வெள்ளி, 19 அக்டோபர், 2018

சரக்கு சேவைவரி அறிமுகம்


தற்போது உலகில் ஏறத்தாழ 150 நாடுகள் இந்த சரக்கு சேவைவரியை நடைமுறைபடுத்திவருகின்றன.அதாவது பல்வேறு உலகநாடுகளிலும் ஏற்கனவே நடைமுறையில் இருந்துவந்த மறைமுகவரிகளுக்கு மாற்றாகஅந்தந்த நாடுகளிலும் நாடுமுழுவதும் ஒரேயொரு வரியை செயல்படுத்துவதை போன்று இந்தியாவிலும் மத்திய அரசின் சென்வாட்வரி,மாநிலஅரசின் மதிப்புக்கூட்டுவரி (Value Added Tax (VAT))ஆகிய இரண்டையும் நடைமுறை படுத்தியதே இந்த சரக்கு சேவைவரியின் முதல்படி-முறையாகும் இதற்கடுத்து தற்போது அடுத்தபடிமுறையாக எந்தவொரு பொருளை அல்லது சேவையை வழங்கும்போதும் அதன்மீது மத்தியஅரசும் மாநில அரசுகளும் ஒன்றாக விதிக்க அதிகாரம் கொண்ட புதிய சரக்கு சேவைவரி எனும் புதிய வரிவிதிப்பு முறையை நடைமுறை படுத்தப்படவுள்ளது இந்த சரக்கு சேவைவரியானது வழங்கப்-படுகின்ற அனைத்து பொருட்களுக்கும் அலலது சேவைகளுக்கும் நாடு-முழுவதும் ஒரேமாதிரியான அளவில் வரியை விதிக்க வழிவகுக்கின்றன மேலும் இந்த சரக்கு சேவைவரியானது இறுதி நுகர்வேர் செலுத்தமாறு செய்யப்பட்டுள்ளது மேலும் தான் வழங்கும் பொருட்கள் அல்லது சேவைகளுக்கு செலுத்தவேண்டிய இந்த சரக்கு சேவைவரியில் தான் இதற்காக ஏற்கனவே பெற்ற பொருட்களுக்காக அல்லது சேவைகளுக்காக செலுத்திய வரியை கழித்துகொண்டு(input tax credit (ITC)) நிகரமாக மதிப்புக்கூட்டிய அளவிற்கு மட்டும் இந்த சரக்கு சேவைவரியை செலுத்திட அனுமதிக்கின்றது . நம்முடைய இந்திய நாட்டில் இந்த சரக்கு சேவைவரியை அறிமுகபடுத்துவதன் அடிப்படைநோக்கமே மறைமுகவரிசெலுத்துவதை எளிமைபடுத்துவதேயாகும் அதாவது தற்போது நடைமுறையில் உள்ள மறைமுகவரிகளானது வரியின்மீது வரியாக விதிக்கப்பட்டு இறுதியில் நுகர்வோருக்கு அதிக சுமை ஏற்படுகின்றது எடுத்துகாட்டாக உற்பத்தியாளர் பொருள் ஒன்றை உற்பத்தி செய்திடும்போது அவரால் மத்தியஅரசிற்கு செலுத்தப்படும் உற்பத்திவரியையும் சேர்த்து தற்போது விற்பணைவரி கணக்கிடப்பட்டு செலுத்தபடுகின்றது அதனை தவிர்த்து இந்த புதிய சரக்குசேவை வரியானது பொருளின் அல்லது சேவையின் அடிப்படைவிலையில் மட்டுமே கணக்கிடப்படுகின்றது பொருள் அல்லது சேவை வழங்குதலின் தொடர்சங்கிலியில் வரியின்மீது வரிஎன்றில்லால் மதிப்புகூட்டப்பட்ட அளவிற்கு மட்டும் வரியை கணக்கிட்டு செலுத்திடுமாறும் உண்மையில் இறுதி பயனாளர்மட்டும் இந்த வரியை செலுத்திடுமாறும் கட்டமைக்கப்-பட்டுள்ளது 1. இந்த சரக்கு சேவைவரியின் கீழ் துவக்க வரம்பாக பத்துஇலட்சம் வருடாந்திர வருமானம் உள்ளவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது 2. இதனால் அரசிற்கு அதிக வருமானஇழப்பு ஏற்படும் 3நடுத்தர நிறுவனங்களும் இந்த சரக்கு சேவைவரியின் கீழ் கொண்டுவரப்படுகின்றது 4 உற்பத்திவரி சேவைவரி விற்பணைவரி உள்நுவைவரி போன்ற பல்வேறு வரிகள் அனைத்திற்கும் சேர்ந்து அல்லது அவைகளுக்கு பதிலாக இந்த ஒரேயொருவரியின்கீழ் கொண்டுவரமுடியுமா 5. இந்த வரியை அறிமுக-படுத்துவதற்காக மத்தியஅரசு மத்தியசரக்குசேவைவரி(Central GST (CGST))எனும் சட்டத்தையும் ஒவ்வொரு மாநிலமும் மாநில சரக்குசேவைவரி(State GST (SGST)) எனும் சட்டத்தையும் அமோதித்து சட்டமாக இயற்றவேண்டும் 6. தற்போது அந்தந்த மாநிலங்களும் தத்தமது வருவாய் செலவினங்களுக்கு ஏற்ப போதுமான அளவு வரிவிகித்தை கூட்டவோ குறைக்கவோ செய்கின்றன இந்த புதிய சரக்கு சேவைவரியில் அவ்வாறான நடைமுறை சாத்தியமாகுமா 7.தற்போது உள்ள வரிவசூலித்தல் கட்டமைவினை இந்த புதிய சரக்குசேவைவரி யை நடைமுறைபடுத்துதற்கு போதுமானதாக இருக்குமா என்பனபோன்ற சவால்கள் இந்த சரக்கு சேவைவரியை அறிமுகபடுத்தில் எதிர்கொள்ள வேண்டியவைகளாக உள்ளன இந்த புதிய சரக்குசேவைவரி யை நடைமுறைபடுத்துதால் ஏற்படும் வசதிவாய்ப்புகள் பின்வருமாறு 1.தற்போது ஒருநிறுவனம் பல்வேறு நிலைகளிலும் பல்வேறு வகையான வரிகளை கணக்கிட்டு செலுத்தவேண்டியுள்ளது அதனால் இவ்வாறான வரிகளை கணக்கிட்டு செலுத்துவதே தம்முடைய முதன்மையான பணியாக செய்யவேண்டியுள்ளது இவை இந்த புதிய முறையில் தவிர்க்கபடுகின்றன 2.தற்போது உற்பத்தி வரிக்கென்றும் சேவைவரிக்கென்றும் விற்பணைவரிக்கென்றும் நுழைவுவரிக்கென்றும் தனித்தனியான கட்டமைப்பை நிறுவுகைசெய்து வரிகளை வசூலிப்பதற்கு அதிக செலவாகின்றது 3.ஒருசிலபொருட்கள்அல்லது சேவைகள் இந்த கட்டமைப்பின்கீழ் கொண்டு வரப்படாமலேயே உள்ளன இவையெல்லாவற்றி்கும் ஒரேதீர்வாக இந்த புதிய சரக்குசேவைவரியெனும் ஒரேயொரு கட்டமைப்பின் கீழ் அனைத்து வரிகளும் கொண்டுவரப்படுகின்றன 4. வரியின்மீது வரியை செலுத்தாமலும் பல்வேறுவகையான வரிகளை செலுத்தாமலும் ஒரேயொருவரியை செலுத்தினால் போதும் என்ற புதிய கொள்கை நடைமுறைபடுத்தபடுகின்றது இவ்வாறு வரியின்மீது வரிஎன்றில்லாமல் ஒரேயொரு வரியை அறிமுகபடுத்துவதால் நுகர்வோருக்கு வரிச்சுமை குறைந்து பொருட்களின் அல்லது சேவைகளின் பெறுவதற்கான செலவு குறைகின்றது 5.இந்த புதிய சரக்கு சேவைவரி விதிப்பு முறையால் மாநிலஅரசுகளும் சேவையின்மீது வரிவிதித்திடும் அதிகாரம் பெறுகின்றன இதுவரை இந்த சேவைவரியானது மத்தியஅரசிற்கானதாக உள்ளது 6.மேலும்CST எனும் மத்தியவிற்பணைவரி அறவே நீக்கம் செய்யப்படுகின்றது 7.பொருட்களை அல்லது சேவைகளை வழங்கும் தொடர்சங்கிலியில் தான் செலுத்தவேண்டிய வரியில் ஏற்கனவே செலுத்தியவரியை சரிசெய்துகொள்ளும் வசதி மதிப்புகூட்டு வரியை போன்று இதில் அறிமுகப்-படுத்தப்டபட்டுள்ளது மத்திய அரசும் மாநிலஅரசுகளுக்கும் ஒன்றாக சேர்ந்த ஒரேயொருவரியான இந்த சரக்குசேவைவரியெனும் ஒரேவரிவிதிப்பின்கீழ் கொண்டுவரப்படுகின்றது இந்த வரிவிதிப்பின்கீழ் விலக்கு அளிக்கப்பட்டவைதவிர மிகுதியுள்ள அனைத்து பொருட்களுக்கும் அல்லது சேவைகளுக்கும் இந்த சரக்குசேவைரி பொருந்தும் அதனோடு இந்த புதிய வரிவிதிப்பு முறையில் Central GST (CGST)வரியை மத்தியஅரசிற்கும் State GST (SGST)வரியை அந்தந்த மாநிலஅரசிற்கு செலுத்தபடவேண்டும் மேலும் இவ்வாறு செலுத்தப்படும் இவ்வாறான வரிகளனைத்தும் தனித்தனி வரியாக கருதப்படும் மேலும் பொருட்களின் அல்லது சேவைகளின் வழங்குவதன் தொடர்சங்கிலியில் ஒருவர் ஏற்கனவே செலுத்திய Central GST (CGST)வரியை தான் செலுத்தவேண்டிய Central GST (CGST)வரியை மட்டுமே கழித்து கொண்டு நிகவரியை செலுத்தவேண்டும் அவ்வாறே ஒருவர் ஏற்கனவே செலுத்திய அந்தந்த மாநிலத்தின் State GST (SGST)வரியை தான் செலுத்தவேண்டிய அந்தந்தமாநில State GST (SGST)வரியை மட்டுமே கழித்து கொண்டு நிகவரியை செலுத்தவேண்டும். மிகமுக்கியமாக தற்போது நடை-முறையில் பொருட்களுக்கான வரியில் பொருட்களுக்கான வரியிலும் சேவைக்கான வரியை சேவைகான வரியில்மட்டுமே கழித்து கொள்ள அனுமதிக்கப்படும் நடைமுறை உள்ளது மேலும் தற்போது மத்தியவிற்பனை வரிசெலுத்திடும்போதுஏற்கனவே செலுத்திய மத்திய விற்பணை வரியை கழித்து கொள்ளும் நடைமுறை அனுமதிக்கப்படுவதில்லை ஆனால் மத்தியஅரசின்Central GST (CGST) அல்லது மாநிலஅரசின் State GST (SGST)வரியை ஒன்றுகொன்று சரிசெய்து கொள்ளமுடியாது என்ற தகவலை மனதில் கொள்க. இந்த புதிய முறையில் ஒரேமாதிரியான வழிமுறைகள் நடைமுறைபடுத்தபடுவதால் அனைவருக்கும் இதனை பயன்படுத்தி செயல்படுத்துவது அல்லது பின்பற்றுவது மிக எளிதாக இருக்கும் அதைவிட இந்த வரிவிதிப்பிற்கான காலமுறைஅறிக்கைகளின் வடிவமைப்பானது குழப்பம் எதுவுமில்லால் ஒரேமாதிரியாக இருக்கும் ஒவ்வொரு வரிசெலுத்துவோருக்கும் வருமானவரி நிறுவனத்தால் வழங்கப்பட்ட பேன் எண்ணுடன் இணைந்த புதிய சுட்டிஎண் இந்த புதிய சரக்கு சேவைவரிக்காக வழங்கப்படும் ஒட்டுமொத்தமாக கூறுவதெனில் தற்போது நடைமுறையில் உள்ள பல்வேறு வகையான அனைத்து வரிகளும் அறவேநீக்கம் செய்யப்பட்டு புதிய சரக்குசேவைவரிஎன்ற ஒரேகுடையின் கீழ் கொண்டுவரபபடுகின்றது இந்தியா முழுவதும் ஒரேஅளவான வரிவிதிப்பு நடைமுறைபடுத்தப்படவுள்ளது இந்த சரக்கு சேவைவரி எனும் புதிய வரிவிதிப்புமுறையில் ஒட்டுமொத்தவரிச்சுமையானது நுகர்வோருக்கு குறைவாக இருப்பதால் பொருட்களுக்கு அல்லது சேவைகளுக்கு கூடுதலான தேவை ஏற்பட்டு இந்திய பொருளாதாரம் வளர்ச்சிபெறும் என்பது திண்ணம்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...