வியாழன், 25 அக்டோபர், 2018

ஒருநபர் நிறுமம்(One person company(OPC))-2


நிறுமங்களின்சட்டம் 1956 ஆனது விடைபெற்று புதிய நிறுமங்களின் சட்டம் 2013 என்பதை நடைமுறை படுத்திடும்போது அதற்கான புதியதொரு பரிசாக ஒரு நபர் நிறுமம் (OPC) என்பதை இந்த புதிய நிறுமங்களின் சட்டம் 2013இல் அறிமுகப்படுத்தப்-பட்டுள்ளது . இந்த புதிய நிறுமங்களின் சட்டம் 2013 இன்படி எந்தவொரு தொழில் முனைவோரும் அதிக செலவில்லாமல் மிக குறைந்த முயற்சியில் எளிதாக புதியதான இந்த ஒரு நபர் நிறுமம் (OPC) ஒன்றை உருவாக்க முடியும் இந்த ஒரு நபர் நிறுமம் (OPC) என்பது ஒரு தனியுரிமையாளரின் உரிமைகளுடனும் கடமைகளுடனும் வணிகநிறுவனத்தின் பலண்களையும் ஒருங்கிணைத்து உருவாக்குவதாகும் இதில் ஒரேயொரு நபரே அந்நிறுவனத்தின் உறுப்பினர்ஆவார் அவரே அந்நிறுவனத்தின் இயக்குநராகவும் பங்குதாரராகவும் செயல்படும் உரிமையுடைவராகின்றார். இதன்வாயிலாக மிகச்சரியான ஒன்றிற்குமேற்பட்ட நபர்கள் ஒன்றாக சேர்ந்து வணிக நிறுவனத்தின் பலண்களுடன் புதிய தொழிலை துவங்கிடவேண்டும் எனும் பழைய கருத்தமைவுகள் மறைந்து எந்தவொரு தனிநபரான தொழில்முனைவோரும் தான்விரும்பிய புதிய தொழிலை செய்வதற்காக விரைவாகவும் மிக எளிதாகவும் ஒருநபர்நிறுமத்தை துவங்கி செயல்படுத்திடமுடியும் இந்த ஒருநபர் நிறுமத்தில் சட்டப்படியான பொறுப்புகளும் நிதிபொறுப்புகளும் அவ்வுறுப்பினருக்கு வரையறுக்கபட்டுள்ளது என்பதே இந்த ஒருநபர் நிறுமத்தினுடைய சிறந்த பயனாகும். அதனால் கூட்டான்மை நிறுவனத்தில் அல்லது தனிநபர் நிறுவனத்தில் அதன் உறுப்பினர்களுக்க சொந்த பொறுப்புகளும் உண்டு என்பது போன்றில்லாமல் இந்த ஒருநபர் நிறுமத்தின் அந்த தனிநபரின் பொறுப்புகள் வரையறுக்கப்பட்டு இருப்பதால் நிறுமத்தின் ஒரேயொரு உறுப்பினரான தனிநபர் அதிக கவலையின்றி தன்னுடைய தொழில் வளர்ச்சியில் மட்டும் கவணம்செலுத்தினால் போதுமானதாகும் என்ற சிறந்த வசதி கிடைக்கின்றது சட்டப்படியானவரையறை புதிய நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 2(62) இல் ஒரு நிறுமத்தில்ஒரேயொரு தனிநபர் மட்டுமே உறுப்பினாராவர் என இந்த ஒரு நபர் நிறுமத்தின் (OPC) சட்டப்படியானநிலையை வரையறுக்கின்றது இவ்வாறான ஒரு நபர் நிறுமத்தினை (OPC) நாம் எவ்வாறு துவக்குவது ஏறத்தாழ ஒரு தனியார் வரையறுக்கப்பட்ட(Private limited (Pvt)) நிறுமத்தை துவங்குவதைபோன்று ஆயினும் ஒருசில சிறியமாறுதல்களுடன் இந்த ஒரு நபர் நிறுமத்தினை(OPC) துவக்கிடும் செயல் அமைகின்றது ஒரு நபர் நிறுமம் (OPC) ஆனது தனிநபர் ஒருவர் ரூ.1,00,000/- முதலீட்டுடன் பதிவு செய்யப்படுகின்றது இதில் ஒரேயொரு தனிநபரே உறுப்பினராக பதிவுசெய்துகொள்ளவேண்டும் இந்த ஒருநபர் நிறுமத்தின்Memorandum of Association ஆனது அந்த தனிநபரின் பெயரில்மட்டுமேகண்டிப்பாக இருக்கவேண்டும் அதில் அந்த தனிநபர் இறந்துபோனால் அல்லது செயல்படமுடியாது போனால் அவருக்கு பதிலாக யார் செயல்பட-வேண்டும்என வேறொரு தனிநபரை நியமனதாரராக அல்லது வாரிசுதாரராக குறிப்பிட்டிருக்கவேண்டும் இவ்வாறாக குறிப்பிடப்படும் மற்றொரு தனிநபர் நியமனதாரரை அல்லது வாரிசுதாரரை இந்த உறுப்பினர் விருப்பபட்டால் எப்போது வேண்டுமானாலும் வேறொரு தனிநபர் நியமனதாரரை அல்லது வாரிசுதாரரை நிறுமங்களின்பதிவாளர் வாயிலாக மாற்றிகொள்ளமுடியும் இந்த ஒரு நபர் நிறுமத்தினை (OPC) துவங்கிடும்போது இந்நிறுமமானது 1.வரையறுக்கப்பட்ட பங்குமூலதனம் அல்லது 2.வரையறுக்கப்பட்ட உத்திரவாதம் அல்லது 3.வரையறுக்கப்படாத நிறுமம் ஆகிய மூன்றுவகைகளில் ஏதாவது ஒருவகையில் பதிவுசெய்து கொள்ளலாம் இந்த ஒரு நபர் நிறுமத்தின் (OPC) பெயரை குறிப்பிடும் பெயர்பலகையிலும் அல்லது பெயரினை அச்சிடும்போதும்அல்லது நிறுமத்தின் முத்திரையிலும் அல்லது எங்கெங்கு நிறுமத்தின் பெயரை குறிப்பிடபடுகின்றதோ அங்கெல்லாம் இந்நிறுமத்தின் பெயருடன் பிறையடைப்பிற்குள் தனியார் நிறுமத்தின் பெயருடன்Pvt எனக்குறிப்பிடுவதை போன்று ஒரு நபர் நிறுமம் (OPC)எனக்கண்டிப்பாக குறிப்பிடவேண்டும் தனிநபர் ஒருவர் ஒரேயொரு ஒரு நபர் நிறுமத்தினை (OPC)மட்டுமே துவங்கிட முடியும் மேலும்இந்தியாவில்வாழும்இந்திய குடிமகனாக இருப்பவர்மட்டுமேஇந்த ஒரு நபர் நிறுமத்தினை (OPC) துவங்கிடமுடியும் ஒரு நபர் நிறுமத்தினை (OPC) விதிவிலக்குகள் பின்வருமாறு நிறுமங்களின் சட்டம், விதி ஆகியவற்றின்படி ஒவ்வொரு ஆண்டும் கண்டிப்பாக ஆண்டுபொதுப்பேரவைகூட்டம் நடத்தப்படவேண்டும், சிறப்பு செயல்களுக்கான சிறப்பு பொதுப்பேரவைகூட்டம் நடத்தவேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகள் எதுவும் இந்த ஒரு நபர் நிறுமத்திற்கு (OPC) இல்லை இந்த ஒரு நபர் நிறுமத்தில் (OPC) குறைந்தபட்சம் ஒரு இயக்குநரும் அதிகபட்சம் 15 இயக்குநர்களும் நியமனம் செய்து செயல்படமுடியும் ஆயினும் ஒரேயொரு இயக்குநராக இருந்திடும்போது இயக்குநர்களின் குழுக்கூட்டம் நடத்திடும் விதிமுறையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது மிகமுக்கியமாக ஒரு காலண்டர் ஆண்டில் ஒவ்வொரு காலாண்டிற்கு ஒரு இயக்குநர்களின் குழுக்கூட்டம் என்பதற்கு பதிலாக ஒவ்வொரு அரையாண்டிற்கும் ஒரு இயக்குநர்களின் குழுக்கூட்டம் நடத்தப்படவேண்டும் அதனோடு அவ்வாறான இயக்குநர்களின் இரு குழுக்கூட்டங்களுக்கு இடையேயான காலஇடைவெளியானது 90 நாட்களுக்கு குறைவாக இருக்ககூடாது . இந்த ஒரு நபர் நிறுமத்தினை(OPC) பதிவுசெய்திடும்போது முதல் இயக்குநர்களின் குழு யார்யார் எனக்குறிப்பிடவேண்டிய அவசியமில்லை அதாவது நிறுமத்தின் ஒரேயொரு உறுப்பினரே இயக்குநராக கருதப்படுவார் ஒவ்வொரு நிதியாண்டு முடிவுற்றதும் அடுத்த நிதியாண்டின் செப்டம்பர் 30இற்குள் சமர்ப்பிக்கப்படும் ஆண்டறிக்கையுடன் ரொக்கஓட்ட அறிக்கை(Cashflowstatments) தயார்செய்து இணைக்க வேண்டிய தேவையில்லை மேலும்இவ்வாண்டறிக்கையில் நிறுமச்செயலர் கையொப்பமிட்டு சமர்ப்பிக்கத் தேவையில்லை அதற்குபதிலாக அவ்வுறுப்பினரான இயக்குநர்மட்டும் கையொப்பம்இட்டு சமர்ப்பித்தால் போதுமானதாகும் ஒரு நபர் நிறுமத்திற்கு (OPC) நிறுமங்கள்சட்டப் பிரிவு 101 கூட்டஅறிவிப்பு அனுப்புதல், பிரிவு 102 அக்கூட்டஅறிவிப்பில் அறிவிக்கைள் இணைத்து அனுப்புதல்,பிரிவு 103 கூட்டத்தின் குறைந்தபட்சஉறுப்பினர் கலந்துகொண்டிருக்கவேண்டும் எனும் நிபந்தனை, பிரிவு104 இன்படி அக்கூட்டத்தின் தலைவரை நியமித்தல்,பிரிவு105 கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பதிலாள் நியமித்தல் ,பிரிவு106 கூட்டத்தில் வாக்களிக்கும் உரிமையை கட்டுபடுத்துதல்,பிரிவு107 கைகளை உயர்த்துவதன் வாயிலாக அக்கூட்டத்தில் வாக்களித்தல், பிரிவு 108 மின்னனு வாக்களித்தல் , பிரிவு109 வாக்கிட்டுசீட்டின்வாயிலாக வாக்களிக்க கோருதல் ,பிரிவு 110 அஞ்சலக சீட்டு வாயிலாக கூட்டத்தில் வாக்களித்தல் , பிரிவு 111 கூட்டத்தீர்மாணங்கள் சுற்றுமுறையில் ஏற்புகை செய்தல் போன்றவை விலக்களிக்கப்படுகின்றன. ஒருநபர்நிறுமத்தின் முதலீடு ரூ.50 இலட்சத்தை விட உயர்ந்திடும்போதும் கடந்தமூன்றான்டுகளின் சராசரி ஆண்டு விற்பணை வருமானம் 2 கோடியைவிட உயர்ந்திடும்போதும் இந்த ஒருநபர்-நிறுமத்தினைதனியார் வரையறுக்கப்பட்ட (Pvt) நிறுமமாக மாற்றியமைத்து கொள்ளலாம் ஒரு நபர் நிறுமத்தில் (OPC) நிறுமம் வேறு அந்த நிறுமத்தின் உறுப்பினர் வேறு என உடைமை பிரித்தறியபடுகின்றது ஆனால்தனியுடைமைநிறுமத்தில் நிறுவனமும் தனிநபரும் ஒன்றாகவே கருதப்படுகின்றது அதாவது நிறுமத்தின் பொறுப்புகள் அந்த நிறுமத்திற்கு மட்டுமே அதாவது அதன் உறுப்பினரின் முதலீடு செய்த அளவிற்கு மட்டுமே சாரும் தனியுடைமைநிறுவனத்தில்பொறுப்புகளானது அந்த தனிநபரின் சொந்தபொறுப்பாக கருதப்படும் வரிவிதிப்பானது அந்த நிறுமத்தின் மீது மட்டுமே விதிக்கப்படும் தனியுடைமை நிறுவனத்தில் வரிவிதிப்பு அந்த தனிபரின்மீது விதிக்கப்படும் நிறுமங்களின் சட்டம் விதிகளின் படி பல்வேறு படிவங்களையும் அறிவிக்கைகளையும் நிறுமங்களின் பதிவாளரிடம் ஒருநபர்நிறுமம் கண்டிப்பாக குறிப்பிட்ட காலத்திற்குள் சமர்ப்பிக்கவேண்டும் தனியுடைமை நிறுவனத்தில் அவ்வாறான கட்டுப்பாடுகள்எதுவுமில்லை ஒன்றிற்குமேற்பட்டஅதாவது இருநபர்கள் இருந்தால்தான்கூட்டாளிகளின்நிறுவனமாக அல்லது கூட்டாண்மை நிறுவனமாக துவக்கமுடியும் தனிநபரொருவர் தனியுடைமை நிறுவனமாகத்தான் துவக்கமுடியும்என்ற சிக்கல்ஒழிந்து தனியொரு நபர்கூட தன்னுடைய தொழில்முனைவை இந்த ஒரு நபர் நிறுமத்தில் (OPC) வாயிலாக சிறப்பாக செயல்படமுடியும் என்பது திண்ணம்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...