ஞாயிறு, 7 அக்டோபர், 2018

வியாபாரிகளுக்கும் உற்பத்தியாளர்களுக்கும் இந்த சரக்கு சேவை வரியை நடைமுறை படுத்துவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்


பொதுவாக அனைத்து வியாபாரிகளும் உற்பத்தியாளர்களும் இந்த சரக்கு சேவைவரியை நடைமுறை படுத்துவதில் ஆர்வமுடையவர்களாக உள்ளனர் ஆனால் இதனால் தங்களுக்கு என்னென் பயன்கள் கிடைக்கும் என அறிந்து கொள்வதில் அதிக ஆவலாக உள்ளனர்பொதுவாக இதில் ஒருசில நன்மைகள் இருந்தாலும் வேறுசில வகையில் ஏராளமான வித்தியாசங்களும் உள்ளன உற்பத்தியாளர்கள் வியாபாரிகள் ஆகியோர்களுக்கு இதனால் ஏற்படும் நன்மைகள் பற்றிய ஒரு பறவை பார்வை பின்வருமாறு : 1.ஒரே வரி: மத்திய அரசும் மாநிலஅரசுகளும் சேர்ந்து தற்போது 16 க்கும் அதிகமான வகையில் பொருட்களின்மீதும் சேவைகளின்மீதும் வரிகளை விதித்து வசூலிக்கின்றனர் அவையனைத்திற்கும் பதிலாக பொதுவான அடிப்படையில் ஒரேயொரு வரியாக இந்த சரக்கு சேவைவரியை நடைமுறை படுத்தவுள்ளனர் 2இந்தியாமுழுவதும் ஒரே சந்தை: தற்போது மாநிலங்களுக்கு இடையே விற்பணை நடைபெறும்போது மத்திய விற்பணை வரி செலுத்தப்படுகின்றது ஆனால் இந்த வரியை மற்ற மாநிலத்தில் விற்பணையின்போது செலுத்தப்படும் விற்பணைவரியில் சரிசெய்துகொள்ள முடியாது அதனால் விற்பணையாளர்கள் முடிந்தவரை ஒரே மாநிலத்திற்குள் பொருட்களை விற்பணை செய்துவிடுகின்றனர் இதனால் ஒரு மாநிலத்தில் கிடைக்கும் அதி தரமான மிகமுக்கியமான பொருட்கள் மற்ற மாநிலங்களில் கிடைக்காத நிலை தற்போது உள்ளது அதற்கு பதிலாக இந்த சசேவ இன் படி செலுத்தப்படும் வரியானது மற்ற மாநிலத்தில் விற்பணையின்போது செலுத்தப்படும் விற்பணைவரியில் சரிசெய்து கொள்ள முடியும் அதனால் நல்ல தரமான பொருட்கள் நாட்டின் எந்தவொரு பகுதியில் உற்பத்தி செய்யப்பட்டு இருந்தாலும் அது உடனுக்குடன் நாட்டின் வேறு எந்தவொரு பகுதியிலும் விற்பணைசெய்திடும் ஒரு பொதுவான சந்தையாக உருவாகும் 3பொருட்களுக்கும் சேவைகளுக்கும் இடையிலான வேறுபாடு இல்லை: ஒரு சில மூலப்பொருளை நல்லமுடிவு பொருளாக பல்வேறு சேவைகளின் அடிப்படையில் உருமாற்றம் செய்திடும்போது தற்போது உற்பத்தி வரிஎன்றும் சேவை வரியென்றும் விற்பணை வரியென்றும் விதிக்கப்படுவதற்கு பதிலாக இந்த வேறுபாடுகளை தவிர்த்து இந்த சசேவ அறிமுகத்துடன் ஒரேயொரு வரி மட்டும் விதிக்கப்படும் 4விலைப்பட்டியல் தயார்செய்வது எளிது: தற்போது, விற்பணை பட்டியல் தயார் செய்வது எனில் முதலில் பொருட்களின் அடிப்படை விலை அதன்பின் அந்த பொருட்களின்மீது உற்பத்தி வரி , சேவைகள் மீதான சேவை வரி அதனை தொடர்ந்து விற்பணை வரி போன்று ஒவ்வொரு நடவடிக்கையின்போது மிகச்சிக்கலான வகையில் விற்பணை பட்டியல் தயார்செய்யப்படுகின்றது இந்த சசேவ அறிமுகபடுத்தியபின் இந்த விற்பணை பட்டியலானது அடிப்படை விலை சசேவவரி ஆகிய இரண்டுமட்டுமே கொண்ட எளியதாக இருக்கும் 5நுழைவு வரியே இல்லை , ஒரு பொருள் இந்தியாவின் வடபகுதியில் இருந்து தென்னிந்தியாவிற்கு மிக நீண்டதூரம் கடந்து வருகின்றது எனில் லாரி ஓட்டுனர்கள் ஏறத்தாழ 60 சதவிகித நேரம் தம்முடைய வண்டியை நுழைவுவரி செலுத்துவதற்காகவே நிறுத்தி செல்லவேண்டிய அவலநிலையில் தற்போது நாம் வாழ்ந்து வருகின்றோம் அதற்கு பதிலாக இந்த சசேவ நடைமுறைபடுத்தினால் நுழைவுவரி என்பதே இல்லாததால் பொருட்களை கொண்டு செல்லும் நேரம் பேரளவு மிச்சபடும் 6 மத்திய, மாநில அரசுகளின் இடையே பொதுவான விதிவிலக்குகள்: தற்போது வெவ்வேறு மாநிலங்களும் வரி செலுத்துவதில் வெவ்வேறு வகையான விதிவிலக்குகளை வைத்திருப்பதால் பொருட்கள் மாநிலங்களுக்கு இடையே இடமாறும் போது மிகசிக்கலான விதிவிலக்குகளை கையாளவேண்டியுள்ளது அதனால் பொருட்களின் இறுதி விலையும் பல்வேறு மாநிலங்களில் பல்வேறுவகையில் உள்ளன இந்த சசேவ நடைமுறைபடுத்தினால் பொருட்களுக்கான விதிவிலக்குகள் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான விகிதங்களில் இருக்கும் அதனால் பொருட்களின் இறுதி விலையும் ஒரே அளவாக இருக்கம் உற்பத்திவரிஇல்லை: தற்போது நடைமுறையில் உள்ள44079990, 76069110 போன்ற எட்டு எண்களை கொண்டு பொருட்களை வகைப்படுத்தி அதன்மீது இந்திய அரசு விதிக்கும் வெவ்வேறு உற்பத்திவரி என்பது இதன்பின்னர் இருக்காது உற்பத்தியாளர் என்ற கருத்துரு இனிஇல்லை உற்பத்தியாளர் என்ற கருத்துருவானது தற்போது மிகவும் சிக்கலான உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்ற தீர்ப்புகளின் வாயிலாக பெரும்பாலும் வரையறுக்கப்படுகிறது. அதனால் இது சர்ச்சைகுரிய ஒரு குகைபோன்று உள்ளது. அதாவது தற்போது உள்ள மதிப்புக்கூடுதல் என்பதுஎண்ணிக்கையில் அளவிடுவதற்கரியாதகவும் சர்ச்சைக்குரியதாகவும் உள்ளது .உற்பத்தியாளர் மதிப்புகூடுதல்எனும் கருத்துரு இந்த சசேவ நடைமுறைபடுத்துவதால் மாற்றப்படும். வகைபடுத்தபடும் சர்ச்சைகள் இருக்காது: தற்போது பல்வேறு விகிதங்களில் பல்வேறு வரிகள் உள்ளதால் ஏராளமான வகையில் சிக்கல்களும் அதற்கான விதிவிலக்குகளும் உள்ளன என்பதால் இதனை கையாளுவது என்பது மிகுந்த சிக்கலான செயலாகின்றது இந்த சசேவ நடைமுறைபடுத்துவதால் இவ்வாறான சிக்கல் எதுவும் இருக்காது. தேவையில்லாத சட்டங்கள் நீக்கப்பட்டுவிடும்: தற்போது, நுகர்வோர் மீது தாம் பெறும் பொருள் அல்லது சேவைக்காக உற்பத்திவரி ,சேவைவரி விற்பணைவரி என அதிக அளவு விதிக்கப்பட்டு வசூலிப்பதால் அவர்களின் சுமை மிகஅதிகமாகின்றது அதனால் அவைகளால் ஏற்படும் சர்ச்சைகளை தீர்வுசெய்வதற்காக மிகஅதிக கால அவகாசமும் செலவும் ஆகின்றது இவையனைத்தும் இந்த புதிய சசேவ அறிமுகப்படுத்துவதால் இல்லாதாகிவிடும் பொருளிற்கு அல்லது சேவைக்கு வரியில்லாமல் செய்வது எளிது: தற்போதுள்ள நடைமுறையில் ஒரு சில பொருட்களுக்கு அல்லது சேவைகளுக்கு வரிவிலக்கு அளிப்பது ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொருமாதிரியான நடைமுறை பின்பற்றப்படுவதால் ஒரே பொருள் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகையான விற்பணை விலையில் உள்ளது இந்த சசேவ நடைமுறை படுத்தினால் பொருளிற்கான சேவைக்கான வரிவிலக்கு எளிய நடைமுறையாகும் அதனால் நுகர்வோர அதிக பயனடைவர் தற்போது ரப்பர் அல்லது பிசின், காகிதம் அல்லது அட்டை, சாம்பல், போன்ற பல்வேறு பொருட்களையும் அவைகள் எந்தவரிவிகித்தில் கொண்டுவரப் பட்டுள்ளன எவ்வளவு தொகை செலுத்துவது என அடையாளம் காண்பதே மிக தலைவலி பிடித்த செயலாகும் இந்த சர்ச்சைகள் அனைத்தும் புதிய சசேவ அறிமுகப்படுத்துவதால் இருக்காது . முடிவாக இந்த சசேவ ஒரு ஒளிவுமறைவற்ற வரிச்சட்டமாகும் மறைமுகவரிஎதுவும் இல்லாததாதல் நுகர்வோருக்கு குறைந்துவிலையில் பொருட்கள் கிடைக்கும் வருமானவரி மட்டுமல்லாத இந்தசசேவ இலும் போதுமானஅளவிற்கு அரசிற்கு வரியாக கிடைக்கும் மத்திய அரசும் மாநில அரசுகளும் இறுதி விற்பணையின்போது மட்டும் வரியாக பெறுகின்ற நடைமுறை செயலிற்கு வருவதால் பொருளின் விற்பனை விலை குறையும் சுங்கவரி, நுழைவரி உற்பத்திவரி,சேவைவரி, மத்தியவிற்பணைவரி,மாநில விற்பணைவரி போன்ற பல்வேறு வரிகள் அனைத்திற்கும் பதிலாக ஒரேயொரு சசேவ மட்டும் நடைமுறையில் இருக்கும்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...