சனி, 20 அக்டோபர், 2018

ஒரு ஏழை சிறுவியாபாரி ஆனதெவ்வாறு


10 அல்லது 12 வயது உடைய அநாதை சிறுவன் ஒருவன் தொடர்வண்டி நிலையத்தின் மேடைமீது வந்து நின்ற விரைவு வண்டியின் சன்னல் ஓரம் தன்னுடைய வயிற்று பசிக்காக அனைவரிடமும் பொருளுதவி தருமாறு இறஞ்சி கேட்டுகொண்டிருந்தான் அந்த சிறுவனை அழைத்து அவனிடம் ரூ.200/- கொடுத்தவுடன் மிகஅதிர்ச்சியாகநின்று ஐயா இவ்வளவு தொகை தேவையில்லை ஐயா என கூவினான் தம்பி இவ்வாறு பிச்சை எடுக்கவேண்டாம் இந்த தொகையை கொண்டு மாத வாராந்திர இதழ்களை வாங்கி வந்து இதே தொடர்வண்டி பெட்டிக்குள் சென்று விற்றுவிட்டு வா என அறிவுறுத்திய வுடன் அந்த சிறுவனும் உடன் நான் வழங்கிய தொகைக்கு ஏற்ப மாத வாராந்திர இதழ்களை வாங்கி கொண்டு தொடர்வண்டி பெட்டிக்குள் புகுந்து அதனை ரூ.250/-விற்றுவந்தான் என்னிடம் கொண்டுவந்து அந்த பணம் ரூ.250/- முழுவதும் என்னிடம் கொடுத்தான் அதில் என்னுடைய ரூ.200/- ஐ மட்டும் நான் எடுத்துகொண்டு மிகுதி ரூ.50/-அவனிடம் வழங்கி இன்று இனி பிச்சை எடுக்கவேண்டாம்இதனை இன்றைய செலவிற்கு வைத்து கொள் இவ்வாறு பிச்சைஎடுக்கவேண்டாம் அதற்கு பதிலாக இந்த ரூ 1000/- வைத்துகொண்டு இதேபோன்று தினமும் மாத வாராந்திர இதழ்களை வாங்கி வந்து தொடர்வண்டி நிலையத்திற்குள் வந்து நிற்கும் தொடர்வண்டி பெட்டிக்குள் விற்று வரும் வருமானத்தை கொண்டு பிச்சை எடுக்காமல் உழைத்து பிழைத்துகொள் அடுத்தமாதம் இதே தொடர்வண்டியில் நான் வருவேன் அப்போது இந்த தொகை ரூ 1000/- எனக்கு திருப்பி கொடுத்தால் போதும் என அறிவுரை கூறி அனுப்பினேன் தொடர்வண்டியும் தன்னுடைய பயனத்தை துவங்கியது

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...