சனி, 6 அக்டோபர், 2018

அறிந்துகொள்க ஒருங்கிணைந்த சரக்குகளின் சேவைகளின் வரி ( சசேவ) (The Goods and Services tax(GST))


இதுவரையில் (30.06.2017 )நாமெல்லோரும் கலால் வரி,சுங்கவரி, இறக்குமதிவரி ,சேவைவரி, மத்திய விற்பணைவரி, மாநில விற்பணைவரி, நுழைவரி ,பொழுது போக்குவரி என்பனபோன்ற 16இக்கும் மேற்பட்ட வகையான மறைமுக வரிகளை செலுத்தி வந்தோம் இவைகளில் ஒருசில வரிகள் மத்திய அரசாலும் ஒருசில வரிகள் மாநில அரசுகளாலும் விதிக்கப்பட்டு நம்மிடமிருந்து வசூலிக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாது வேவ்வேறு வகையான வரிகள் வெவ்வேறு வகையான அமைப்பால் வெவ்வேறு நிலைகளில் வசூலிக்கப்படுகின்றன இன்றைய கட்டமைவில் ஒருவன் இவ்வாறான அனைத்து வரிகளையும் செலுத்திவிட்டானா எனஉறுதி செய்திடமுடியாது மேலும் இவ்வாறான வரிகளைபற்றிய அனைத்து நிகழ்வுகளையும் நிருவகிப்பது என்பது பெரிய தலைவலி பிடித்த செயலாக உள்ளது அதனால் தற்போதைய கட்டமைப்பில் உள்ள இந்த மறைமுகவரிகள் என்பது மிகவும் சிக்கலான அமைப்பில்உள்ளன என முடிவிற்கு வரவேண்டியுள்ளது ஏனெனில் ஒரு உற்பத்தியாளர் அல்லது ஒருமொத்த-விற்பணையாளர் அல்லது ஒரு சில்லறை விற்பணையாளர் ஆனவர் இவ்வாறான சிக்கலான வரிகளை கையாளுவதற்காக அல்லது கவணித்துகொள்வதற்காக என்று தனியாக ஒரு துறையையே அமைத்து நிருவகிக்க வேண்டியுள்ளது அதனால் இவ்வாறான சிக்கலான வரிசையாகஉள்ள வெவ்வேறு வகையான மறைமுக வரிகளை ஒழுங்குபடுத்தி ஒற்றையான வரியமைவாக நடைமுறை-படுத்தபடுமா வென இதுவரையில் நாமனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தோம் இறுதியில் ஒருவழியாக இந்த ஒருங்கிணைந்த சரக்குகளும் சேவைகளுக்குமான வரி (சசேவ) என்பது தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது இது இந்திய நாட்டின் பல்வேறு மாநில அரசுகளாலும் இந்திய அரசாலும் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படுகின்ற மிகவும் சிக்கலான குழப்பமான பல்வேறு வகையாக உள்ள வரிகளுக்கு பதிலாக அல்லது மாற்றாக இந்தியா முழுவதும் ஒரேமாதிரியாக ஒரேவழிமுறையில் மறைமுகவரியை வசூலிப்பதற்கான ஒரு சிறந்த வரிஅமைவாக இந்த ஒருங்கிணைந்த சரக்குகளும் சேவைகளுக்குமான வரி(சசேவ) என்பது விளங்க வுள்ளது மேலும் முதலாவதாக தற்போது நடைமுறையிலுள்ள மதிப்புகூட்டுவரியின் அடிப்படையில் ஒவ்வொரு மாநில அரசும் தத்தமது விவகார எல்லைக்குள் அந்தந்த அரசின் விருப்பபடி எவ்வளவு வேண்டுமானாலும் வரிவிதித்து அவ்வரியைவசூல் செய்துகொள்ளலாம் என உள்ளது இரண்டாவதாக சேவைவரியானது இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலு்ம் மத்திய அரசால் நேரடியாக வசுலிக்கப்-படுகின்றது ஆனால் இதில் மாநில அரசிற்கு பங்கேதும் கிடையாது ஆகிய இரு தப்பித்து கொள்ளும் வழி தற்போதைய நடைமுறையில் உள்ளன அதனை சரிசெய்து இந்தியாமுழுவதும் ஒரேமாதிரியான ஒரேவழிமுறையில் மறைமுக வரியை விதிக்கவும் அதனை வசூலிக்கவும் கூடிய திறனுடையதாக இந்த சசேவ இருக்கபோகின்றது இந்த சசேவ ஒன்றும் புதிய வரிஅன்று இது ஏற்கனவே கனடா நாட்டில் 1905 இலிலேயே நடைமுறை படுத்தபட்டு வருகின்றது மேலும் உலகில் தற்போது ஏறத்தாழ 140 நாடுகளில் இந்த சசேவ தற்போது நடைமுறையில் உள்ளது ஆகிய செய்திகளையும் மனதில் கொள்க எதுஎப்படியிருந்தாலும் இந்த சசேவஇன் தொழில்நுட்ப விவரங்களுக்குள் நாம் மூழ்கிவிவரங்களை அறிந்து கொள்வதற்குமுன் இந்த சசேவ என்பது ஏன் ஒரு பெரிய புரட்சிகரமான வரிவிதிப்புமுறை என தெரிந்துகொள்வது மிகமுக்கியமானசெயலாகும் அதன்படி நாம் பின்வரும் எடுத்துகாட்டின் வாயிலாக தெரிந்து கொள்வதற்காக முதலில்சசேவ விதிப்பிற்கு முந்தைய நிலையில் தற்போது நடைமுறையில் உள்ள வரிகணக்கீடு அட்டவணை 1 இல் உள்ளது இது தற்போது வசூலிக்கபடுகின்ற வரிகளின் மிகச்சரியான வரிவிகித கணக்கீடு அன்று இருந்தபோதிலும் இது உத்தேசமாக தற்போது மதிப்புகூட்டுவரி எவ்வாறு கணக்கிடப்படுகின்றது என எளிதாக சசேவ வை புரிந்து அறிந்து கொள்வதற்குமான ஒரு எடுத்துகாட்டு மட்டுமே என்ற செய்தியை மனதில் கொள்க In this figure:
1 அட்டவணை 1 நடைமுறையில் உள்ள சசேவ முந்தைய வரிவிதிப்புமுறை அ)ஒரு உற்பத்தியாளர் மூலப்பொருட்களை விலைஇல்லாமல் தம்முடைய நிறுவனத்திற்காக கொள்முதல் செய்கின்றார் எனக்கொள்வோம் பின்னர் அவர் தன்னுடைய நிறுவனத்தில் இந்த மூலப்பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்திடும் முடிவுப்பொருளாக உருவாக்கி அந்த பொருளிற்கு ரூபாய் 100/- என அடக்க-விலையாக மதிப்பிடுகின்றார் என்றும் இந்த பொருளிற்கான விற்பணைவரி 10% சதவிகிதம் எனவும் கொள்வோம் அதனால் அவர் ரூபாய் 110/- இற்கு மொத்த-விற்பணையாளரிடம் இந்தபொருளை விற்பணை செய்கின்றார் இங்கு விற்பணை வரி அல்லது மதிப்புகூட்டு வரி ரூபாய் 10/- ஆகும் ஆ)அதனை தொடர்ந்து மொத்தவிற்பணையாளர் தாம் கொள்முதல் செய்த ரூபாய் 100/- இக்கான பொருளின் மீது ரூபாய் 50/- மதிப்புகூட்டி (அதாவது மொத்தவிற்பணையாளரின் அடக்க விலை ரூபாய் 150/- கழிக்க உற்பத்தியாளரின் அடக்கவிலைரூபாய் 100) சில்லறை விற்பணயாளருக்கு ரூபாய் 150/- என்ற அடக்கவிலைநிர்ணயித்து அந்த பொருளை விற்பணை செய்கின்றார் இங்கும் அந்த பொருளிற்கான மதிப்புகூட்டு வரிவிகிதம் 10% சதவிகிதம் எனகொள்வோம் அதனால் அவர் இந்த மதிப்புகூட்டு வரியையும் சேர்த்து மொத்தம் விற்பணை விலை ரூபாய் 165/- இக்கு (இங்கு விற்பணை விலையானது அடக்கவிலை ரூபாய் 150/- கூட்டுக மதிப்பு கூட்டு வரி ரூபாய் 15/-) இந்த பொருளை விற்பணை செய்கின்றார் இ)மூன்றாவதாக சில்லறை விற்பணயாளர் மொத்தவிற்பணையாளரிடமிருந்து ரூபாய் 150 அடக்கவிலையின் மீது ரூபாய் 70/- மதிப்புகூட்டி (அதாவது சில்லறை விற்பணையாளரின் அடக்கவிலை ரூபாய் 220/- கழிக்க மொத்த விற்பணையாளரின் அடக்கவிலை ரூபாய் 150/- ) மொத்தம் ரூபாய் 220/-என அடக்கவிலையாக பொதுமக்களுக்கு விற்பணைசெய்கின்றார் இங்கும் மதிப்பகூட்டுவரிவகிதம் 10% சதவிகிதம் எனக்கொள்வோம் அதனால் இந்த மதிப்புகூட்டுவரியும் சேர்த்து மொத்தம் விற்பணைவிலைரூபாய் 242/- இக்கு (இங்கு விற்பணைவிலையானது சில்லறை விற்பணையாளரின் அடக்கவிலை ரூபாய் 220/- கூட்டுக மதிப்பு கூட்டு வரி ரூபாய் 22/-) பொதுமக்களாகிய நுகர்வோருக்கு அந்த பொருளை விற்பணை செய்கின்றார். இதன்மூலம் நாம் இந்த விற்பணை சங்கிலியின் முடிவில் விற்பணை விலையானது ரூபாய் 242/- என்றும் மதிப்புகூட்டு வரியானது ரூபாய் 47/- என்றும் அதாவாது ஏறத்தாழ 19.5% சதவிகிதம் என தெரிந்து கொள்ளலாம் . ஏன் இவ்வாறு ஒரு பொருளிற்கான மதிப்புகூட்டு வரிமட்டும் இவ்வளவு அதிகமாகின்றது ? ஏனெனில் இந்த விற்பணை-சங்கிலியின் ஒவ்வொன்றின் முடிவிலும் உள்ள மதிப்புகூட்டுவரியையும் சேர்த்த மொத்தவிலைக்கே அடுத்தநிலையில் மதிப்புகூட்டுவரி விதிக்கப்படுகின்றது அதாவது மதிப்பு கூட்டியதற்கு மட்டுமல்லாது ஏற்கனவே செலுத்திய வரிக்கும் சேர்த்து அதாவது வரிக்கு வரிஎன்றவாறு கூட்டுவரியாக விதிக்கப்பட்டு வசூலிக்கபடுகின்றது நுகர்வோரின் கூடுதலான இந்த ரூபாய் 15/- எனும் வரிச்சுமையானது பின்வருமாறு மொத்தவிற்பணையாளர் ,உற்பத்தியாளர் ஆகியோர்களுக்கு செலுத்திய அடக்கவிலையின் மதிப்புகூட்டுவரியை மீண்டும் ரூபாய் 10என வசூலிக்கின்றார் பின்னர் சில்லறை விற்பணையாளர் உற்பத்தியாளரின் அடக்கவிலைக்கும் மொத்த-விற்பணையாளரின் மதிப்புகூட்டிய விலைக்கும் சேர்த்து மீண்டும் ஒருமுறை நுகர்வோரிடமிருந்து ரூபாய் 15/- உம் சேர்த்து ஆகமொத்தம் ரூபாய் 25/- ஐ கூடுதலாக வசூலிக்கின்றார் வேறுமுறையில் கூறுவதெனில் உற்பத்தியாளரின் அடக்கவிலைமீது ரூபாய்100/- இக்கு விற்பணைவரியாக ரூபாய் 10/- உடன் இந்த உற்பத்தியாளரின் விற்பணைவரியான ரூபாய் 10/-இக்கு வரிமீது வரியாக ரூபாய்1/- என்றும் மொத்த விற்பணையாளரின் நிகர அடக்கவிலையின் மீது ரூபாய் 40/-இக்கு வரியாக ரூபாய் 4/- ஆகமொத்தம் வரிக்கு வரியாக மட்டும் ரூபாய் 15/- வசூலிக்கப்படுகின்றது இங்கு மொத்தவிற்பணையாளர் தாம் உற்பத்தியாளருக்காக கூடுதலாக செலுத்திய மதிப்புகூட்டுவரியை சில்லறை விற்பணையாளரின் தலையில் சுமத்துகின்றார் அதனைதொடர்ந்து சில்லறை விற்பணையாளர் உற்பத்தியாளருக்காக கூடுதலாக செலுத்திய மொத்தவிற்பணையாளரின் வரியுடன் மொத்த விற்பணையாளருக்காக கூடுதலாக செலுத்திய மதிப்புகூட்டுவரியையும்சேர்த்து நுகர்வோர் தலையில் சுமத்துகின்றார் அதாவதுஏற்கனவே செலுத்தபட்ட வரிக்கும் சேர்த்து வரியாக இறுதியில் நூகர்வோர் கூடுதலாக செலுத்துகின்றார் இந்த விற்பணை சங்கிலியில் கூடுதலான நபர் சேர்ந்து சங்கிலியானது நீளமானால் அதற்கேற்ப நுகர்வோரின் வரிச்சுமையும் கூடுதலாகின்றது இப்போது இரண்டாவது அட்டவணையை பார்ப்போம் இந்த இரண்டாவது அட்டவணையானது இந்தியாவில் இந்த சசேவ அறிமுகபடுத்தி நடைமுறைபடுத்தபட்டால் அதே முதல் எடுத்துகாட்டின் விற்பணைசங்கிலியின் அதே விற்பணை வரிவிகித்தில் அல்லது சசேவ விகிதத்தில் ஆனால் வரிச்சுமை முழுவதுமாக மாறியமைவதை காணலாம்
2 அட்டவணை 2 சசேவ விகிதம் அறிமுகபடுத்தி நடைமுறைபடுத்தினால் அ) ஒரு உற்பத்தியாளர் மூலப்பொருட்களை விலைஇல்லாமல் தம்முடைய நிறுவனத்திற்காக கொள்முதல் செய்கின்றார் எனக்கொள்வோம் பின்னர் அவர் தன்னுடைய நிறுவனத்தில் இந்த மூலப்பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்திடும் பொருளாக உருவாக்கி அந்த பொருளிற்கு ரூபாய் 100/- என மதிப்பிடுகின்றார் இந்த பொருளிற்கான விற்பணைவரி 10% சதவிகிதம் என கொள்வோம் அதனால் அவர் ரூபாய் 110/- இற்கு மொத்த விற்பணையாளரிடம் விற்பணை செய்கின்றார் இங்கு மதிப்புகூட்டு வரி ரூபாய் 10/- ஆகும் ஆ)அதனை தொடர்ந்து மொத்தவிற்பணையாளர் தாம் கொள்முதல் செய்த ரூபாய் 100/- இக்கான பொருளின் மீது ரூபாய் 50/- மதிப்புகூட்டி (அதாவது மொத்தவிற்பணையாளரின் அடக்க விலை ரூபாய் 150/- கழிக்க உற்பத்தியாளரின் அடக்கவிலைரூபாய் 100/-) சில்லறை விற்பணயாளருக்கு ரூபாய் 150/- என்ற அடக்கவிலையில் அந்த பொருளை விற்பணை செய்கின்றார் இங்கும் அந்த பொருளிற்கான மதிப்புகூட்டு வரிவிகிதம் 10% சதவிகிதம் எனகொள்வோம் அதனால் அவர் மதிப்புகூடுதல் செய்தரூபாய் 50/- மதிப்பிற்கு மட்டும் வரியாக ரூபாய் 5/- சேர்த்து மொத்தம் விற்பணை விலை ரூபாய் 155/- இக்கு (இங்கு விற்பணைவிலையானது அடக்கவிலை ரூபாய் 150/- கூட்டுக மதிப்பு கூட்டு வரி ரூபாய் 5/-) சில்லறை விற்பணையாளருக்கு விற்பணை செய்கின்றார் இ)மூன்றாவதாக சில்லறை விற்பணயாளர் மொத்தவிற்பணையாளரிடமிருந்து கொள்முதல் செய்தபொருளின் அடக்கவிலைரூபாய் 150/- உடன் மீது ரூபாய் 70 /- மதிப்புகூட்டி (அதாவது சில்லறை விற்பணையாளரின் அடக்கவிலை ரூபாய் 220/- கழிக்க மொத்த விற்பணையாளரின் அடக்கவிலை ரூபாய் 150/- ) ரூபாய் 220/- என அடக்க விலையாக பொதுமக்களுக்கு விற்பணைசெய்கின்றார் இங்கும் மதிப்புகூட்டுவரிவகிதம் 10% சதவிகிதம் எனக்கொள்வோம் அதனால் இந்த கூடுதலான மதிப்பிற்குமட்டும் மதிப்பு கூட்டுவரி ரூபாய் 7/- சேர்த்து மொத்தம் இறுதி விற்பணைவிலைரூபாய் 227/- இக்கு (இங்கு விற்பணைவிலையானது சில்லறை விற்பணையாளரின் அடக்கவிலை ரூபாய் 220/- கூட்டுக மதிப்பு கூட்டு வரி ரூபாய் 7/-) பொதுமக்களாகிய நுகர்வோருக்கு விற்பணை செய்கின்றார் இங்கு மொத்த வரிச்சுமை ரூபாய் 22/- மட்டுமே ஆக முந்தைய வரிச்சுமைக்கும் ரூபாய்47/- தற்போதையவரிச்சுமைக்கும் ரூபாய்22/- வித்தியாசம் ரூபாய் 25/- ஆகும் அதனால் பொருளின் இறுதி விற்பணை விலையானது ரூபாய் 242/- இக்கு பதிலாக ரூபாய் 227 /-ஆக நுகர்வோருக்கு குறைவாக கிடைக்கின்றது அதனால் இந்த சசேவ அறிமுகபடுத்துவதால் பொருளின் விற்பணை விலை குறைந்து நுகர்வோரின் வாங்கும் திறன் கூடுகின்றது இந்நிலையில் பொதுவாக இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள மறைமுகவரி அமைவு எவ்வாறு அமைந்துள்ளது என நாமெல்லோரும் கண்டிப்பாக தெரிந்து கொள்வது நல்லது இந்தியாவானது கூட்டாட்சியின் அடிப்படையில் நிருவகிக்கப்படுகின்றது அதனால் வரிவிதி்ப்பின் உரிமையானது மத்திய அரசிற்கும் மாநில அரசுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது அதனை தொடர்ந்து இந்த மத்திய மாநில அரசுகளானது சில்லறை விற்பணையாளரகளால் உற்பத்தி பொருட்கள் விற்பணை செய்திடும்போது உற்பத்தியாளரோ அல்லது மொத்த விற்பணையாளரோ தாம் செலுத்திய உள்ளீட்டு மதிப்புக்கூட்டு வரியை கழித்து கொண்டு நிகரவரியை மட்டும் செலுத்தினால் போதும் என்றும் எவ்வளவு தொகை கழித்து கொள்வது எந்த விகிதத்தில் வரிவிதிப்பது என்ற உரிமையின் அடிப்படையில் செயல்படுகின்றன ஏராளமான நிகழ்வுகளில் மாநில அரசுகள் சில்லறை விற்பணையாளரகளால் உற்பத்தி பொருட்களை விற்பணை செய்திடும்போது உற்பத்தியாளரோ அல்லது மொத்த விற்பணையாளரோ தாம் மற்ற மாநில அரசுகளுக்கு செலுத்திய உள்ளீட்டு மதிப்புக்கூட்டு வரியை கழித்து கொண்டு நிகரவரியை மட்டும் செலுத்தினால் போதும் என்பதை ஏற்க மறுத்துள்ளன இதற்காக ஏராளமான நீதிமன்ற தீர்ப்பகளும் வழக்குகளும் கணக்கிடமுடியாத அளவில் உள்ளன வேறு சில நிகழ்வுகளில் மாநில அரசுகள் உற்பத்தி பொருட்களை சில்லறை விற்பணையாளரகளால் விற்பணை செய்திடும்போது உற்பத்தியாளரோ மொத்த விற்பணையாளரோ தாம் மத்தியஅரசுிற்கு செலுத்திய உள்ளீட்டு மதிப்புக்கூட்டு வரியை கழித்து கொண்டு நிகரவரியை மட்டும் செலுத்தினால் போதும் என்பதை ஏற்க மறுத்துள்ளன ஆக இந்த இரு சூழலிலும் நுகர்வோர் மட்டும் அதிக வரிச்சுமையை ஏற்கவேண்டிய நிலைக்கு தள்ளபடுகின்றனர் ஏனெனில் சில்லறை விற்பணையாளரின் மதிப்பு கூட்டப் பட்ட அளவிற்கு மட்டும் வரி செலுத்தப்-படுவதில்லை ஆனால் ஏற்கனவே செலுத்திய வரிக்கும் சேர்த்து வரிக்கு வரியாக கூட்டுவரியாக விதிக்கப்பட்டு கூடுதலாக இறுதி விற்பணைவிலை மிக அதிக சுமையாக நுகர்வோர்மீது சுமத்தபடுகின்றது இந்த எடுத்துகாட்டின் சூழலில் சில்லறை விற்பணையாளரிடம் இறுதியாக வரியானது ரூபாய் 22/- ஆகும் ஆனால் வரியானது ரூபாய் 7/- இக்கு பதிலாக கூடுதலான வரிச்சுமையும் சேர்த்து நுகர்வோர்மீது சுமத்தபடுகின்றது சில நேரங்களில் ஒருசில பொருட்களுக்கு ஏற்கனவே செலுத்திய வரி கழித்துகொள்ள அனுமதிக்கபடுகின்றது ஆனால் வேறுசில பொருட்களுக்கு இதே அனைத்து நடைமுறைகளும் பின்பற்றியிருந்தாலும் அவைகளுக்கு ஏற்கனவே செலுத்திய வரியை கழித்து கொள்ள அனுமதிப்பதில்லை மேலும் வெவ்வேறு மாநில அரசுகளானது தத்தமது சொந்த வரிவிதிப்பதற்கான விதிகள் வழிகாட்டுதல்கள் ஆகியவற்றை பின்பற்றுவதால் வெவ்வேறு நிலைகளில் சில்லறை விற்பணையாளர் , மொத்த விற்பணையாளர் , உற்பத்தியாளர் ஆகியோர் தாம் ஏற்கனவே மற்ற அரசுகளுக்கு செலுத்திய மதிப்புகூட்டு வரியை தங்களுடைய வரியை செலுத்தும் போது கழித்து கொள்வதை ஏற்பதற்காக உருவாக்கி நடைமுறை படுத்துகின்றன அதனால் சில்லறை விற்பணையாளர் , மொத்த விற்பணையாளர் , உற்பத்தியாளர் ஆகிய அனைவரும் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளின் மதிப்புகூட்டு வரி தொடர்பான அனைத்து விதிகள் வழிகாட்டுதல்கள் வெவ்வேறு நிலைகள் ஆகியவற்றை முழுவதும் ஐயம் திரிபற தெரிந்து அறிந்து வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் இதற்கென தனியாக அமைப்பொன்றை வைத்து பராமரிப்பு செய்தால்தான் மற்ற மாநில எல்லைக்குள் சென்று தம்முடைய வியாபாரி நடவடிக்கையை செயற்படுத்திடமுடியும்என்ற நிலை தற்போதைய வரிவிதிப்புகளில் உள்ளது அதனால் இந்த வரிவிதிப்பை கையாளும் அமைப்பிற்கான கூடுதல் செலவானது உற்பத்தியாளர்களால் உற்பத்தி செய்யப்படும் பொருளின் அடக்க-விலையுடன் சேர்த்து அதன்விலைஉயர்வதற்கும் அவர்களுடைய இலாபவிகிதம் குறைவாக இருப்பதற்கும் ஏதுவாகின்றது அதுமட்டுமல்லாமல் மாநில அரசுகளும் இந்த வரிவிதிப்பு வரிவசூலித்தல் வரிவிதிப்பு தொடர்பான வழக்குகள் அந்த வழக்குகளால் ஏற்படும் பிணக்குகளை தீர்வுசெய்தல் ஆகிய நிகழ்வுகளை கையாளுவதற்கென ஏராளமான செலவில் தனியான தொரு துறையை கட்டமைவு செய்து நிருவகிக்க வேண்டியுள்ளது இவ்வாறான அதிக சுமையுடைய அதிக குழப்பமான தெளிவற்ற சூழலும் கொண்ட அமைவாக தற்போதைய மறைமுகவரிச்சூழல் இருக்கின்றது இதனால் சில்லறை விற்பணையாளர், மொத்த விற்பணையாளர் , உற்பத்தியாளர் ஆகியோரில் யாராவது ஒருவர் வரியை செலுத்தாது விட்டு வி்ட்டார்களா் அல்லது இவர்கள் சரியாக செலுத்தினார்களா என எப்போதும் மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டிய சூழலில் அரசின் கட்டமைவு இருக்கவேண்டிய நிலைக்கு தள்ளபடுகின்றது இவ்வாறான சிக்கல்களையும் சிரமங்களையும் குழப்பங்களையும் தவிர்த்து வரிசெலுத்துவதும் வரிவசூலிப்பதும் எளிமையான இந்தியா முழுவதும் ஒரேமாதிரியான வரிவிதிப்பிற்கான விதிகள் வழிமுறைகள் வரிவிகிதங்கள் அமைந்துள்ளதே இந்த சசேவ ஆகும் மேலும் வரிநிருவாக அமைவானது குறிப்பிட்ட ஒருவர் மிகச்சரியாக வரிசெலுத்தியுள்ளார் என எளிதாக சான்றளிக்கபடவிருக்கின்றது அதனை தொடர்ந்து இறுதி நுகர்வோருக்கு வரிச்சுமை குறைந்து உற்பத்தி பொருட்களின் விலையும் குறையும் அதனால் நுகர்வோரின் வாங்கும் திறன் கூடுதலாகி உற்பத்தியாளர்கள் அதிக பொருட்களை உற்பத்தி செய்திடவேண்டிய நிலையும் கூடுதலான பொருட்கள் உற்பத்தி யாகி விற்பணையாவதால் அரசுகளுக்கு கூடுதலான வரிவருமானமும் கிடைக்கும் உண்மையில் நுகர்வோராகிய பொதுமக்கள் ,சில்லறை விற்பணையாளர் , மொத்த விற்பணையாளர் , உற்பத்தியாளர் மாநில அரசுகள் மத்திய அரசு ஆகிய அனைவருக்கும் இந்த சசேவ மிகப்பெரிய உதவியாக அமையும் இந்த சசேவ ஆனது ஒரு பொருளின் அல்லது சேவையின் நுகர்வின் அடிப்படையான வரியாகும் இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பொருள் அல்லது சேவையானது கைமாறும்போது விற்பணை சங்கிலியின் ஒவ்வொரு படிமுறையிலும் ஏற்படும் கூடுதலான மதிப்பிற்குமட்டும் என்ற அடிப்படையில் செயல்படவிருக்கின்றது வேறுவகையில் இந்த சசேவ பற்றி கூறுவதெனில் ஒருவர் தாம் கொள்முதல் செய்திடும்போது செலுத்திய உள்ளீட்டு வரியை தம்முடைய பொருளை விற்பணைசெய்திடும் போது செலுத்த வேண்டிய வரியில் கழித்து நிகரவரியை மட்டும் செலுத்தினால் போதுமானதாகும் அதானல் ஒரு உற்பத்தியாளர் மொத்த விற்பணையாளர் சில்லறை விற்பணையாளர் ஆகியோர் சதேவ இல் விதிக்கப்பட்ட வரியை கண்டிப்பாக செலுத்தவேண்டும் ஆனால் இவர்கள் ஏற்கனவே செலுத்திய வரியை அதற்கான வழிமுறையில் கழித்துகொள்ளலாம் ஆனாலும் இந்த விற்பணைசங்கிலியின் கடைசியாக உள்ள பொதுமக்களாகிய நுகர்வோர் இறுதியில் அனைத்து நபர்களின் வரிகளையும் சேர்த்து செலுத்தவேண்டும் இந்த சசேவ ஒரு மறைமுக வரி அதாவது ஒரு உற்பத்தியாளர் மொத்த விற்பணையாளர் சில்லறை விற்பணையாளர் ஆகியோர் சதேவ விதிக்கப்பட்ட வரியை ஏற்கனவே செலுத்தியிருந்தால அதனை கழித்து கொண்டு செலுத்திவிடுவார்கள் ஆனால் இதனை மற்றவர்களிடமிருந்து அந்த பொருளின் விற்பணையின் போது அல்லது சேவையின்போது வசூலித்துவிடுவார்கள் தொடர்ந்து விற்பணைசங்கிலியின் இறுதியில் உள்ள பொதுமக்களாகிய நுகர்வோர் இந்த வரிசுமையை செலுத்தவேண்டும் ஆயினும் நடப்பிலுள்ள வரிவிதிப்பிலும் இதே போன்றுதான் மற்றவர்களிடமிருந்து அந்த பொருளின் விற்பணையின் போது அல்லது சேவையின்போது இந்த மறைமுக வரிகளை வசூலித்துவிடுவார்கள் ஆயினும் விற்பணை சங்கிலியின் இறுதியில் உள்ள பொதுமக்களாகிய நுகர்வோர் வரிக்கு வரியாக கணக்கிட்டு இந்த வரிசுமையை ஏற்று கூடுதலாக செலுத்தவேண்டியுள்ளது.ஆனால் இந்த புதிய சசேவ இல் வரிக்கு வரியாக கணக்கிடப்படுவதில்லை அதற்கு பதிலாக அப்பொருளின் கூடுதல் மதிப்பிற்கு மட்டுமே வரிகணக்கிடப்பட்டு எளிமை படுத்தப்பட்டு வசூலிக்கப்படுகின்றது அதனால் பொருளின் இறுதி விற்பணை விலை மிகக்குறைவாகின்றது ஒட்டுமொத்த சாராம்சமாக கூறவேண்டுமெனில் தற்போது நடைமுறையில் உள்ள உற்பத்தி வரி மதிப்புக்கூட்டுவரி ஆகிய வற்றின் மறுபெயரே இந்த சசேவ ஆகும் ஆனால் அவ்வாறான குழப்பமும் சிக்கலும் வெவ்வேறு அளவிலும் இல்லாத தெளிவான எளிய நடைமுறையில் ஒரேமாதிரியான அளவில் இந்த சசேவ விதிக்கபடுவதாகும் என்ற அடிப்படை செய்தி மனதில் கொள்க

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...