செவ்வாய், 30 அக்டோபர், 2018

யார் விவேகமுள்ள அதிகபுத்திசாலியான மகன்


ஒரு நாட்டில் அரசன் ஒருவன் அரசாட்சி செய்துவந்தான் அவனுக்கு இரு மகன்கள் இருந்தனர் அரசன் மிகநல்ல அரசாட்சியை மக்களுக்கு வழங்கிவந்தான் தன்னுடைய மகன்கள் இருவருக்கும் நல்ல குருவை அமர்த்தி நல்ல பயிற்சி அளித்துவந்தான் அரசன் நோய்வாய்பட்டு படுக்கையாகஇருந்தான் அதனால் தன்னுடைய இருமகன்களில் ஒருமகனுக்கு தனக்கு பிறகு அரசாளுவதற்கு முடிசூட்ட விரும்பினான் அரசன் அதனால் இருமகன்களையும் அழைத்து அரண்மனையிலிருந்த இரண்டு காலியான அறைகளை ஆளுக்கொன்று ஒதுக்கி அவர்கள் விரும்பிய பொருட்களை காலிஇடம் விடாமல் அந்த அறைமுழுவதும் நிரப்பும்படியும் அதற்காக யாரிடமும் ஆலோசனைகளை கேட்ககூடாது என்ற நிபந்தனையுடன் போட்டியொன்றினை நடத்தினான் மறுநாள் அரசன் மூத்தமகனுக்கு ஒதுக்கிய அறைக்குள் சென்ற பார்வையிட்டபோது அறைமுழுவதும் நெல் அறுவடை செய்தபின்மிகுதி கழிவாக இருக்கும் வைக்கோலை நிரப்பியிருந்ததை பார்வையிட்டான் சரி இரண்டாவது மகன் என்ன செய்துள்ளான் என இரண்டாவது அறைக்குசெல்லலாம் என முயலும்போது அந்த அறைபூட்டியிருந்தது கதவை தட்டி திறந்தபோது ஒரே இருட்டாக இருந்தது அரசன் உள்நுழைந்தவுடன் இளையமகன் மெழுகுவர்த்திஏற்றினான் உடன் இருள்நிறைந்த அறையானது முழுவதும் வெளிச்சம் பரவியது அதனை தொடர்ந்து இரண்டாவது மகனே பொருத்தமானவன் என இரண்டாவது மகனுக்கு முடிசூட்டி அரசனாக்கினான்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...