆமையானது யானையாரை பார்த்து அடுத்தநாள் தான் வாழும் மலைக்கு வந்தால் இருவரிலும் யார் வலுவானவர் என போட்டியிட்டு வெற்றிபெறுவதை வைத்து முடிவுசெய்யலாம் என சவால் விட்டது ஆமையின் அந்த சவாலை யானையாரும் ஏற்றுக்கொண்டது இதனிடையே அந்த ஆமையானது அந்த மலைக்கும் கீழ்பகுதியில் ஓடும் ஆற்றில் நீர் யானைவாழ்ந்துவந்தது அதனிடம் சென்று நான் உன்னை போல் வலுவானவனாக இருக்கிறேன் என்று! "ஆமை கூறி யது உடன் அந்த நீர்யானை அதனை கேட்டு சிரித்து உடன் நாம் இருவரில் யார்வலுவானவர் என நமக்குள் கயிறு இழுக்கும் போட்டியொன்றை வைப்போம் அதில் வெற்றி பெறுவது யார்என முடிவுசெய்திடுவோம் என ஆமையானது நீர்யாணையை போட்டிக்கு அழைத்தது அந்த போட்டியை நீர்யாணையும் ஏற்றுக்கொண்டது மறுநாள், சூரிய உதயத்திற்கு முன், அந்த ஆமை மலைக்கு கீழே ஆமை சென்றது பின்னரி ஒரு நீண்ட கயிறில் முடிச்சிட்டு இதனை உன்னுடைய வாயால் பிடித்துகொள் நான் மலையின் மேல்பகுதிக்கு சென்று தயார் எனக்கூறியவுடன் இந்த கயிற்றினை உன்வாயால் பிடித்து இழுத்து கொண்டிரு நான் விடுஎன கூறியவுடன் விட்டிடு என நீர்யானையை பார்த்து க்கூறி மலையின் மேல்பக்தியில் யானை நின்றுகொண்டிருந்த இடத்திற்கு வந்தது அங்கு அந்த யானையிடமும் மலையின் கீழ்பகுதியிலிருந்து இணைத்து கொண்டுவந்த கயிற்றின் மற்றொருமுனையை அதனிடம் கொடுத்து தான் மலையின் கீழ்பகுதிக்கு சென்று தயார் எனக்கூறியவுடன் இந்த கயிற்றினை உன்வாயால் பிடித்து இழுத்து கொண்டிரு நான் விடுஎன கூறியவுடன் விட்டிடு எனக்கூறிய பின் மலையின் கீழ்பகுதிக்கு ஓடிச்சென்றது பாதிதூரம் வந்தவுடன் தன்னை கீழேயிருந்து நீர்யானையும் மேலேயிருந்து யானையும் பார்க்கமுடியாதவாறு மறைந்து நின்று கொண்டு தயார் எனக்கூறியது உடன் யானையும் நீர்யானையும் அந்த கயிற்றின் இருமுனைகளையும் தங்களுடைய வலுவனைத்தும் சேர்த்தும் இழுத்துபார்த்தன ஆயினும் கயிற்றினை இழுத்து மற்றமுனையில் இருப்பவரை தோல்வியுற செய்யமுடியவில்லை இந்நிலையில் விடடிடு என ஆமைகூறியதும் அவையிரண்டும் இழுப்பதை அப்படியே விட்டிட்டன அதனை தொடர்ந்து அவை தங்களுடைய தோல்வியை ஒத்துகொண்டு ஆமையே தங்களைவிட வலுவானதுஎன ஒப்புக்கொண்டன இவ்வாறு குறுக்குவழியில் வெற்றியடைய திட்டமிடுபவர்கள் இந்த ஆமையை போன்றே தம்முடைய குறுக்குவழிபுத்தியினால் நம்முடைய சக்திகளை / முயற்சிகளைத் திருடுவார்கள் / பயன்படுத்துவார்கள். அவ்வாறானவர்களால் நாம் பாதிக்கபடாமல் சரியான வழியில் நம்முடைய திறமையையும் அதிகாரத்தையும் நிரூபிக்க கற்றுக்கொள்க

வியாழன், 27 ஏப்ரல், 2017

மனிதகொல்லி புலியை கொல்லலாமா


இந்திய காடுகளில் சிங்கம் புலி போன்ற காட்டுவாழ்விளங்குகள் வாழ்ந்துவருவதே இயற்கையே அவ்வாறான விலங்குகள் மற்ற காட்டு விலங்குகளை அடித்து கொன்று தங்களுக்கு தேவையான இரையாக உட்கொள்வதும் இயற்கையே இவ்வாறான புலி ஒன்று வயதாகிவிட்டதால் காட்டில் ஓடும்விலங்குகளை பாய்ந்து சென்று பிடித்திடமுடியாமல் ஆன நிலையில் காடுகளில் தங்களுடைய தேவைக்கான காய்கணிகள் வேர்கள் விறகு போன்றவைகளை சேகரிக்க செல்லும் விலங்குகளை போன்று வேகமாகஓடமுடியாத மனிதர்களை அடித்து கொன்று உணவாக்கி கொண்டது இதனால் மனிதர்கள் அந்த காட்டிற்குள் செல்வதை தவிர்த்தனர் அதனால் அந்தபுலியானது காட்டைவிட்டு மனிதர்கள் வாழும் கிராமப்புறத்திற்குள் வந்து கிராமத்தில் வளர்க்கும் ஆடுமாடுகளையும் சிறுவர்களையும் அடித்துகொன்று சாப்பிட்டு செயலை வழக்கமாக கொண்டிருந்தது அதனால் பாதிப்புற்ற அந்த கிராமத்து மக்கள் தங்களையும் தங்களுடைய உடமையான விலங்குகளையும் காத்துகொள்வதற்காக மிகப்பிரபலமான வேட்டையாடி ஒருவரை இந்தமனிதனை கொல்லும் புலியை கொன்று தங்களுடைய கிராமத்தை காத்திடுமாறு வேண்டிகொண்டனர் அதனடிப்படையில் அந்த வேட்டைகாரர் அந்த புலியானது அந்த கிராமத்திற்கு வரும் வழி திரும்பசெல்லும் வழி ஆகியவிவரங்களை அறிந்துகொண்டபின்னர் அந்த புலிவழக்கமாக அந்த கிராமத்திற்கு வரும் வழியில்ஒரு மரத்தின் அடியில்நல்ல காளைகன்றினை கட்டிவைத்தவிட்டு மரத்தின் மேலே கையில் துப்பாக்கியுடன் காத்திருந்தார் அந்த மனிதகொல்லியான புலியானது வேட்டைக்காரன் மரத்தின் மீது தன்னை குறிவைத்து கொல்வதற்கு தயாராக இருப்பதையும் காளைகன்று மரத்தினடியில் கட்டப்பட்டிருப்பதையும் அறிந்து கொண்டு தூரத்திலேயே நின்றுவிட்டது வெகுநேரமாகியும் அந்த மனிதகொல்லியான புலியானது வராததால் வெறுப்புற்று சரி சாப்பிட்டுவரலாம் எனஅந்த வேட்டைக்காரன் மரத்திலிருந்து கீழே இறங்கி ஊருக்குள் சென்றார் தூரத்திலிருந்து இதனை பார்த்து கொண்டிருந்த மனிதகொல்லி புலியானது இன்று நமக்கு நல்ல இரைகிடைத்தது என மிகமெதுவாக வந்துஅந்த காளைக்கன்றை அடித்து காட்டிற்குள் இழுத்து சென்று தின்றது நல்ல உணவு கிடைத்ததால் ஒருபுதருக்கு அருகில் அப்படியே படுத்து உறங்கிவிட்டது இந்த செய்தியை கேட்டறிந்த வேட்டைக்காரன் உடன் அந்த புலி சென்றவழியை பின்பற்றி அருகே சென்றபோது அந்த புலியானது உண்டமயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்பதைபோன்று நன்றாக ஆழ்ந்து உறங்கி கொண்டிருந்தது . தூங்குகின்ற விலங்கினை கொல்லலாமா என மனதில் கேள்வி ஒன்று உறுத்தியது அதனால் அந்த வேட்டைக்காரன் சிறிது தயங்கினார் ஆனாலும் அது சாதாரன புலியாக இருந்தால் இவ்வாறு தூங்கிடும்போது கொல்லாமல் விட்டுவிடலாம் அது மனிதகொல்லி புலியாக இருப்பதால் தயங்ககூடாது என அதனை துப்பாக்கியால்சுட்டு கொன்றார் உடன் கிராமமக்கள் அனைவரும் வந்து பார்த்து அவரை தங்களுடைய உயிரை காத்த உத்தமர் எனவாழ்த்தி சென்றனர்

புதன், 19 ஏப்ரல், 2017

எதிரியின் உயிரை பாதுகாத்திடும் மனநிலை பெற்றிடுக


ஒருகாலத்தில் அரேபிய நாட்டில் தலைவர் யூசுப் என்பவர் வாழ்ந்துவந்தார் அவர் பாலைவணத்தில் தன்னுடைய கூடாரத்தில் தனியாக அமர்ந்திருந்தார் அதுஒரு இரவு நேரம் என்பதால் வானத்தில் ஜொலிக்கும் நட்சரத்தின் ஒளியை தவிர அந்த கூடாரத்தில் வேறு ஒளிவசதி எதுவும் இல்லை அவர் மிகவும் ஆழ்ந்த மனவருத்ததுடன் அமர்ந்திருந்தார் கடந்த பலநாட்களாக இரவும் பகலும் அழுதுகொண்டே இருந்ததால் அவருடைய கண்களிருந்து கண்ணீரானது ஆறுபோன்று தரையில் ஓடிக்கொண்டே இருந்தது ஏனெனில் அவருடைய ஒரேமகனான அவருக்குபிறகு அரசனாக வேண்டிய மகன் எதிரிகளால் கொல்லப்பட்டதால் அவருடைய மனதில் ஏற்பட்ட வருத்தம் வார்த்தைகளால் சொல்லமுடியாத அளவிற்கு மிகஅதிகமாக இருந்தது அதனால் அவர் வேறு எந்தவொரு பணியையும் செய்திடாமல் அப்படியே அமர்ந்தவிட்டார் அந்த சமயத்தில் புதியவன் ஒருவன் மிகவிரைவாக அந்த பாலைவணத்தில் தன்னுடைய உயிர்தப்பித்தால் போதுமென ஓடிவந்துகொண்டிருந்தான் . அப்புதியநபர் யூசுப் அமர்ந்திருந்த கூடாரத்திற்குள் உள்நுழைந்து அவருடையகாலடியில் வீழ்ந்துவணங்கி தலைவரே என்னை கொல்லுவதற்கு பல்வேறு எதிரிகள் துரத்திவருகின்றனர் அவர்களிடம் உயிர்தப்பித்தால் போதுமெனவ ஓடிவருகின்றேன் நீங்கள்தான் என்னுடைய உயிரை காப்பாற்றவேண்டும் என்னால் இந்த பாலைவணத்தில் இதற்கு மேல் ஓடமுடியாது நீங்கள் நல்ல தலைவர் என அனைவரும் கூறுகின்றனர் இன்று ஒரு இரவு மட்டும் நான் தங்குவதற்கு உங்களுடைய கூடாரத்தில் இடமளித்தால் போதும் நீங்கள் கோடிபுன்னியம் செய்தவராவீர் என பணிவாக கூறினான் ஐயா புதியவரே நீங்கள் என்னுடைய விருந்தாளி அதனால் எழுந்துவாருங்கள் இரவு உணவை உங்களுடைய வயிறார சாப்பிடுங்கள் பின்னர் இரவு நன்றாக ஓய்வெடுங்கள் எனக்கூறி அந்தநபுதிய நபருக்கு தேவையான இரவு உணவையும் ஓய்வெடுப்பதற்கான படுக்கையும் வழங்கினார் இரவு தூங்கியபின் விடியற்காலை யூசுப் ஆனவர் எழுந்து அந்த புதியநபரை எழுப்பி ஜயா எழுந்திருங்கள் சூரியன் உதித்து நல்ல வெளிச்சம் வருவதற்குமுன் இந்த இடத்தைவிட்டு சென்றுவிடுவது உங்களுக்கு நல்லது உங்களால் மேலும் நடக்கமுடியாது என்பதால் குதிரை ஒன்று உங்களுடைய பயனத்திற்கு தயாராக இருக்கின்றது இந்தாருங்கள் உங்களுடைய செலவிற்கு தேவையான பொற்காசுகள் என அந்த புதிய நபர் புறப்பட்டு செல்வதற்கு தேவையான ஏற்பாட்டுடன் அவரை புறப்பட துரிதபடுத்தினார் இந்நிலையில் அந்த புதியநபர் தலைவர் யூசுப்பை பார்த்தவுடன் இவருடைய மகனைத்தான் தான் கொன்றுவிட்டோம் ஆயினும் தன்னை பழிவாங்காமல் இரவு தங்கி ஓய்வெடுப்பதற்கு வசதிசெய்துகொடுத்ததுமட்டுமல்லாமல் மிகபாதுகாப்பாக செல்ல ஏற்பாடு வேறு செய்கின்றாரே என மிகவெட்கத்துடன் யூசுப்பின் கால்களில் மீண்டும் விழுந்து வணங்கி ஐயா நான்தான் உங்களுடைய மகனை கொன்றவன் இந்தாருங்கள் குறுவாள் என்னை இந்த குறுவாளால் குத்தி உங்களுடைய மகனை கொன்ற பழியை தீர்த்து கொள்ளுங்கள் என அழுது புரண்டான் யூசுப்பானவர் ஐயா புதியவரே நீங்கள் தற்போது என்னுடைய விருந்தாளி விருந்தாளியை சகமனிதன் கொல்வது நல்லதன்று மேலும் உங்களை பழிவாங்கவேண்டும் என்ற என்னமே எனக்கு துளிகூட இல்லை என்னுடைய மகன் இந்த பாலைவனத்தில் கடினமான வாழ்க்கையில் வருத்தப்படாமல் இருக்கும்பொருட்டு அவனை ஆழ்ந்த உறக்கத்தில் செல்வதற்கு உதவியுள்ளீர்கள் அதனால் இந்தாருங்கள் என கூடுதலாக மேலும் மூன்றுமடங்கு பொற்காசுகளை வழங்கி உங்களுடைய எதிரி யாரும் இங்கு வந்து சேருவதற்குள் நீங்கள் இங்கிருந்து தப்பித்து செல்லுங்கள் என்று கூறி யூசுப் ஆனவர்அந்த புதிய நபரை வழிகூட்டி பாதுகாப்பாக அனுப்பிவைத்தார்

புதன், 5 ஏப்ரல், 2017

வயதான மூதாட்டியும் வங்கிகிளையின் காசாளரும்


கடந்த நவம்பர் 8,2016 பிறகு ஒரு வயதான மூதாட்டி வாழ்க்கையின் அன்றாட செலவிற்காக தன்னுடைய வங்கி கணக்கில்இருந்து ரூபாய் 500 மட்டும் எடுத்திடுவதற்காக வங்கியின் கிளைஅலுவலகத்திற்கு சென்றார் அப்போது அந்த வங்கிகிளையின் பணம் வழங்கும் காசாளரிடம் தான் காசோலை வைத்திருப்பதாகவும் தன்னுடைய கணக்கில் இருந்து ரூபாய் 500 மட்டும் வழங்கும்படியும் கோரினார் உடன் அவ்வங்கிகிளையின் பணம் வழங்கும் காசாளர் ரூபாய் 500 ஐ தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தில் மட்டுமே எடுக்கவேண்டும் இங்கு அவ்வளவு குறைந்த தொகை வழங்கஇயலாது என மறுத்தார் உடன் ஐயா நான் மிகவும் வயதானவள் அவ்வாறான தானியங்கி இயந்திரத்திற்கு சென்று என்னால் பணம் எடுக்கமுடியாது என மன்றாடியபோது அதுதான் எங்களுடைய வங்கியின் விதி நீங்கள் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்திற்கு சென்று பணம் எடுப்பதுதான் நல்லது நகருங்கள் வரிசையாக உங்களுக்கு பின்புறம் நிற்பவர்களின் தேவையை நான் செயற்படுத்தவேண்டும் என அந்த பணம் வழங்கும் காசாளர் அந்த மூதாட்டியை விரட்டியடிப்பதிலேயே குறியாக இருந்தார் உடன் அந்த மூதாட்டி சரி ஐயா என்னுடைய கணக்கில் மிகுதி எவ்வளவுதான் தொகை இருக்கின்றது எனக்கோரியபோது அவருடைய கணக்கில் ரூபாய் முப்பது இலட்சம் இருப்பதாக அந்த பணம் வழங்கும் காசாளர் கூறினார் உடன் அந்த மூதாட்டியானவர் அப்படியா ஐயா ரொம்ப நல்லது என்னுடைய வங்கி கணக்கினை இன்றே முடித்துகொள்கின்றேன் அந்த தொகை முழுவதும் இப்போதே வழங்கிடுங்கள் என மூதாட்டி கோரியபோது அவ்வளவு அதிக தொகை எடுக்கவேண்டும் எனில் வங்கிகிளைமேலாளரைத்தான் நாளை நேரில் சந்தித்து எடுத்து செல்லமுடியும் அதனால் தயவுசெய்து இடத்தை காலி செய்து என்னுடைய மற்றைய பணியை செய்யவிடுங்கள் என மீண்டு்மஅந்த மூதாட்டியை விரட்டியடிப்பதிலேயே குறியாக இருந்தார் உடன் அந்த மூதாட்டி சரி ஐயா என்னுடைய கணக்கில் இருந்து நான் தற்போது அதிகபட்சம் எவ்வளவு தொகைதான் எடுக்கமுடியும் எனக்கோரினார் அதனை தொடர்ந்து பணம் வழங்கும் காசாளர் அதிகபட்சம் தற்போது நீங்கள் ரூபாய் மூன்றுஇலட்சம் எடுக்கலாம் எனபதில் கூறியவுடன் தன்னுடைய கையிலிருந்த காசோலையில் தொகை ரூபாய் 300000 என எழுதி தன்னுடைய கையொப்பமிட்டு இப்போது அந்த தொகையை உடன் தனக்கு வழங்கிடுமாறு அந்த மூதாட்டி கோரினார் அதன்பின்னர் அந்த பணம் வழங்கும் காசாளர் அந்த மூதாட்டி கோரியவாறு தொகை ரூபாய் 300000 வழங்கினார் பின்னர் அந்த மூதாட்டியானவர் அதில் ரூபாய் 500 ஐ மட்டும் தன்னுடைய பணப்பையில் எடுத்துவைத்துகொண்டு மிகுதி 299500ஐ அந்த காசாளரிடம் கொடுத்து இதனை என்னுடைய வங்கிகணக்கில் வரவு வைத்திடுக என கூறி கொடுத்தார் அதனை தொடர்ந்து அந்த வங்கிகிளையின் பணம் வழங்கும் காசாளர் பதிலேதும் பேசமுடியாமல் அப்படியே உட்கார்ந்து விட்டார்

வெள்ளி, 31 மார்ச், 2017

பொருட்களை விட மனித பாதுகாப்பே மிகமுக்கியமானது


முற்காலத்தில் வாழ்ந்துவந்த ஒரு அரசனுக்கு ஏராளமான அடிமைகள் சேவகர்களாக பணிபுரிந்து வந்தனர் ஒரு நாள் பக்கத்து நாட்டுக்கு முக்கிய செய்தியை நேரடியாக விவாதிப்பதற்காக அந்த அரசன் தன்னுடைய அடிமைகளுடன் குதிரைவண்டியில் பயனம் செய்தார் பயனம் செய்த பாதையானது மேடுபள்ளம் அதிகமாக இருந்தன அவ்வாறான பள்ளம் ஒன்று பாதையில் குறுக்கிட்டபோது குதிரைவண்டியானது பள்ளத்தில் இறங்கி பின்னர் மேட்டில் எகிறி ஏறி சென்றது இதனால் அந்த அரசன் கைகளில் வைத்திருந்தசிறுபெட்டியில் இருந்த முத்துக்கள் அனைத்தும் தரையில் கொட்டிசிதறிவிட்டன உடன் அரசன் தான் பயனம் செயந்துவந்த குதிரை வண்டியை நிறுத்தம் செய்து தன்னுடைய கையில் இருந்த பெட்டியலிருந்து சிதறியோடிய முத்துகள் அனைத்தையும் தேடிசேகரித்திடுமாறு உத்திர – விட்டார். அதனை தொடர்ந்து ஒரு அடிமையை தவிர மற்றவர்கள் அனைவரும் சிதறிய முத்துகளை தேடிபொறுக்கி கொண்டுவந்த சேர்த்தனர் ஒரு அடிமை மட்டும் சிதறிய முத்துகளை தேடிபொறுக்கி கொண்டுவந்த சேர்த்திடும் பணியை செய்திடாமல் அரசனுக்கு அருகிலேயே பாதுகாப்பாக நின்றுகொண்டிருந்தான் இதனை கண்ணுற்ற அரசன் தன்னருகிலேயே நின்று கொண்டிருந்த அடிமையிடம் ஏன் அவ்வாறு சிதறிய முத்துகளை தேடிபொறுக்கி கொண்டுவந்த சேர்த்திடும் பணியை செய்திடாமல் நிற்கின்றாய் என வினவியபோது ஐயா அதைபோன்ற ஏராளமானமுத்துகள் நீங்கள் சம்பாதித்து விடுவீர்கள் அதைவிட உங்களை பாதுகாப்பதுதான் என்னுடைய தலையான பணியாகும் என பதில்கூறினான் அதனை தொடர்ந்து அந்த அடிமையை தன்னுடைய அந்தரங்க பாதுகாவலனாக தன்னுடைய வாழ்நாள்முழுவதும் பணியமர்த்தி கொண்டார்

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...