ஞாயிறு, 21 அக்டோபர், 2018


வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டண்மை சட்டம்2008 இந்தியாவில் 2008 ஆம் ஆண்டிற்கு முன்புவரை இந்திய கூட்டாண்மைசட்டம்1932 என்பது நடைமுறையில் இருந்துவந்தது மனிதநாகரிகம் தோன்றியபின்னர் ஏராளமான அளவில் மிகவும் அதிகமாக வியாபார உலகம் மாறிவந் துள்ளது . அதிலும்உலகம் முழுவது ஒரேபொருளாதார கிராமமாக மாறியுள்ள தற்போதைய சூழலில் இந்த இந்திய கூட்டாண்மை சட்டமானது இவ்வாறான மாறிய உலகபொருளாதாரத்திற்கு பொறுத்தமானதாக அமையவில்லை. இந்த இந்திய கூட்டாண்மைசட்டம்1932 ஆல் பின்வரும் பாதகமான செயல்கள் ஏற்படுகின்றன 1.கூட்டாண்மை நிறுவனத்தின் ஒவ்வொரு கூட்டாளியின் பொறுப்புகளும் வரையறையற்றதாக உள்ளன 2.கூட்டாளிகள் கூட்டாகவும் தனித்தனியாகவும் கூட்டாண்மை நிறுமத்தின் பொறுப்பினை ஏற்கவேண்டியுள்ளதுஅதனால்கூட்டாளிகளுடைய தனிப்பட்ட சொந்த சொத்துகளும் இந்த கூட்டாண்மையின்பொறுப்பிற்காக சரிகட்டும் நிலை ஏற்படுகின்றது 3 ஒரு கூட்டாளி கூட்டாண்மை நிறுவனத்திலிருந்து ஓய்வுபெறாதவரையிலும் மற்ற கூட்டாளிகள் ஏற்று அனுமதிக்காதவரையிலும் அவர் அந்த கூட்டாண்மை நிறுமத்தில் தன்னுடைய பங்கினை மற்றவர்களுக்கு மாற்றிதர இயலாது 4 இந்த கூட்டாண்மை நிறுவனத்தில் குறிப்பிட்ட நபர்களுக்கு மேல் கூட்டாளிகளாக சேர்த்து கொள்ளமுடியாது அதனால் வியாபாரத்திற்குகூடுதலாக தேவைப்படும் முதலீட்டினை கூடுதலான கூட்டாளிகளை சேர்த்துக்கொண்டுதம்முடைய வியாபாரத்தை மேலும்விரிவாக்கம் செய்திடவும் மேம்படுத்திடவும் முடியாது மேலேகூறிய காரணங்களினால் குறைந்த அளவு நிபந்தனை யுடன் நிறுமச்சட்டத்தின் பயன்களுடனும்கூட்டாண்மை நிறுமத்தின் நெகிழ்வு தன்மையுடனும் சேர்ந்த புதியவகை கூட்டாண்மை நிறுமம் தோன்றிடவேண்டிய கட்டாயத்தேவை மிக நீண்ட நாட்களாக இருந்துவந்தது மேலும் உலகளாவிய பணச்சிக்கலும் பொருளாதார மந்த நிலையும் ஏற்பட்ட 1980ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில்அமெரிக்க ஐக்கியநாடுகளில் ஏராளமான கூட்டாண்மை நிறுமங்கள் நொடித்தநிறுமமாக அறிவிக்கப்ட்டன அதனால் பல நிறுமங்கள் பல்வேறு சட்டசிக்கல்களில் மாட்டிக்கொண்டு அதிலிருந்து வெளியேறமுடியாமல் தவித்துகொண்டிருந்தன அதனை தொடர்ந்து நிறுமத்தின் அனைத்து கூட்டாளிகளும் கூட்டாண்மை நிறுமத்தின் கடனாளிகளுக்கு தங்களுடைய சொந்த சொத்துகளை விற்றுகடனிற்கு ஈடுசெய்திடும் இக்கட்டான சூழலிற்கு தள்ளப்படடனர் அதனால் 1991 ஆம் ஆண்டு முதன்முதலில் கூட்டாண்மை நிறுமத்தில் பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை என்ற கருத்துரு அமெரிக்க ஐக்கியநாடுகளின் டெக்ஸாஸ்மாநிலத்தில் அறிமுகபடுத்தப்பட்டது அதனை தொடர்ந்து அமெரிக்க ஐக்கியநாடுகளின் மிகுதி உள்ள மாநிலங்களிலும் இதற்கான சட்டத்தை வகுத்து நிறைவேற்றின அவ்வாறே இங்கிலாந்து ஆஸ்திரேலியா வளைகுடா நாடுகள் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இந்த பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது இந்தியாவில் இங்கிலாந்து பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை சட்டம்2000, சிங்கப்பூர் பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை சட்டம்2005 ஆகிய இரண்டு சட்டங்களின் அடிப்படையில் சிறந்த வல்லுனர்களின் குழுவானதுபொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை என்பது தனியானதொரு நபராகவும் அதனுடைய கூட்டாளி உறுப்பினர்கள் தனியாக இருக்குமாறும் இந்தியநாட்டில் உருவாக்க அனுதிக்கின்றது இந்த பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மையின் அடிப்படை கருத்துரு பின்வருமாறு 1இதுநிறுமங்களின்சட்டத்தின்படி வரையறுக்கப்பட்ட பொறுப்பினையும் கூட்டாண்மை நிறுமத்தின் நெகிழ்வுதன்மையும் கொண்டது 2.நிறுமங்களின் சட்டத்தின் அடிப்படையில்உருவாக்கப்படும் நிறுமம் போன்றேஇந்த நிறுமமானது அதன்கூட்டாளிகள் விலகினாலும் புதியவர்கள் சேர்ந்தாலும் நிலையானதும் தனியானதுமான நிறுமமாக அதனுடைய செயல்அமைந்திருக்கும் 3.வரையறுக்கப்-பட்ட பொறுப்பு கூட்டாண்மை நிறுவனமானது அதனுடைய சொந்தபெயரில் சொத்துகளை வைத்திருக்கவும் ஒப்பந்தங்களை ஏற்படுத்திடவும் முடியும் .4 இது தனிப்பட்ட உருவமைப்பை கொண்டுள்ளதால் அதனுடைய சொத்துக்களின் அளவிற்கே அதனுடைய பொறுப்புகளும் இருக்கும் அதனால்அதன் கூட்டாளிகளின் பொறுப்புகள் அவர்கள் ஏற்றுக்கொண்ட பொறுப்பின்அளவிற்குமட்டுமே பொறுப்பேற்க முடியும் .எந்தவொரு கூட்டாளியும்மற்ற கூட்டாளிகளின் தன்னிச்சையான செயல்களுக்கும் அனுமதிக்கப்படாத செயலிற்கும பொறுப்பேற்கமுடியாது அதாவது தனிப்பட்ட கூட்டாளி நபர்ஒருவர் மற்ற கூட்டாளியின் தனிப்பட்டமுறையிலான கூட்டாண்மை நிறுவனத்தின் இழப்பிற்கும் பொறுப்பிற்கும் பொறுப்பாகாமல் இதன்மூலம் பாதுகாப்பு அளிக்கப்படுகின்றது கூட்டாளிக்களுக்கிடையே ஏற்படுத்தப்படும் ஒப்பந்தம் அல்லது கூட்டாளிகளுக்கும் கூட்டாண்மை நிறுமத்திற்குமிடையே ஏற்படுத்தப்படும் ஒப்பந்தம் ஆகியவற்றின் அடிப்படையில் கூட்டாளிகளின் கடமைகளும் பொறுப்புகளும்பொறுப்பு வரையறுக்கப்பட்டபு கூட்டாண்மை சட்டத்திற்குள் நிருவகிக்கப்படுகின்றது அதாவது இந்த பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை என்பது மிகமேம்பட்ட கூட்டாண்மை நிறுமம் வரையறுக்கப்பட்ட நிறுமம் ஆகிய இரண்டும் சேர்ந்த கலவையான புதிய நிறுமம் ஆகும் இந்த புதிய பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை சட்டமானது 2006இல் நாடாளுமன்றத்தில் அறிமுகபடுத்தப்பட்டு 2009 இல் பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை சட்டம் 2009 ஆக நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு இந்தியாவில் கொண்டுவரப்பட்டது இதில் 14 பகுதிகளும் 81 பிரிவுகளும் நான்கு அட்டவணைகளையும் கொண்டுள்ளது ஒப்பந்தம் எதுவும் இல்லாத நிலையில் கூட்டாளிகளின் கடமைகளும் பொறுப்புகளும் பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை சட்டத்திற்குள் அட்டவணை-1இன்வாயிலாக நிருவகிக்கப்படுகின்றது தற்போது உள்ள கூட்டாண்மை நிறுமமானது இந்த சட்டத்தின்படிபொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை நிறுமம் ஆக மாற்றியமைத்து கொள்ள அட்டவணை-2 அனுமதிக்கின்றது தனியார் நிறுவனங்கள் பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை நிறுமம் ஆக மாற்றியமைத்து கொள்ள அட்டவணை-3 அனுமதிக்கின்றது பங்குச்சந்தையில்பட்டியலிடப்படாத நிறுவனங்கள் வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை நிறுமம் ஆக மாற்றியமைத்து கொள்ள அட்டவணை-4 அனுமதிக்கின்றது இந்த சட்டத்தின் நான்காவது அட்டவணைமட்டும் 31.05.2009 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது தேசிய நிறுமசட்டவாரியம் பற்றிய பிரிவுகள் தவிர இந்த சட்டத்தின் மற்றபிரிவுகள் 31.03.2009 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது இந்த சட்டத்தின் பிரிவு 2(1)(n) பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை என்பதை பற்றி வரையறை செய்கின்றது இந்த சட்டத்தின் பிரிவு 5 இன்படி எந்தவொரு தனிப்பட்டநபரும் அல்லது கூட்டுரு நிறுமமும் சேர்ந்து இந்த பொறுப்பு வரையறுக்கப்பட்ட நிறுமத்தை உருவாக்கிடமுடியும் நிறுமச்சட்டம் பிரிவு3 இன்படி 1.பொறுப்பு வரையறுக்கப்பட்ட நிறுமமாக பதிவுசெய்யப்பட்ட நிறுமம் 2. இந்திய நாட்டின் எல்லைக்கு அப்பால் உருவாக்கப்பட்ட பொறுப்பு வரையறுக்கப்பட்ட நிறுமம்3 இந்திய எல்லைக்கப்பால் உருவாக்கப்பட்ட நிறுமம் ஆயினும் (1) அது கூட்டுருவாக (2) நடப்பில் உள்ள சட்டத்தின்படி ஒரு கூட்டுறவுசங்கமாக பதிவுசெய்யப்பட்டிருந்த (3) நிறுமமல்லாத வேறு வகையில் கூட்டுருவாக உருவாக்கப்பட்ட அல்லது பொறுப்பு வரையறுக்கப்பட்ட நிறுமமாக மத்திய அரசு அரசிதழின் அறிவிக்கப்பட்டநிறுமம் ஆகியவைஒரு கூட்டுரு நிறுமம் ஆகும் என இந்த சட்டத்தின் பிரிவு 2(1)(d)இல் கூட்டுரு நிறுமத்தை பற்றி வரையறுக்கப்படுகின்றது பொதுவாக நீதிமன்றத்தால்அல்லது மற்றசட்டத்தின்படிதனிநபர் ஒருவர் புத்திசுவாதினம் இல்லாதவர் எனஅறிவிக்கப்படாத எந்தவொரு நபரும் திவாலானவராகஇல்லாத நபரும் அவ்வாறு திவாலாவதற்காக பதவுசெய்யாத தனிப்பட்ட எந்தவொரு நபரும் இந்த பொறுப்பு வரையறுக்கப்பட்ட நிறுமத்தில் கூட்டாளியாக சேரமுடியும் இந்த பொறுப்பு வரையறுக்கப்பட்ட நிறுமத்தில் குறைந்தபட்சம் இரண்டு நபர்கள் கூட்டாளியாக கண்டிப்பாகஇருக்கவேண்டும்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...