சனி, 13 அக்டோபர், 2018

நம்முடைய தனித்தன்மையே நம்மை பாதுகாத்திடும் என நம்பிக்கையுடன் வாழ்ந்திடுவோம்


ஒரு காட்டில் ஏராளமான மரங்கள் இருந்துவந்தன அனைத்தும் மகிழ்ச்சியுடன் இருந்துவந்தன அதில் ஒரேயொரு மரம் மட்டும் வளைந்தும் நெளிந்தும் பார்ப்பதற்கு அருவெறுப்பு அடையுமாறான தோற்றத்துடன் இருந்தது மற்றமரங்கள் அனைத்தும் இதனுடைய தோற்றத்தை பார்த்து ஏளனம் செய்து கின்டல் செய்து வந்தன அதனால் அந்த மரம் மட்டும் மிகவும் அவமான மனநிலையில் வாழ்ந்துவந்தது அதனோடு நம்முடைய வாழ்வே அவ்வளவுதான் என கூனிகுறுகி வாழ்ந்து வந்தது அந்த மரம் இந்நிலையி்ல் மரம் வெட்டுபவர்கள் குழுவாக அந்த காட்டிற்கு வந்துஅனைத்து மரங்களையும் வெட்டி எடுத்து சென்று கொண்டிருந்தனர் இந்த வளைந்து நெளிந்தும் அருவெறுப்பான தோற்றத்தை பார்த்துவிட்டு இந்த மரத்தினை மட்டும் வெட்டாமல் விட்டுவிட்டு சென்றனர் கிண்டலும் கேலியும் பேசிய மரங்கள் அனைத்தையும் மரம் வெட்டுபவர்கள் வெட்டியெடுத்து சென்றனர் ஆனால் கிண்டலுக்கு ஆளான மரத்தை மட்டும் வெட்டவில்லை நீண்டநாட்கள் உயிர்வாழ்ந்தது அதனால் நம்முடைய தனித்தன்மையே நம்மை பாதுகாத்திடும் என நம்பிக்கையுடன் வாழ்ந்திடுவோம்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...