வியாழன், 11 அக்டோபர், 2018

சரக்கு மற்றும் சேவைவரி நடைமுறைபடுத்திடும் போது அடிக்கடி எழும் கேள்விகளும் அதற்கான பதில்களும் -தொடர்-1


கேள்வி.1.சசேவ என்றால் என்ன?அதுஎவ்வாறு செயல்படும்? பதில்.1.சசேவ என்பது இந்தியாமுழுவதற்கும் செயற்படுத்திடவுள்ள ஒரேயொரு மறைமுக வரியாகும் இது இந்தியாமுழுவதையும் ஒரே சந்தையாக மாற்றவிருக்கின்றது பொதுவாக உற்பத்தியாளரிடமிருந்து நுகர்வோரை சென்றடையும் வரை வழங்கப்படும் பொருட்களுக்கும் சேவைகளுக்கும் ஒருமுறைமட்டும் வரி செலுத்திடுமாறு செய்வதே இந்த சசேவஇன் அடிப்படை குறிக்கோளாகும் இதன்படிபொருட்கள் கடந்துசெல்லும் ஒவ்வொரு படிநிலையிலும் கூடுதலாக ஆக்கப்பட்ட மதிப்பிற்கு மட்டும் வரிசெலுத்தினால் போதும் அதாவது குறிப்பிட்ட நிலையில் வரிசெலுத்துவதற்காக அதற்குமுந்தைய நிலையில் செலுத்திய வரியை கழித்துகொண்டு நிகர வரியை மட்டும் செலுத்தினால் போதும் இதன்மூலம் பொருட்கள் கடந்து செல்லும் ஒவ்வொரு நிலையிலும் அந்நிலையில் கூடுதலாக்கப்பட்ட மதிப்பிற்கு மட்டும் வரிசெலுத்தினால் போதும் என்ற வசதி ஏற்படுத்தபடவிருக்கின்றது இந்த பொருட்கள் கடந்திடும் சங்கிலிதொடரின் கடைசியாக விற்பணையாளர் முந்தைய நிலைகளில் செலுத்திய வரிகளை கழித்து கொண்டு நிகர சசேவ மட்டும் நுகர்வோரானவர் செலுத்தினால் போதும் கேள்வி.2. சசேவ இன் பயன்கள் யாவை பதில் .2.1 தொழிலகங்களுக்கும் வியாபார நிறுவனங்களுக்குமான பயன்கள் இந்த சசேவ நடைமுறை படுத்துவதால் தொழிலகங்களுக்கும் வியாபார நிறுவனங்களுக்குமான பயன்பின்வருமாறு பதிவுசெய்தல் காலமுறை அறிக்கை சமர்ப்பித்தல் வரிசெலுத்துதல் ஆகிய அனைத்து்ம் தகவல்தொழிலநுட்ப வளரச்சியினால் ஒளிவுமறைவற்ற தன்மையில் இணையத்தின்வாயிலாக எளிதாக செயல்படுத்தவிருக்கின்றது இந்தியாமுழுவதும் ஒரேமாதிரியான வரிவிகித அளவும் கட்டமைவும் அமையவுள்ளன தற்போது நடைமுறையிலுள்ள வரியின்மீது வரியாக அதிக சுமையை நுகர்வோரின்மீது ஏற்றாமல் வரிசெலுத்திடும்போது முந்தையநிலையில் செலுத்திய வரியை கழித்துகொண்டு நிகரமாக கூடியமதிப்பிற்கு மட்டும் வரிசெலுத்தினால் போதும் இதனால் பரிமாற்ற செலவுகள் பேரளவு குறைந்து வியாபார உலகானது போட்டிமிகுந்த சந்தையாக மாறவிருக்கின்றது மேலும் உள்ளூரில் உற்பத்தியாகும் பொருளானது குறைந்த வரிவிகிதத்திலும் வெளியூரிலிருந்து கொண்டுவரப்படும் பொருட்களுக்கு கடந்துவந்த நிலையிலான வரியுடன் சேர்ந்து இருப்பதால் உள்ளூரில் உற்பத்தியாகும் பொருள் குறைந்தவிலையில் நுகர்வோருக்கு கிடைக்கவிருக்கின்றது இதனால் உள்ளூரில் உற்பத்தியாகும் பொருள் வியாபாரத்தில் போட்டியிடமுடியாமல்மறைந்து போகும் என்ற பிரச்சினை எழாது பதில். 2.2.மத்திய மாநில அரசுகளுக்கான பயன்கள் தற்போது நடைமுறையில் உள்ள உற்பத்தி வரி ,சேவைவரி ,நுழைவரி ,விற்பணைவரி , மத்திய விற்பணைவரி ,ஆடம்பரவரி என்பன போன்ற பல்வேறு வரிகளும் அவைகளை நிருவகிக்க பல்வேறு கட்டமைவுகளுக்கம் பதிலாக எளிய தகவல்தொழில்நுட்ப வளர்ச்சியினால் இணையத்தின் வாயிலாக ஒரேகுடையின் கீழ் நிருவகிப்படவிருக்கின்றது இந்த புதிய சசேவ விதிப்பின் கட்டமைவினால் தற்போது நடைமுறையில் ஏற்படும் வரியேய்த்தல் வரிதவிர்த்தல் பதிலாக அனைத்து படிமுறைகளும் இணையத்தின் வாயிலாக கட்டமைக்கப்படவிருப்பதால் வரியேய்த்தல் வரிதவிர்த்தல் போன்றவைகள் உருவாகாமல் அரசிற்கு முழுமையாக வரிவருவாய் வந்தசேரும் மேலும் தற்போது நடைமுறையில் வரிகளை வசூலிப்பதற்கான பல்வேறு கட்டமைவிற்கு பதிலாக ஒரேயொரு கட்டமைவாக மாறவிருப்பதால் வரிவசூலிக்கும் செலவு அரசிற்கு மிகவும் குறைவாகமாறும் பதில் .2.3. நுகர்வோர்களுக்கான பயன் தற்போது நடைமுறையில் உள்ள பல்வேறுவகையான வரிவிதிப்பினால் வரியி்ன்மீது வரியாக கூடுதலாக பொருட்களுக்கான விலை செலுத்துவதற்கு பதிலாக எந்தவொரு படிநிலையிலும் கூடுதலான மதிப்பிற்குமட்டும் வரிசெலுத்தபடுவதால் பொருட்களின் விலை குறையும் அதனால் நுகர்வோர்களின் செலவும் குறையும் தற்போது நடைமுறையில் உற்பத்தி வரியென்றும் அதன்மீது விற்பணைவரியென்றும் மாநிலங்களுக்கு இடையே மத்திய விற்பணைவரியென்றும் நுழைவுவரி என்றும் சேவைவரியென்றும் பல்வேறு வரிகள் எதெதற்கு எந்தெந்தவிகிதத்தில் யார்யாருக்கு செலுத்துவது எவ்வளவு செலுத்துவது என்ற குழப்பமான தற்போதைய நிலையினால் வரிதவிர்த்தல் வரிஏய்த்தல் ஆகியநிகழ்வினால் நுகர்வோர்களின்மீது அதிகசுமையேற்றபடுகின்றது இந்த நிலைபுதிய சசேவ இல் அறவே தவிர்க்கப்பட்டு ஒரேயொரு வரிஅதுவும் கூடுதலான மதிப்பிற்குமட்டும் என்பதால் பொருட்களுக்கான விற்பனைவிலை மிகவும் குறைவாக மாறவிருக்கின்றது கேள்வி.3. மாநில மத்திய அரசுகளின் எந்தெந்த வரிகள் இந்த சசேவ இல் ஒருங்கிணைக்கவிருக்கின்றது? பதில்.3.1.மத்திய அரசின் நிலையில் தற்போது நடைமுறையில் உள்ள மத்திய அரசின் உற்பத்திவரி ,கூடுதல் உற்பத்திவரி ,சேவைவரி ,கூடுதல் சுங்கவரி சிறப்பு கூடுதல் சுங்கவரி ஆகியவரிஇனங்கள் இந்த சசேவ இன் கீழ் கொண்டுவரவிருக்கின்றது பதில்.3.2.மாநிலஅரசின் நிலையில் மாநில மதிப்புகூட்டுவரி அல்லது விற்பனைவரி ,பொழுதபோக்குவரி மத்தியவிற்பணைவரி நுழைவுவரி கொல்முதல் வரி ஆடம்பரவரி சூதாட்டவரி லாட்டரி வரி ஆகிய வரிஇனங்கள் இந்த சசேவ இன் கீழ் கொண்டுவரவிருக்கின்றது -தொடரும்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...